Thursday, April 18, 2013

அறியா மக்கள்..... ஆழிப்பேரலை ஆனால்.........!


பெங்களூருல குண்டு வெடிச்சு நாடே கொந்தளிப்பில கிடக்குதுங்க. அமெரிக்கா பாஸ்டன் நகரில வெடிச்ச குண்டோட மிச்சம்தான் பெங்களூரல பிரதிபலிச்சிருக்குன்னு ஒரு பேச்சு அடிப்பட்டுக்கிட்டு இருக்கு.

நண்டு கடிச்சாவே நம்மாளு நாலு காதம் பின்னங்காலு பிடரியில அடிக்க ஓடுவானுங்க. குண்டு வெடிச்சா என்ன கதை ஆகுமுங்க.

குண்டு வெடிச்சது பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்துக்கு பக்கத்தில... இந்த குண்டு வெடிப்போட இலக்கு நாங்கதான்னு பாரதிய ஜனதா கட்சி பதட்டமா அறிக்கை விட்டுருக்கு.



குண்டு வெடிப்பில அரசியல் ஆதாயம் தேடுற அசிங்கமான காரியத்தில் பாரதிய ஜனதா கட்சி இறங்கி இருக்குன்னு காங்கிரஸ்கட்சி கண்டனக் கணைகளை பாய்ச்சி இருக்கு.

பொது மக்களே... நீங்க எவ்வளவு காலத்துக்குத்தான் புரியாத புளியமரமா நிக்கப்போறீங்க.

இவங்க ரெண்டு பேருக்குமே குண்டு வெடிச்சதப்பத்தி கவலை இல்லை. இது யாருக்கும் ஆதாயமாக போயிடக் கூடாதுங்கிறதுதான் பொச்சரிப்பு.

குண்டு வெடிப்பு நம்ம நாட்டு பாதுகாப்புக்கு ஏற்பட்டிருக்கிற பயங்கர இழுக்குங்கிறது
நாசமாப் போன ரெண்டு கட்சிக்காரனுங்களுக்கும் நடு மண்டையில உரைக்கவே இல்லை.

இவனுக ரெண்டு பேரும் இப்படி சண்டை போட்டுக்கிட்டா குண்டு வச்சவனுங்களுக்கு கொண்டாட்டமாக இருக்காதுங்களா.



இலங்கை ராணுவம் நம்ம நாட்டு மீனவர்களை குறிப்பா தமிழ் நாட்டு மீனவர்கள் குண்டியிலேயே சுடுறானுங்க. அதப்பத்தி மத்திய அரசு கவலைப்படலை.

பக்கத்து நாடான பாகிஸ்தானுல சிறுபான்மையா இருக்கிற இந்து மக்கள் படாதபாடு படுறாங்க. ஆனா அதைப்பத்தியும் கவலை இல்லை.

காஷ்மீருக்குள்ள பூந்து தீவிரவாதிகள் கலக்குறாங்க. அது குறித்தும் இந்திய அரசின் இதயம் படபடக்கல.

ஆனா, பதவியில ஒட்டிக்கிட்டு இருக்க இவங்க படுற பாடு இருக்கே. அது கேவலத்திலயும் மகா கேவலமா தெரியலைங்களா?

மக்களைப்பத்தி கவலை இல்லை. பாதுகாப்பைப்பத்தி கவலை இல்லை. அமைதியைப் பத்திக் கவலை இல்லை. பக்கத்து நாட்டுக்காரன் நம்ம வாயில பருப்புக் கடைஞ்சாலும் கவலை இல்லை.

எப்படியாவது பதவியில ஒட்டிக்கிட்டு இருக்கணும். ஆயிரங்கோடி லட்சங்கோடின்னு ஊர்ப்பணத்தை ஆட்டையப் போடணும். இதுதான் அவங்களோட ஒட்டு மொத்த சிந்தனை. சி பி ஐ கேஸ் போட்டாலும் இவனுக வெட்கப்பட மாட்டாணுங்க.



ஊர்ப்பணத்தை சுட்டு தேர்த்திருவிழா நடத்தும் இவங்களை அப்பாவி ஜனங்க கண்ணை மூடிக்கிட்டு நம்புறதுதான் இவங்களோட பலம்.

அதோட நம்ம ஜனங்க ஒரு விஷயத்தில மட்டும் திருவள்ளுவர் சொன்னதை மறக்காக கடைப்பிடிக்கிறாங்க. "நன்றி மறப்பது நன்றன்று நன்றல்ல அன்றே மறப்பது நன்று" இதுதாங்க அந்த திருக்குறள்.

இதுனால தான் அந்த நாசமாப் போன அரசியல்வாதிங்க நாட்டை கூறு போட்டு கும்மியடிச்சுக்கிட்டு இருக்கிறாங்க.

நம்ம ஜனங்க மூனு வகையில அடிமையாக இருக்காங்க. ஒன்னு ஆன்மீகம். ரெண்டு அரசியல். மூனு சினிமா.

சாமியாருங்க உண்மையா போலியான்னு பார்க்கிறதில்லை. அரசியல்வாதிங்க மனச்சாட்சி உள்ளவங்களா மக்களை ஏமாத்தாதவங்களான்னு ஆராய்வதில்லை. சினிமா ஒரு நடிப்பு... சினிமாகாரங்க சம்பளம் வாங்கிக்கிட்டுத்தான் நடிக்கிறாங்க. திரையில நடிக்கிற மாதிரி எந்த நடிகரும் உண்மை வாழ்க்கையில் இருக்கிறதில்லைங்கிறதை மக்கள் உணர்வதில்லை.

இந்த அப்பாவித்தனமான ஏமாளித்தனம்தான் இந்தியாங்கிற நாடு உலக அளவில மத்த நாடுகள் கிள்ளுக்கீரையாக நினைக்கிறதுக்கு மூல காரணம்.

மக்கள் என்னைக்காவது அறியாத்தனமான அடிமைத்தளையில இருந்து விடுபட்டு ஆழிபேரலை மாதிரி கொங்கி எழுந்தாங்கன்னா.... ஊரை சுரண்டித் திங்கிற அரசியல்வாதிங்க நாறிப் போயிடுவாங்க...

இந்த மாற்றம் இன்னைக்கு இல்லாவிட்டாலும் என்னைக்காவது வரும்... கண்டிப்பாக வரும்.

 


Thursday, April 11, 2013

ஐயையோ அஞ்சலி... எல்லாருக்கும் நெஞ்சுவலி.... !



அஞ்சலியோ.... குஞ்சலியோ.... ஒரு நடிகை காணாம போயிட்டாளாமாம்... என்னமோ இந்தியா தயாரிச்ச அக்னி ஏவுகணையே காணாம போயிட்ட மாதிரி பத்திரிக்கைக்காரனும் டிவிகாரனும் பத்திக்கிட்டு எரியுறானுக.

அஞ்சலிய கண்டுபிடிக்கலைன்னா இந்தியாவுக்கு எதிரா பொருளாதாரத்தடை விதிக்க வேண்டி வருமுன்னு அமெரிக்கா எச்சரிக்கை  விடுத்திருக்கிறதா கேள்விங்க. ஜெனிவாவில தீர்மானம் போடுற திட்டம் இருப்பதாகக்கூட சொல்றாங்க.



அறிக்கை விடுறதுக்காவே ஐ. நா. சபை செயலாளராக இருக்கிற பான் கி மூன் முப்பது பக்க அறிக்கை ரெடி பண்ணி, அதை வாசிக்க முக்கிக்கிட்டு இருக்கிறதா பேசிக்கிறாங்க.

அந்த அளவுக்கு அஞ்சலி காணாம போன விஷயம் அகில உலக பிரச்சினையா மாறி பூமிப் பந்தே அக்னிக் குழம்பா தகிச்சிக்கிட்டு இருக்கிற மாதிரி நம்ம ரசிகக் கண்மணிக கண்ணீரும் கம்பலையுமா தவிக்கிறாங்க.

காவல்துறையில் இருக்கிற ஒரு அதிகாரி காணாமப் போயிட்டா கூட அதைப்பத்தி கமிஷனர் கவலைப்பட மாட்டார்... ஆனா... கர்மம் பிடிச்ச சினிமாகாரிங்க காணாமப் போயிட்டா... பசி நோக்காம... கண் துஞ்சாம... மெய் வருத்தம் பாராம.. பம்பரமா சுழலுவாறு..

இதில அஞ்சலி.... தானா காணாம போனாரா... இல்லை அவர யாரும் கடத்திக்கிட்டு போயிட்டாங்களான்னு பல கோணங்கள்ள போலீஸ் விசாரணையை முடுக்கி விட்டுருக்கிறதா மைக்க பாத்து பல்லைக் கடிச்சுக்கிட்டு பேட்டி கொடுப்பாரு.

அப்புறம் இதுக்கு ஒரு தனி டீம் அமைச்சு நம்ம வரிப்பணத்தை தின்னு தேடுதல் வேட்டை நடத்துவாங்க.

ஆனா அந்த அம்மா... தனக்கு பிடிச்ச ஆளோடு எங்கயாவது ரூம் போட்டு தமிழ் நாட்டுல நடக்கிற காமெடிய டிவில பாத்து விலா வலிக்க சிரிப்பாங்க.



அஞ்சலிய ஏமாத்தினது அவுங்க சித்தியா... நடிக்க வாய்ப்புக் கொடுத்த இயக்குனரான்னு நம்ம ரசிக குஞ்சுமணிங்க பட்டிமன்றம் நடத்திக்கிட்டு இருப்பாங்க.

நேத்துவரைக்கும் அஞ்சலியோட அல்ஜா குல்ஜா பண்ணுன ஆளுங்க அஞ்சலியா... அப்படின்னா யாருன்னு ஆச்சரியத்தோடு கேப்பாங்க.

அஞ்சலியும் இயக்குனரும் அலப்பறைன்னு படத்தோட செய்தி போட்ட பத்திரிக்கைகாரனுங்க... இதையும் புதுச்செய்தியா போட்டு புளகாங்கிதம் அடைவாங்க..

இதக் கொஞ்சம் மாத்துகங்கப்பா... ரசிக்கிற விஷயம் வேற... ருசிக்கிற விஷயம் வேறன்னு மக்களுக்கு புரிய வைக்க முயற்சி பண்ணுங்கப்பா... அஞ்சலி செய்தி அரைப்பக்கமும் அணுசக்தி விஞ்ஞானி அப்துல் கலாம் செய்தி அரை இஞ்சு வரும்போது மனசு வலிக்குதுப்பா.. நீங்களும் மாறுங்கப்பா..

அஞ்சலி காணாமப் போனதுக்கு அஞ்சலி கவிதை பாடிக்கிட்டு இருக்காம... அதை ஒரு செய்தியா மட்டும் பாருங்கப்பா...