Wednesday, December 18, 2013

ஆடையை களைந்து என்ன தேடுகிறான் அமெரிக்கன்

        இந்திய தூதரக அதிகாரி தேவயானியை கட்டி இழுத்து போய் துலாவித் துலாவிச் சோதனை செய்தார்களாம் அமெரிக்க அதிகாரிகள்.
         வேலைக்காரப் பெண்ணுக்கு விசா வாங்க போலியான ஆவணங்களைக் கொடுத்தாராம் அந்த அம்மா.


         அமெரிக்க இமிகிரேஷனை ஏமாற்ற அந்த அம்மாவுக்கு கிறுக்குப் பிடிச்சிருக்கா என்ன.
         அதுக்காக இவங்களைக் கட்டி இழுத்து வருவாங்களாம். போதைப் பொருள் பயன்படுத்தும் கைதிகளை அடைக்கும் அறையில் பூட்டி வைத்தார்களாம்.
          உடைகளைக் களைந்து விட்டு துலாவித் துலாவிச் சோதனை செய்தார்களாம். 
         இந்திய அரசாங்கம் இளிச்ச வாய்த்தனமாக இருந்தால் இது செய்வாங்க... இன்னமும் செய்வாங்க....
          சோனியா காந்தியும் சொக்கட்டான் விளையாடிக்கிட்டு இருக்காங்களா... அறிக்கை விடவே அவதாரம் எடுத்த கலைஞர் கருணாநிதி எழுதுகோலை இன்னும் ஏன் எடுக்கவில்லை.
          ஜெயலலிதாவுக்கு மத்திய அரசை மட்டம் தட்டத்தான் நேரம் சரியாக இருக்கிறது.
           வெளியுறவுத் துறை அமைச்சர் வாய் வீங்கிப் போய் கிடப்பார் போலிருக்கு.
           சினிமா நடிகனுக்கு குஞ்சு வலி என்றால் நெஞ்சு துடித்து போராட்டத்தில் இறங்கும் கோடிக் கணக்கான ரசிகப் பெருமக்களுக்கு இது ஒரு ஜுஜுபி மேட்டர்.
           ஆனா, இதுக்கு ஒரு சரியான நடவடிக்கை எடுக்காவிட்டால் அமெரிக்கா போகும் அரசியல் தலைவருங்க எல்லாம் அம்மணமா தாண்டி விமானம் ஏற வேண்டி இருக்கும். 
            இனிமே அமெரிக்காவுக்கு ஆம்பிளைத் தூதரைப் போடுங்கப்பா... அடுத்த நிலையில் இருக்கிறவங்களும் ஆம்பிளையாகவே இருக்கட்டும்.
            ஏன்னா அமெரிக்கக்காரன் ஆடையை அவிழ்த்து விட்டு துலாவுறதிலேயே குறியா இருக்கான்.
         

Monday, December 16, 2013

கிளம்பிட்டாரு கலைஞரு... கலக்கத்தில் காங்கிரஸ் தலைவரு...!

கிளம்பிட்டாருய்யா... கிளம்பிட்டாரு... யாரு நம்ம தமிழினத் தலைவர் கலைஞருதாங்க.
ஈழத் தமிழர் விஷயத்தில் காங்கிரஸ் கட்சி ஈரத் துண்டைப் போட்டுக் கழுத்தை அறுத்து விட்டதாம்.
ஊழலில் சிக்க வைக்க திட்டமிட்டு திமுகவை பிணைப் பிடித்து விட்டார்களாம்.
பொதுக்குழுவில் பொழந்து கட்டி விட்டாருங்க நம்ம கலைஞர்.
அடடா திடீரென்று எப்படி இவருக்கு வீர்ம் வந்ததுன்னு பாத்தா... நாடாளுமன்றத் தேர்தல் நாலு மாசத்தில.
அதுதானே பாத்தேன். இல்லாட்டி இவரு இப்படி தில்லாலங்கடி பாட மாட்டேரேன்னு.
கலைஞரோட சாணக்கியத்தனத்துக்கிட்ட அர்த்தசாஸ்திரம் எழுதின கௌடில்யரே மண்ணைக் கவ்வனுமுங்.
ஒரிஜனல் சாணக்கியரை ஓரங்கட்டுற திறமை நம்ம கலைஞருக்குத்தான் இருக்குங்க.
இறுதிப்போரில இலங்கைத் தமிழருங்க கொத்துக் கொத்தா செத்து விழும்போது இவ்ரு சீக்கு கோழி மாதிரி கிடந்தாருங்க.
ஏன்னா... மகன் அழகிரிக்கு ஆபத்து வருமுல்ல. கனிமொழிக்கு பதவி போயிருமுல்ல.


சட்டசபை தேர்தலில் கலைஞர் சட்டையைப் பிடிச்சு வெளிய தள்ளிட்டாங்க தமிழக மக்கள்.
அலைக்கற்றை வரிசை ஊழல் வேற கலைஞர் அடிவயிற்றில நெருப்பு வச்சது.
அதனால காங்கிரஸ் கவட்டுக்குள்ளேயே கவிழ்ந்து கிடந்தாரு. இப்ப அதுக்கு அவசியம் இல்லைங்க.
காங்கிரஸ் அடுத்து ஆட்சிக்கு வராதுன்னு இவருக்கு பொறி தட்டினதுனால அமைச்சரவையில் இருந்து கழண்டுக்கிட்டாரு.
இப்ப நாலு மாநில தேர்தலில காங்கிரசுக்கு பாரதிய ஜனதா ஆப்படிச்சதாலே குளிர் விட்டுப் போச்சு.
இனி செத்தவங் கையில் வெத்தலை பாக்கு வச்சு என்ன புண்ணியம். ஆவேச அறிக்கையை அவுத்து விடுறாருங்க.
பல ஆண்டுகளா கலைஞரோட குட்டிக் கர்ணங்களை கண் குளிர பாத்தவங்களுக்கு இது ஆச்சரியமில்லங்க.
ஆனா, அதை சாணக்கியத்தனமுன்னு இந்த விவரங்கெட்ட வெங்காயங்க சொல்றதைப்பாக்கும்போது தமிழனா பொறந்ததுக்காக நாக்கைப் பிடுங்கிக்கிட்டு சாகலாமுன்னு தோணுதுங்க.


எப்படிங்க இவங்களுக்கு மட்டும் மனசு வந்து நன்றி மறக்க முடியுது.
பாவமுங்க... கலைஞரு நல்லவரு.. வல்லவரு... நாணயமானவரு.. நம்பிக்கையானவரு. நாக்கு சுத்தமானவரு..வாக்குச் சுத்தமானவரு..
இப்படி பேசிக்கிட்டு இருந்த காங்கிரஸ் தலைவருங்கதான் என்ன சொல்றதுன்னு தெரியாம பேந்தப் பேந்த முழிச்சிக்கிட்டு இருக்கிறாங்க.
சொந்தக் குடும்ப நலனுக்கா எந்த நிலைக்கும் இறங்குவாரு கலைஞருங்கிறதை எத்தனை முறை மொத்துப் பட்டாலும் காங்கிரஸ் தலைவருங்களுக்கு புரியறதே இல்லைங்க.
கல்லாக் கட்ட தயாராயிட்டாரு கலைஞர். இனி யாரு தலையில கல்லைத் தூக்கிப் போடப் போறாரோ...

Sunday, September 29, 2013

மோடி பிரதமரா... அட போங்க... அத்வானி விடுவாரா...?


இந்திய அரசியல் மோடி என்ற பெயரால் அதிர்ந்து கொண்டிருக்கிறதுங்க.

பேதி மாத்திரை சாப்பிடாமலேயே காங்கிரஸ் தலைவர்கள் பலர் கக்கா போய்க் கொண்டிருப்பதாக தகவல் வந்து கொண்டிருக்குதுங்க.

திருச்சியில் மோடி கூட்டத்திற்கு லட்சக்கணகாக தொண்டர்கள் படையெடுத்தது தமிழ்நாட்டுத் தலைவர்களின் தூக்கத்தை கெடுத்திருப்பதாக கூறப்படுதுங்க.



டெல்லியில் மோடியின் பேச்சு... கூடிய கூட்டம்... இந்திய நாட்டின் தலைநகரத்தைக் கிடுகிடுக்க வைச்சுருக்கங்க.

இண்டர் நெட்... பேஸ் புக்.. டுவிட்டர்.. என எங்கு பார்த்தாலும் தாடிக் கதாநாயகன் மோடி தாங்க.

சரி. இது மோடியை பிரதமர் நாற்காலியில உக்கார வைக்குமா?... குடும்ப அரசியலுக்கு நெத்தி அடி கொடுக்குமா...?

இந்த சிக்கலான கேள்வியைப் பற்றி சிந்திப்பது அவசியமுங்க...

பாரதிய ஜனதா கட்சிக்கு முகம் தெரிந்த எதிரி காங்கிரஸாக இருந்தாலும் முகம் தெரியாத எதிரி பாரதிய ஜனதா கட்சிதாங்க.



பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வர்ற வாய்ப்பு ஏற்படும்போதெல்லாம் அந்தக் கட்சியின் பெரிய தலைவர்களுக்கு பிரதமர் கனவு வந்து பிராண்ட ஆரம்பிக்குமுங்க.

அதனால ஒருத்தர் காலை ஒருத்தர் வாரி விட உற்சாக உழைக்க ஆரம்பிச்சுடுவாங்க.

காங்கிரஸ் செய்ய வேண்டிய வேலையை சொந்தக் கட்சிக்காரங்களே கணக்கா செய்வாங்க.

இதுக்கு அவங்க எப்போதும் வெக்கப்பட்டதே கிடையாதுங்க. கர்நாடகவாவைப் பாருங்க.

எடியூரப்பா எப்படி பிரச்சினையைக் கிளப்பி தனியா போய் ஆட்சியைக் காங்கிரஸ் கட்சிக்கு தாரை வார்த்துக் கொடுத்தாரு..



அதுக்கு அவரு வெக்கப்பட்டாரா... வேதனைப்பட்டாரா... என்னால்தான் பாரதிய ஜனதா மண்ணை கவ்வியது என பெருமையா வேறு பேசினாருங்க.

இப்படிப்பட்ட தனித்தன்மை பாரதிய ஜனதா கட்சித்தலைவர்களுக்கு இருக்குங்க.

எப்படியாவது பிரதமர் நாற்காலியில உக்காந்திடனுமுன்னு கங்கணம் கட்டிக்கிட்டு இருக்கிற அத்வானி... மோடிக்கு முட்டுக்கட்டை போட மும்முரமா இருப்பாருங்க.

அப்புறம் என்ன... தோல்வியின் படிக்கட்டுல நிக்கிற காங்கிரஸ் மறுபடியும் ஆட்சிக்கு வருமுங்க..  ராகுல் காந்தி முதல்ல பிகு பண்ணிக்கிட்டு பிரதமர் மகுடத்த பிரமாதமா சூட்டிக்கிட்டு வலம் வருவாருங்க.

Sunday, September 22, 2013

கிளம்பிட்டாருய்யா... வைகோ கிளம்பிட்டாரு....

இலங்கை வடக்கு மகாண தேர்தலில தமிழர் கூட்டமைப்பு அமோகமான வெற்றி கிடைச்சிருக்குங்க. இது ஜனநாயக மறுமலர்ச்சி என்பதில் சந்தேகமே இல்லைங்க.



ஆனா, இவங்க நிம்மதியா இருக்க தமிழ்நாட்டுதலைவருங்களுருக்கு பொறுக்குமா.. முதல்ல நம்ம வைகோ முண்டா தட்டிக்கிட்டு கிளம்பிட்டாருங்க.

வைகோவே யாழ்பாணத்துக்கு போய் பிரச்சாரம் பண்ணி வெற்றிக்கனியை தட்டிப் பறிச்சுக்கிட்டு வந்த மாதிரி பந்தா பல்லுச் சிலம்பம் ஆடிக்கிட்டு இருக்காருங்க.

முன்னாடி இப்படிப் பேசித்தான் விடுதலைப்புலிகளை சுடுகாட்டுக்கு அனுப்பி புண்ணியம் தேடிக்கிட்டாரு. இப்ப சனியன் பிடிச்ச வாயால சடுகுடு விளையாட ஆரம்பிச்சுருக்காருங்க.

தன்னோட பிள்ளை குண்டியில இருக்கிற அழுக்க கழுவுறதை விட்டுப்புட்டு... பக்கத்து வீட்டு பிள்ளைக்கு பல்லு விளக்க கிளம்புற அசிங்கம் புடிச்ச வேலையை  இவரு விடவே மாட்டேங்கிறாருங்க.

வைகோ சாமி... கொஞ்சம் வாயைப் பொத்திக்கிட்டு இருங்க சாமி.. இனிமேலாவது இலங்கைத் தமிழருங்க நிம்மதியா இருக்கட்டும்.

Thursday, April 18, 2013

அறியா மக்கள்..... ஆழிப்பேரலை ஆனால்.........!


பெங்களூருல குண்டு வெடிச்சு நாடே கொந்தளிப்பில கிடக்குதுங்க. அமெரிக்கா பாஸ்டன் நகரில வெடிச்ச குண்டோட மிச்சம்தான் பெங்களூரல பிரதிபலிச்சிருக்குன்னு ஒரு பேச்சு அடிப்பட்டுக்கிட்டு இருக்கு.

நண்டு கடிச்சாவே நம்மாளு நாலு காதம் பின்னங்காலு பிடரியில அடிக்க ஓடுவானுங்க. குண்டு வெடிச்சா என்ன கதை ஆகுமுங்க.

குண்டு வெடிச்சது பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்துக்கு பக்கத்தில... இந்த குண்டு வெடிப்போட இலக்கு நாங்கதான்னு பாரதிய ஜனதா கட்சி பதட்டமா அறிக்கை விட்டுருக்கு.



குண்டு வெடிப்பில அரசியல் ஆதாயம் தேடுற அசிங்கமான காரியத்தில் பாரதிய ஜனதா கட்சி இறங்கி இருக்குன்னு காங்கிரஸ்கட்சி கண்டனக் கணைகளை பாய்ச்சி இருக்கு.

பொது மக்களே... நீங்க எவ்வளவு காலத்துக்குத்தான் புரியாத புளியமரமா நிக்கப்போறீங்க.

இவங்க ரெண்டு பேருக்குமே குண்டு வெடிச்சதப்பத்தி கவலை இல்லை. இது யாருக்கும் ஆதாயமாக போயிடக் கூடாதுங்கிறதுதான் பொச்சரிப்பு.

குண்டு வெடிப்பு நம்ம நாட்டு பாதுகாப்புக்கு ஏற்பட்டிருக்கிற பயங்கர இழுக்குங்கிறது
நாசமாப் போன ரெண்டு கட்சிக்காரனுங்களுக்கும் நடு மண்டையில உரைக்கவே இல்லை.

இவனுக ரெண்டு பேரும் இப்படி சண்டை போட்டுக்கிட்டா குண்டு வச்சவனுங்களுக்கு கொண்டாட்டமாக இருக்காதுங்களா.



இலங்கை ராணுவம் நம்ம நாட்டு மீனவர்களை குறிப்பா தமிழ் நாட்டு மீனவர்கள் குண்டியிலேயே சுடுறானுங்க. அதப்பத்தி மத்திய அரசு கவலைப்படலை.

பக்கத்து நாடான பாகிஸ்தானுல சிறுபான்மையா இருக்கிற இந்து மக்கள் படாதபாடு படுறாங்க. ஆனா அதைப்பத்தியும் கவலை இல்லை.

காஷ்மீருக்குள்ள பூந்து தீவிரவாதிகள் கலக்குறாங்க. அது குறித்தும் இந்திய அரசின் இதயம் படபடக்கல.

ஆனா, பதவியில ஒட்டிக்கிட்டு இருக்க இவங்க படுற பாடு இருக்கே. அது கேவலத்திலயும் மகா கேவலமா தெரியலைங்களா?

மக்களைப்பத்தி கவலை இல்லை. பாதுகாப்பைப்பத்தி கவலை இல்லை. அமைதியைப் பத்திக் கவலை இல்லை. பக்கத்து நாட்டுக்காரன் நம்ம வாயில பருப்புக் கடைஞ்சாலும் கவலை இல்லை.

எப்படியாவது பதவியில ஒட்டிக்கிட்டு இருக்கணும். ஆயிரங்கோடி லட்சங்கோடின்னு ஊர்ப்பணத்தை ஆட்டையப் போடணும். இதுதான் அவங்களோட ஒட்டு மொத்த சிந்தனை. சி பி ஐ கேஸ் போட்டாலும் இவனுக வெட்கப்பட மாட்டாணுங்க.



ஊர்ப்பணத்தை சுட்டு தேர்த்திருவிழா நடத்தும் இவங்களை அப்பாவி ஜனங்க கண்ணை மூடிக்கிட்டு நம்புறதுதான் இவங்களோட பலம்.

அதோட நம்ம ஜனங்க ஒரு விஷயத்தில மட்டும் திருவள்ளுவர் சொன்னதை மறக்காக கடைப்பிடிக்கிறாங்க. "நன்றி மறப்பது நன்றன்று நன்றல்ல அன்றே மறப்பது நன்று" இதுதாங்க அந்த திருக்குறள்.

இதுனால தான் அந்த நாசமாப் போன அரசியல்வாதிங்க நாட்டை கூறு போட்டு கும்மியடிச்சுக்கிட்டு இருக்கிறாங்க.

நம்ம ஜனங்க மூனு வகையில அடிமையாக இருக்காங்க. ஒன்னு ஆன்மீகம். ரெண்டு அரசியல். மூனு சினிமா.

சாமியாருங்க உண்மையா போலியான்னு பார்க்கிறதில்லை. அரசியல்வாதிங்க மனச்சாட்சி உள்ளவங்களா மக்களை ஏமாத்தாதவங்களான்னு ஆராய்வதில்லை. சினிமா ஒரு நடிப்பு... சினிமாகாரங்க சம்பளம் வாங்கிக்கிட்டுத்தான் நடிக்கிறாங்க. திரையில நடிக்கிற மாதிரி எந்த நடிகரும் உண்மை வாழ்க்கையில் இருக்கிறதில்லைங்கிறதை மக்கள் உணர்வதில்லை.

இந்த அப்பாவித்தனமான ஏமாளித்தனம்தான் இந்தியாங்கிற நாடு உலக அளவில மத்த நாடுகள் கிள்ளுக்கீரையாக நினைக்கிறதுக்கு மூல காரணம்.

மக்கள் என்னைக்காவது அறியாத்தனமான அடிமைத்தளையில இருந்து விடுபட்டு ஆழிபேரலை மாதிரி கொங்கி எழுந்தாங்கன்னா.... ஊரை சுரண்டித் திங்கிற அரசியல்வாதிங்க நாறிப் போயிடுவாங்க...

இந்த மாற்றம் இன்னைக்கு இல்லாவிட்டாலும் என்னைக்காவது வரும்... கண்டிப்பாக வரும்.

 


Thursday, April 11, 2013

ஐயையோ அஞ்சலி... எல்லாருக்கும் நெஞ்சுவலி.... !



அஞ்சலியோ.... குஞ்சலியோ.... ஒரு நடிகை காணாம போயிட்டாளாமாம்... என்னமோ இந்தியா தயாரிச்ச அக்னி ஏவுகணையே காணாம போயிட்ட மாதிரி பத்திரிக்கைக்காரனும் டிவிகாரனும் பத்திக்கிட்டு எரியுறானுக.

அஞ்சலிய கண்டுபிடிக்கலைன்னா இந்தியாவுக்கு எதிரா பொருளாதாரத்தடை விதிக்க வேண்டி வருமுன்னு அமெரிக்கா எச்சரிக்கை  விடுத்திருக்கிறதா கேள்விங்க. ஜெனிவாவில தீர்மானம் போடுற திட்டம் இருப்பதாகக்கூட சொல்றாங்க.



அறிக்கை விடுறதுக்காவே ஐ. நா. சபை செயலாளராக இருக்கிற பான் கி மூன் முப்பது பக்க அறிக்கை ரெடி பண்ணி, அதை வாசிக்க முக்கிக்கிட்டு இருக்கிறதா பேசிக்கிறாங்க.

அந்த அளவுக்கு அஞ்சலி காணாம போன விஷயம் அகில உலக பிரச்சினையா மாறி பூமிப் பந்தே அக்னிக் குழம்பா தகிச்சிக்கிட்டு இருக்கிற மாதிரி நம்ம ரசிகக் கண்மணிக கண்ணீரும் கம்பலையுமா தவிக்கிறாங்க.

காவல்துறையில் இருக்கிற ஒரு அதிகாரி காணாமப் போயிட்டா கூட அதைப்பத்தி கமிஷனர் கவலைப்பட மாட்டார்... ஆனா... கர்மம் பிடிச்ச சினிமாகாரிங்க காணாமப் போயிட்டா... பசி நோக்காம... கண் துஞ்சாம... மெய் வருத்தம் பாராம.. பம்பரமா சுழலுவாறு..

இதில அஞ்சலி.... தானா காணாம போனாரா... இல்லை அவர யாரும் கடத்திக்கிட்டு போயிட்டாங்களான்னு பல கோணங்கள்ள போலீஸ் விசாரணையை முடுக்கி விட்டுருக்கிறதா மைக்க பாத்து பல்லைக் கடிச்சுக்கிட்டு பேட்டி கொடுப்பாரு.

அப்புறம் இதுக்கு ஒரு தனி டீம் அமைச்சு நம்ம வரிப்பணத்தை தின்னு தேடுதல் வேட்டை நடத்துவாங்க.

ஆனா அந்த அம்மா... தனக்கு பிடிச்ச ஆளோடு எங்கயாவது ரூம் போட்டு தமிழ் நாட்டுல நடக்கிற காமெடிய டிவில பாத்து விலா வலிக்க சிரிப்பாங்க.



அஞ்சலிய ஏமாத்தினது அவுங்க சித்தியா... நடிக்க வாய்ப்புக் கொடுத்த இயக்குனரான்னு நம்ம ரசிக குஞ்சுமணிங்க பட்டிமன்றம் நடத்திக்கிட்டு இருப்பாங்க.

நேத்துவரைக்கும் அஞ்சலியோட அல்ஜா குல்ஜா பண்ணுன ஆளுங்க அஞ்சலியா... அப்படின்னா யாருன்னு ஆச்சரியத்தோடு கேப்பாங்க.

அஞ்சலியும் இயக்குனரும் அலப்பறைன்னு படத்தோட செய்தி போட்ட பத்திரிக்கைகாரனுங்க... இதையும் புதுச்செய்தியா போட்டு புளகாங்கிதம் அடைவாங்க..

இதக் கொஞ்சம் மாத்துகங்கப்பா... ரசிக்கிற விஷயம் வேற... ருசிக்கிற விஷயம் வேறன்னு மக்களுக்கு புரிய வைக்க முயற்சி பண்ணுங்கப்பா... அஞ்சலி செய்தி அரைப்பக்கமும் அணுசக்தி விஞ்ஞானி அப்துல் கலாம் செய்தி அரை இஞ்சு வரும்போது மனசு வலிக்குதுப்பா.. நீங்களும் மாறுங்கப்பா..

அஞ்சலி காணாமப் போனதுக்கு அஞ்சலி கவிதை பாடிக்கிட்டு இருக்காம... அதை ஒரு செய்தியா மட்டும் பாருங்கப்பா...

Thursday, March 28, 2013

அல்வா அழகிரிக்கா... அதிமுவுக்கா....!




"ஆசைக்கு ஒன்று.. ஆஸ்திக்கு ஒன்று..." அடுத்த குழந்தை இப்போது வேண்டாம்... இரண்டுக்கு பிறகு எப்போதும் வேண்டாம்" இது தமிழ் நாட்டு அரசாங்கத்தின் குடும்பக் கட்டுபாடு திட்டம்.

அடித்தட்டு மக்கள் இதக் கடைப்பிடிக்கிறாங்களோ இல்லையோ கண்டிப்பாக அரசியல்வாதிகள் கவனத்தில வைச்சிருக்கனுமுங்க.. இல்லாட்டி இந்த தொன்னூறு  வயசில கண்ணீரோடு காலத்தைக் கழிக்க வேண்டிய கட்டாயம் கலைஞர் கருணா நிதிக்கு ஏற்பட்டிருக்குமா?

செயற்குழுவாவது மண்ணாங்கட்டியாவதுன்னு அழகிரி... அழுகிரியா மாறி மதுரைக்கு ஜூட் விட்டுட்டாரு.. தலைவரு உத்தரவு போட்டா தீக்குளிக்கக் கூட தயாரா இருக்கான் திமுக தொண்டன்.



ஆனா ஆசையா பெத்த மகன் மீசையை முறுக்கிக் கிட்டு கிளம்பிட்டாரு.. தொண்டனுக்குன்னா முரசொலியில கண்ணீர் கடிதம் எழுதி வென்னீர் ஊத்தியிருப்பாரு.. இங்க அந்தப் பருப்பு வேகலை...

தந்தைக்கும் மகனுக்கும் நடுவில நடக்கும் பிரச்சினையை வச்சு கந்தர்ப்பம் சுட்டுப் பாக்கலாமுன்னு ஜெயலலிதா நினைக்கிறாருங்க. 2001 ல இது சாத்தியப்பட்டிருக்கலாமுங்க. ஆனா. இப்ப அழகிரிக்கு அல்வா குடுக்க முடியுமா?

அன்னைக்கு அவரு அரசியல்ல கத்துக்குட்டிங்க.. இப்ப அப்படி நினைக்க முடியாதுங்க. சந்தேகக் கேசுல ஜெயிலுக்கு போயி தில்லாலங்கடி தாதாவாக திரும்பி வந்த மாதிரி டெல்லி அரசியல் அவரைக்  கில்லாடி அரசியல்வாதியாக மாத்தி இருக்க நிறைய வாய்ப்பு இருக்குங்க.



இந்த நிலையில அவரை வச்சு பகடையாட அதிமுக நினைக்கிறது.. சண்டி மாட கட்டி வண்டி இழுக்க முயற்சிக்கிறதுக்கு சமமுன்னு அரசியல்களத்தில நிக்கிற அடிமுட்டாள் தொண்டனுக்கு கூட நல்லா தெரியுமுங்க.

அதிமுக ஆட்சிக்கு வந்தவுடனே பெரிய  பெரிய திமுக தலைவருங்களை எல்லாம் கபக்கு கபக்குன்னு அள்ளி ஜெயில்ல போட்டாங்க. மத்திய அமைச்சரா இருந்ததால அழகிரிக்கு அந்த சிக்கல் வரலை.

இப்ப அமைச்சர் பதவி அம்பேல்.. ஆனா.. அவரை தூக்க அதிமுக விரும்பலை. கழகத்தில அவரு செய்யிற கலகம் நாடாளுமன்ற தேர்தலில நல்ல அறுவடைய தரும்கிறது அதிமுக தலைமையின் கணக்கு.

ஆனா.. அது தப்புக்கணக்குங்கிறது எதிர்காலம் உணர்த்தப் போகிற உண்மைங்கிறதை அதிமுக உணருவது புத்திசாலித்தனுமுங்க..

அழகிரி தலைமைப்பதவிக்கு அடம்பிடிப்பாரு.... ஆத்திரப்படுவாரு.. ஆவேசப்படுவாரு.... அதே நேரத்தில அதுக்காக திமுக அஸ்திவாரத்துக்கு வெடி வச்சாருன்னா.. பாதிக்கப்போற முதல் ஆள் அவருதாங்கிறத அவரைச்சுத்தி இருக்கிறவங்க நல்லாவே சொல்லி இருப்பாங்க.

அல்வா திங்கப் போறது அழிகிரியா... அதிமுகவா... பொறுத்திருந்து பார்ப்போம்..






காங்கிரஸ் புளுக்கு.... அமெரிக்கா சுளுக்கு.... !



"செத்தவன் காலு செமக்கிறவன் தலைமேலே"ன்னு ஒரு பழமொழி இருக்குங்க... இந்தப் பழமொழிக்கு பொருத்தமானவங்க நம்ம தமிழ் நாட்டு காங்கிரஸ் தலைவர்களுங்க..

டெல்லி தலைவருங்க என்ன சொல்றாங்களோ.. அப்படியே ஆமா போடுறதில.. இவங்களுக்கு இணையா உலகத்தில யாரையும் சொல்ல முடியாது.

தலையாட்டி தலையாட்டி தஞ்சாவூர் பொம்மையே தலைகுனிற அளவுக்கு கழுத்துல சுளுக்கு புடிச்சவங்க..



இலங்கைக்கு எதிரா அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்துல என்ன இருக்கிறதுன்னு தெரியாது. இது டெல்லி காங்கிரஸார் பல்லியா கத்திய வாசகம்.

இங்க ஞானதேசிகன்... தங்கபாலுன்னு எல்லாரும் இந்தக் கருத்தை வாசனை மாறாம வாந்தி எடுத்தாங்க..

உலகப் பெருந்தலைவர் கலைஞர் கருணா நிதிகூட இந்த வாந்தியைப் பிடித்து தன் பங்குக்கு பந்தி வைத்தாருங்க.

ஆனா... இப்ப அமெரிக்ககாரன் என்ன சொன்னான் பாத்திங்களா.. நாங்களும் இந்தியாவும் சேர்ந்துதான் தீர்மானத்தையே தீர்மானித்தோம். இந்தியாவுக்கு தெரியாம நாங்க தீர்மானம் போடுறதா... சட்டியத் தூக்கி சட்டுன்னு கவுத்துப்புட்டான்.

சரி... இதுக்கு முன்னாடி ஆந்தை மாதிரி அலறுன காங்கிரஸ் கரிச்சான் குஞ்சுங்க இப்ப என்ன சொல்லும். சாணின்னு நெனைச்சு 'ஆயி' ல்ல கையை வச்ச கதையா அலங்க மலங்க முழிச்சிக்கிட்டு இருக்குமுங்க..



அமெரிக்ககாரன் எப்படி சித்து விளையாட்டு காட்டுறான் பாத்திங்களா... அவன் நினைச்சா ஒரு நிமிசத்தில ராஜபக்சேவை குற்றவாளியாக்கி சதாம் உசேன் மாதிரி சட்னி பண்ண முடியுமுங்க.

அதனால அவனுக்கு என்ன லாபம். இந்தியாவுக்குள்ள இருக்கிற ஜனங்க அடிச்சுக்கிட்டு தலையப் பிச்சுக்கிட்டாத்தானே அவன் வந்து பஞ்சாயத்து பண்ண முடியுமுங்க.

என்ன எழவோ... அன்னைக்கும் இன்னைக்கும் என்னைக்கும் செத்துக்கிட்டு இருக்கிறது நம்ம தமிழ் ஜனங்கதானுங்களே...

ஆனா... இந்த அரசியல்வாதிங்க என்னைக்கும் திருந்தவும் மாட்டாங்க. வருந்தவும் மாட்ட்டாங்க.. ஏன்னா.. அவங்களுக்கு மனச்சாட்சி இருந்தாத்தானே.. அது சரி மனசுன்னு ஒன்னு இருந்தாத்தானே மனச்சாட்சி இருக்குமுங்க....