இந்திய தூதரக அதிகாரி தேவயானியை கட்டி இழுத்து போய் துலாவித் துலாவிச் சோதனை செய்தார்களாம் அமெரிக்க அதிகாரிகள்.
வேலைக்காரப் பெண்ணுக்கு விசா வாங்க போலியான ஆவணங்களைக் கொடுத்தாராம் அந்த அம்மா.
அமெரிக்க இமிகிரேஷனை ஏமாற்ற அந்த அம்மாவுக்கு கிறுக்குப் பிடிச்சிருக்கா என்ன.
அதுக்காக இவங்களைக் கட்டி இழுத்து வருவாங்களாம். போதைப் பொருள் பயன்படுத்தும் கைதிகளை அடைக்கும் அறையில் பூட்டி வைத்தார்களாம்.
உடைகளைக் களைந்து விட்டு துலாவித் துலாவிச் சோதனை செய்தார்களாம்.
இந்திய அரசாங்கம் இளிச்ச வாய்த்தனமாக இருந்தால் இது செய்வாங்க... இன்னமும் செய்வாங்க....
சோனியா காந்தியும் சொக்கட்டான் விளையாடிக்கிட்டு இருக்காங்களா... அறிக்கை விடவே அவதாரம் எடுத்த கலைஞர் கருணாநிதி எழுதுகோலை இன்னும் ஏன் எடுக்கவில்லை.
ஜெயலலிதாவுக்கு மத்திய அரசை மட்டம் தட்டத்தான் நேரம் சரியாக இருக்கிறது.
வெளியுறவுத் துறை அமைச்சர் வாய் வீங்கிப் போய் கிடப்பார் போலிருக்கு.
சினிமா நடிகனுக்கு குஞ்சு வலி என்றால் நெஞ்சு துடித்து போராட்டத்தில் இறங்கும் கோடிக் கணக்கான ரசிகப் பெருமக்களுக்கு இது ஒரு ஜுஜுபி மேட்டர்.
ஆனா, இதுக்கு ஒரு சரியான நடவடிக்கை எடுக்காவிட்டால் அமெரிக்கா போகும் அரசியல் தலைவருங்க எல்லாம் அம்மணமா தாண்டி விமானம் ஏற வேண்டி இருக்கும்.
இனிமே அமெரிக்காவுக்கு ஆம்பிளைத் தூதரைப் போடுங்கப்பா... அடுத்த நிலையில் இருக்கிறவங்களும் ஆம்பிளையாகவே இருக்கட்டும்.
ஏன்னா அமெரிக்கக்காரன் ஆடையை அவிழ்த்து விட்டு துலாவுறதிலேயே குறியா இருக்கான்.















