Sunday, January 24, 2010

நிகர் நிலைப் பல்கலைக் கழங்களுக்கு அனுமதி கொடுத்தது யார்?

இப்ப இந்தியாவில அல்லோகலப்படும் பிரச்சினை நிகர் நிலைப் பல்கலைக்கழக அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்கிற மத்திய அரசின் அறிவிப்பு தாங்க. இந்தப் பல்கலைக் கழகங்கள் எல்லாம் கொள்ளைக் கூடங்கள்ன்னு இப்போ எல்லாரும் பேசுறாங்க... எழுதுறாங்க...




சரிங்க... இதுக்கு அனுமதி கொடுத்தது யாருங்க.. மத்திய அரசுங்க... சில வல்லுனர்கள் பரிந்துரையின் பேரில் தாங்க அனுமதி கொடுக்கப்பட்டிருக்கு. அவங்க காசு வாங்கிக்கிட்டு கொடுத்தாங்களா... இல்ல கண்ணை மூடிக்கிட்டு கொடுத்தாங்களாங்கிறது பிரச்சினை இல்லைங்க.

அவங்க கொடுத்ததாலே தானே மாணவர்கள் சேர்ந்தாங்க. எல்லாரும் இன்னைக்கு நேத்தா பல்கலைக்கழகங்களை ஆரம்பிச்சாங்க. அது ஆரம்பிச்சு அஞ்சாறு வருசம் ஆயிடுச்சுங்க. எத்தனையோ பேரு படிப்பை முடிச்சிட்டு பட்டமும் வாங்கிட்டாங்க.

தகுதியில்லாத பல்கலைக் கழகங்களை ஆரம்பிக்க கையெழுத்துப் போட்ட சம்பந்தப்பட்ட வல்லுனர்களை... அதிகாரிகளை அல்லவா மத்திய அரசு முதலில் கைது செய்யணும்.

அந்த நேரத்தில் இருந்த கல்வி அமைச்சர் அல்லவா இதுக்கு பொறுப்பு ஏற்க வேண்டும். அதை விட்டுட்டு திடீர்ன்னு ரத்துன்னா...ஆயி போனவனை அடிக்கமுடியாம..... ஆயி...யைப் போட்டு அடிச்ச கதையால்ல இருக்கு.

இன்னொன்னுங்க... இந்த பல்கலைக்கழகங்கள் எல்லாம் பலசரக்கு கடைங்களா.. இழுத்து மூடிட்டா இன்னொரு கடைக்கு மக்கள் போயி சாமான்கள் வாங்க... மாணவர் சம்பந்தப்பட்ட காரியமுங்க.

ரத்துன்னு அறிவிக்கிறதுக்கு முன்னாடி... அங்க எத்தனை மாணவர்கள் படிக்கிறாங்க... அவங்களுக்கு மாற்று ஏற்பாடு என்ன செய்யலாம்... அரசாங்க பல்கலைக் கழகங்களோடு இணைக்கிறதுன்னா... அதுக்கு அரசாங்கம் என்ன திட்டம் வச்சிருக்கு.

பல்கலைக் கழக நிர்வாகம் முரண்டு பிடிச்சா அவங்க பல்லைப் பிடுங்க என்ன வழி...இதையெல்லாம் யோசித்த பின்னரே ரத்து ஆயுதத்தை கையில் எடுத்திருக்கணுமுங்க.

அதோடு சிலர் இந்த பல்கலைக் கழகத்தில படிக்கும் மாணவர்கள் எல்லாம் மக்கு மாணவர்கள் என்பதுபோல சொல்றாங்க. இது அவங்கதான் மக்கு என்பதைக் காட்டுதுங்க. அண்ணா பல்கலைக்கழகத்தில படிச்ச மாணவர்கள் எல்லாரும் நோபல் பரிசு வாங்குறவங்க போல பீத்திக்கிறாங்க.

அரசாங்க ஒதுக்கீட்டில போன மாணவர்கள் அங்கயும் தண்டம் அழுகிறது சம்பந்தப்பட்ட பெற்றோர்களுக்குத்தாங்க தெரியும்.
சட்டப்படி புகார் கொடுத்து அவங்கமேலே நடவடிக்கை எடுக்கலாமேன்னு சில மேதாவிங்க கேக்கலாமுங்க. வாயைக் கட்டி... வயித்தைக் கட்டி.. சேத்த பணத்தைக் கட்டி பிள்ளையைப் படிக்க வைக்கிற பாட்டாளி... நிர்வாகத்தோடு மோதி நிர்க்கதியா போன கதை நிறைய இருக்குதுங்க.

கணக்கு வழக்கில குளறுபடி இருக்குன்னு சொன்ன அரசாங்க ஆடிட்டரையே அண்டர்வேரைக் கழட்டிருவாங்க போல இருக்கு. இந்த நிலையில விவரம் தெரியாத வேட்டி ஆசாமிங்க கதி என்ன ஆகுமுன்னு நினைச்சுப் பாருங்க. கோமணத்தை உருவி கும்மி அடிச்சுருவாங்க.

Monday, January 11, 2010

தமிழன் நெஞ்சில் வீரமும் இல்லை... ஈரமும் இல்லை...



  அன்று நடுரோட்டில்
செத்துப் போனது
ஆய்வாளர் வெற்றிவேல்
மட்டுமல்ல
மறத்தமிழனின் மானமும்
மனிதாபிமானமும்தான்




ஐயோ...ஐயோ....
பார்க்கும்போது நெஞ்சு
பற்றி எரிகிறதே..
.உயிர் உறைகிறதே..

ரத்தச் சகதியில்
அந்த உருவம்
புரண்டு படுக்கிறது
பார்த்த என் இதயம்
வயிற்றுக்கும்
தொண்டைகுமாய்
உருண்டு துடிக்கிறது

எப்படியாவது என்னைக்
காபாற்றுங்களேன் என
துண்டித்த காலோடும்
துடிக்கின்ற உடலோடும்
கையை நீட்டுகிறது

உடலை வளைத்து
குனிந்து பார்த்த
சபாரி சூட் அணிந்த
சண்டாள நபர் ஒருவன்
எட்டடி பின்னால்
பாய்ந்து... தான் ஒரு
'பொட்டை' என்பதை
பொறுப்பாக சொல்லி
இருக்கிறான்

அந்த ஆய்வாளர்
ஆள் இல்லாத இடத்தில்
அநாதையாக சாகவில்லை

சுற்றி நின்று நமது
வீரத் தமிழர்கள்
வேடிக்கை பார்க்க
இரத்தம் வற்றி வற்றி
செத்திருக்கிறார்

கொலைகளையும்
கொள்ளைகளையும்
திரையில் பார்த்துப் பார்த்து
திகட்டிப் போனதால்தானா
அந்தக் கூட்டம்
நிஜத்தில் பார்த்து
நெக்குருகி நின்றது

நீரில் விழுந்து தத்தளித்த
ஒருவனைக் காப்பாற்ற
ஹெலிகாப்டரில் இருந்து
குதித்தாராம் ஜப்பான் நாட்டு
அமைச்சர் ஒருவர்

நேரில் ஒரு உயிர்
துள்ளத் துடிக்க
போய்க் கொண்டிருக்கும்போது
வேட்டியை மடித்துக் கட்டி
முகம் முழுக்க திகில் படர
முப்பதடி தூரத்தில் நிற்கிறார்
நமது ஊர் அமைச்சர் ஒருவர்

துணிந்த யாராவது ஒருவர்
துணியைப் போல தோளில்
அள்ளிப் போட்டுக் கொண்டு
போயிருந்தால் ஒருவேளை
அந்த உயிரைக் காப்பாற்றி
இருக்கலாம்

அதற்கு பின்னால்
அந்த உயிர் போயிருந்தால்கூட
மனிதாபிமானத்தில் சிறந்தவன்
தமிழன் என்ற மரியாதையையாவது
காப்பாற்றி இருக்கலாம்

வீரத்திலும் தீரத்திலும்
உலகத்தாரை விஞ்சி நிற்கின்ற
மூத்த குடிமக்களாம் நாம்
இனிமேல் யாராவது இப்படிச்
சொன்னால் அதைவிட கேவலம்
வேறு ஒன்றும் இல்லை

தமிழன் நெஞ்சத்தில்
வீரமும் இல்லை
ஈரமும் இல்லை
மானமும் இல்லை

நான் வேதனைப்படுகிறேன்
வெந்து போகிறேன்
அந்த ஆய்வாளரின்
மரணத்துக்கு மட்டுமல்ல

நான் தமிழன் என்று
சொல்லிக் கொள்ளவும்தான்

அந்த இடத்தில் நீ
இருந்திருந்தால் என
கேள்வி எழுப்பி என்னைக்
கேவலப்படுத்தி விடாதீர்கள்

இது போல் துடித்த ஓர்
உயிரைத் தோளில் சுமந்து
முச்சிரைக்க ஓடி
ரிக்ஷாவில் ஏற்றி
மருத்துவமனையில் சேர்த்து
காப்பாற்ற உதவிய
சின்ன நினைவு ஒன்று
என் இதயத்தில் இன்னும்
இருக்கிறது.

9.1.2010 தினமலர் அகப்பக்கத்தில் இந்த அவலக் காட்சி வீடியோ காட்சியாக வெளியாகி இருக்கிறது. அதைப் பார்த்த பின்னர்தான் என்னுடைய பதிவைச் செய்திருக்கிறேன். வாய்ப்பிருந்தால் நீங்களும் பாருங்கள். அந்த ஆத்மா சாந்தி அடைய பிரார்த்தனை செய்யுங்கள்.



Friday, January 8, 2010

மகுடி வாசிக்கலாமா மருத்துவரே...



21-ஆம் நூற்றாண்டின் மாவீரன் பிரபாகரனின் தந்தை இறந்திட்டாருங்க. அவருக்கு நமது வீரவணக்கத்தை தெரிவிப்பது கடமையும் உரிமையும் ஆகுமுங்க.

அதே நேரத்தில அவரோட மரணத்தை வச்சு மகுடி வாசிக்கிற அசிங்கத்தை தமிழ்நாட்டு தலைவர்கள் ஆரம்பிச்சிருக்காங்க. இது திட்டமிட்ட சதின்னும் மருத்துவர் ராமதாஸ் கொந்தளிச்சு நிக்கிறாருங்க.

இப்படி கொந்தளிச்சு கொந்தளிச்சு தானே உலகத்திலேயே மாபெரும் விடுதலை இயக்கமா இருந்த விடுதலைப் புலிகளை குழி தோண்டி புதைச்சீங்க. இன்னும் என்னையா செய்யணுமுன்னு நினைக்கிறீங்க.

நீங்க இப்படி தைப்பூசத்துக்கு காவடி எடுத்து ஆடுற மாதிரி ஏடாகூடாமா ஏதாவது பண்ணினா... வேலு பிள்ளை பொணத்தை வீதியில போட்டுட்டு ராஜபக்சே வேடிக்கை பாத்துக்கிட்டு இருக்கப் போறானுங்க.




நீங்க இங்க வேட்டைக்காரன் விஜய் மாதிரி " நான் அடிச்சா தாங்க மாட்டே... நாலு மாசம் தூங்க மாட்டே...முழுசா வீடு போயி சேர மாட்டே"ன்னு  டையக்கோ டம்மக்கோ பாடி டப்பாங்குத்து போட்டுக்கிட்டு இருக்க வேண்டியதுதானுங்க.

விடுதலைப் புலிகள் அவுங்க பாட்டுக்கு வியூகம் அமைச்சு இலங்கை ராணுவத்தின் கண்கள்ல விரலை விட்டு ஆட்டிக்கிட்டிருந்தாங்க. அந்த வெற்றியில குளிர் காய நினைச்ச நம்ம வெத்து வேட்டு தமிழ் நாட்டு அரசியல்வாதிங்க சிலர் " மாவீரன் நெப்போலியனே... மானங்காக்க வந்த மாமன்னன் ராஜ ராஜனே... அல்டி மேட் கிங் அலெக்ஸாண்டரே" ன்னு மேடை கட்டி வாண வேடிக்கை விட்டாங்க.

"இதோ வந்திருச்சு தமிழ் ஈழம்... தமிழனுக்கு தனி நாடு.... ஆறு கோடி தமிழ் வீரனுங்க மூத்திரம் பேஞ்சே ராஜ பக்சே மூச்சை நிறுத்திடுவாங்க. எச்சி துப்பியே இலங்கையை அழிச்சிடுவாங்க" ன்னு தொண்டை கிழியக் கத்தி சும்மா சிலாவரிசை எடுக்க ஆரம்பிச்சாங்க.

முதல்ல ராஜபக்சே நம்ம ஆளுகளைப் பாத்து பயந்தது உண்மைதானுங்க. அப்புறம்தான் பாத்தான்... இவங்க வாழப்பழத்தைக்கூட வெட்டமாட்டானுங்கன்னு பூந்து விளையாட ஆரம்பிச்சிட்டான்.

நம்மளவிட இன்னோரு புத்திசாலித்தனமான காரியத்தையும் பண்ணினானுங்க. "பாத்திங்களா... பாத்திங்களா... தமிழ் நாடே இலங்கைக்கு எதிரா திரண்டு நிக்குது. இது இறையாண்மைக்கு ஆகுமா"ன்னு உலக நாடுகளுக்கிட்ட ஒப்பாரி வச்சான்.

அவ்வளவுதான் நமிதாவுக்கு நச்சுன்னு முத்தங் கொடுக்க காத்திக்கிட்டு இருக்கிற நம்ம ரசிகர் கூட்டம் மாதிரி இலங்கைக்குள்ள இறங்கி நாட்டாமை பண்ண காத்திக்கிட்டு இருந்த நாடுகள் எல்லாம் ஆயுதத்தை கொடுத்து
அலப்பறை பண்ண ஆரம்பிச்சுடுச்சுங்க.




இந்த இடத்தில மட்டும் தாங்க தலைவர் பிரபாகரன் தப்பு பண்ணிட்டாரு... "ஒருத்தனுக்கு எந்திரிச்சு நிக்கவே வக்கு இல்லையாம். அவனுக்கு ஒம்போது பொண்டாட்டியாம்" ன்னு சந்திரமுகியில ரஜினி வசனம் பேசுவாரு.

அது மாதிரி இங்க உள்ள மக்கள் பிரச்சினைகளைத் தீக்கவே வழியில்லையாம். இலங்கையில நின்னு ஏத்தம் கட்ட போறமுன்னு நம்ம வெத்துவேட்டு வெங்கட்ராமனுங்க சொன்னத கொஞ்சம் இசகு பிசகா நம்பிட்டாருங்க.

முதல்ல தமிழ்நாட்டில என்னமா சவுண்ட் கொடுத்தாங்க. பிரபாகரனுக்கு ஏதாவதுன்னா தமிழ்நாடே ரத்த வெள்ளத்தில் தத்தளிக்குமுன்னாங்க. நெருப்பு சூறாவளி வீசுமுன்னாங்க. தமிழனுக்கு மானம்தான் பெரிசு... இலங்கை தமிழ் மக்கள் உடம்பில சின்ன கீரல் பட்டாகூட சுனாமியா மாறி இலங்கையையே சுருட்டிருவமாக்கும்.  உசுரு எங்களுக்கு புடுங்கிப் போட்ட மசுருன்னு உதார் விட்டாங்க.

இப்படி அடிவயித்தில் இருந்து அடுக்கு மொழி வசனத்தை கக்கிவிட்டு ஏசி ரூமுக்குள்ள படுத்து எச்சி இலையை நக்கிக்கிட்டு இருக்காங்க. அங்க நம்ம தமிழ் சொந்தங்கள் முள் வேலிக்குள்ள மூச்சு முட்டிக்கிட்டு கிடக்கிறாங்க.

"அய்ஜலக்கா... அப்படி போடு... குய்ஜலக்கா... கும்மாங்குத்துன்னு" தமிழ்நாட்டில இருந்தவங்க கரகாட்டம் நடத்தாம இருந்திருந்தா...விடுதலைப் புலிகளை இலங்கை ராணுவத்தால் வீழ்த்தி இருக்க முடியாதுங்க. இது நான் சொல்லலைங்க.. ஆஸ்திரேலியாவில் இருந்து வந்த ஒரு நண்பர் கூறிய கருத்துங்க.




கட்டுன பொண்டாட்டிக்கிட்ட வீரத்தை கட்டில்ல காட்டணுமுங்க. ஒருவேளை பிள்ளையைக் கொடுக்க முடியலைன்னா வாயைப் பொத்திக்கிட்டு பேசாம இருக்கணுமுங்க. அதை விட்டுப்பிட்டு தோட்டா இல்லாத துப்பாக்கியை தூக்கி பிடிச்சு காக்காவைச் சுடப் போறேன்... கழுகைச் சுடப்போறேன்னு பாட்டுப் பாடிக்கிட்டு இருந்தமுன்னா பக்கத்து வீட்டுக்காரன் பந்து விளையாடிட்டு போயிருவானுங்க.

இலங்கை மக்களுக்கு ஆதரவு கொடுக்கிறதில்ல தப்பே இல்லைங்க. அது நம்ம உரிமைங்க. ஆனா.. சும்மா உசுப்பேத்தி உசுப்பேத்தி இருக்கிற மக்களை ரண களப்படுத்திறாதீங்க.

மொதல்ல உங்களுக்குள்ள ஒத்துமையா இருக்கப் பாருங்க. உதார்விட்டு உசுப்பேத்தாதீங்க. மக்கள் உணர்ச்சியைத் தூண்டி விட்டு அதில குளிர் காயாதீங்க. நீங்க என்ன சொன்னாலும் தமிழ் நாட்டு மக்களுக்கிட்ட எடுபடாதுங்க. அவுங்க சீரியல் மயக்கத்தில சீரழிஞ்சு கிடக்கிறாங்க.

பக்கத்துவீட்டுக்காரன் பட்டினியால வெடாவெட்டிக்கிட்டு கிடந்தாலும் என்னன்னு கேக்க மாட்டானுங்க நம்ம மறத் தமிழன். ஆனா... நயன்தாரா நாய்க்குட்டிக்கு உதட்டில உண்ணி கடிச்சா கூட நாலு நாளைக்கு தூங்க மாட்டானுங்க.

வீர மரணம் அடைஞ்ச உண்மையான வீரனோட (நம்ம ஹீரோக்கள் மாதிரி டூப்பு வீரன் இல்லைங்க) தந்தையாரின் ஆத்மாவை சாந்தி அடைய விடுங்க. அதையும் அரசியல் ஆக்கி அல்வா கிண்டாதீங்க.

உட்டாலங்கடி பேச்சுப் பேசி உயிரோட இருக்கிற அந்த வீரத் தாயின் கடைசி கால நிம்மதிக்கு உலை வச்சுடாதீங்க.

என்னோட கருத்தில முரண்பாடு இருந்தாலோ உங்களுக்கு உடன்பாடு இல்லையென்றாலோ கண்டிப்பாக சொல்லுங்க... திருத்திக்கிறேங்க. ஆனால், கோபம் மட்டும் படாதீங்க. இந்த முட்டாள்தனமான கோபம்தாங்க. மூத்த குடிமக்களாகிய நம்மை மத்தவன் காலை நக்கிப் பிழைக்கும் நாத்த குடிமக்களாக்கி வைச்சிருக்குங்க.

Wednesday, January 6, 2010

ஜக்குபாயும் ஜக்கு ஜக்காய் கண்ணீரும்

ஜக்குபாய் திரைப்படம் மக்குபாய் திரைப்படமாக மாறி சரத்குமார் குடும்பத்தைக் கண்ணீர்கடலில் மிதக்க வைத்திருக்கிறதாம். என்னா அழுகை அழுவுறாங்க.




 யாழ்பாணத்தில முள்வேலிக்கு நடுவுல மாட்டிக்கிட்டு அடுத்த வேளை உணவுக்கு அல்லாடுற அப்பாவி தமிழ் மக்களின் கண்களில் இருந்து கொட்டுற கண்ணீரை விட ஆயிரம் மடங்கு இல்ல ராதிகா அக்கா கண்ணுல அருவியா பொங்குது.

அதுதான் மருமகளைக் கெடுக்கிற மாமானார். அண்ணியைக் கெடுக்கிற கொழுந்தன், வேலைக்காரனோட தொடர்பு வச்சிருக்கிற வீட்டுக்காரம்மா...ன்னு நம்ம பண்பாட்டை உலக நாடுகளுக்கு பறை சாற்றுகின்ற சீரியல்களா எடுத்துத் தள்ளி பணத்தை அள்ளுறீங்களே... அது பத்தாதா...

ஏதோ ஜக்குபாய் நக்குபாயா மாறி இவங்க குடும்பத்தையே நாசமாக்கின மாதிரி இல்ல. அழுவாச்சி விடுறாங்க. ஹிரோஷிமாவில அணுகுண்டு விழுந்தபோது ஜப்பான்காரன் முகத்தில கூட இவ்வளவு சோகத்தை பாத்திருக்க முடியாது.

சரத்குமார் அண்ணாச்சிக்கு படத்திலதான் தன்முனைப்பு தடாலடி வேலை எல்லாம் போல இருக்கு.  நிஜத்தில அவரு சரத்குமார் இல்ல....சொரத்தில்லாத குமார்.

ரஜினிகாந்தில இருந்து சூரியா வரைக்கும் எல்லையைப் பிடுங்குன சீனாகாரனுக்கு எதிராக போராடப் போற மாதிரி வரிஞ்சு கட்டிக்கிட்டு நிக்கிறாங்க. எதுக்குங்க ஆவேசப்படுறீங்க.

திருட்டு விசிடி வந்தா என்ன... இணையத்தளத்தில வெளியான என்ன ஆயிடப் போகுது.... அடுப்படியில பூனை தூங்குனாலும் பெத்த பிள்ளை கஞ்சிக்கு அழுதாலும் கட்டின பொண்டாட்டி சாகக் கிடந்தாலும் அவ தாலிய வித்தாவது படம் பார்க்கிற பாமர ஜனங்க இருக்கும்போது உங்களுக்கு என்னங்க கவலை.




இதுல வீராதி வீரன் வெண்ணை வெட்டி வெள்ளச்சாமி பேரன்... சேரன் அண்ணாச்சி ஒரு ஆவேச ஐடியா கொடுத்திருக்காரு. ரசிகர்களை விட்டு வெட்டச் சொல்லப் போறாராம். யாரை.... இணையத்தளத்தில திருட்டுத்தனமா ஜக்குபாயை வெளியிட்ட ஆசாமியை.

ஏனய்யா... சேரனாரே பாதிக்கப்பட்டது நீங்க... நீங்க தானய்யா வெட்டணும். அதை விட்டுட்டு தீக்குளிக்கன்னா... தொண்டனுங்க... வெட்டணுமுன்னா... ரசிகனுங்கன்னு அந்த இளிச்சவாயி ரசிகனுங்க தலையில புளிச்ச தண்ணியை ஊத்துறீங்க.

ரசிகன் போயி அவன வெட்டுவான். அப்புறம் ஜெயிலுக்கு போவான். அவன் குடும்பம் நடுத்தெருவில நிக்கும். நீங்க ஹாயா... கோமணத்தை அவுத்து கொடியில போட்டுட்டு கும்மாளம் அடிச்சிக்கிட்டு இருப்பீங்க.

இதுக்கெல்லாம் விடிவுகாலம் வராதுன்னு நினைக்காதீங்க. ஒரு நாளைக்கு இந்த பாமர ஜனங்க முழிச்சிக்கிட்டாங்கன்னு வையுங்க. உங்களை சந்தியில நிக்க வச்சு. தொந்தியில உழுது நாத்து நட்டுருவாங்க.