Saturday, March 27, 2010

பென்னாகரம் தொகுதி வெற்றி யாருக்கு?

தமிழ் நாட்டில் பென்னாகரம் தொகுதி இடைத்தேர்தல் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பிரயாணம் செய்வதற்கு உடல் நிலை ஒத்து வராத நிலையிலும் கூட தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்று இருக்கிறார் என்றால் இந்தத் தேர்தல் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதைப் பார்த்துக் கொள்ளுங்கள்.



இந்த தொகுதியில் பலர் போட்டி போட்டாலும் நான்கு கட்சிகள்தான் பிரதானமானவை. திமுக, அதிமுக, பாமக. தேதிமுதிக. இந்தக் கட்சிகளின் தலைவர்கள் எல்லாருமே தங்களுக்குத்தான் வெற்றி என மார் தட்டுகிறார்கள். இதனிடையே லயோலா கல்லூரி கருத்துக் கணிப்பு திமுக வெற்றி பெறும் என கூறுகிறது.. பாமக தலைவர் மருத்துவர் ராமதாஸ் இதை ஒத்துக்  கொள்ளவில்லை. திமுக எங்களிடம் திக்கு முக்காடப் போகிறது என தந்தையும் மகன் அன்பு மணியும் பீரங்கி பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

இந்த தேர்தலில் அதிமுகதான் வெற்றி பெறப்போகிறது. அடுத்த சில நாட்களில் ஆட்சி மாற்றம் ஏற்படப்போகிறது என பிரச்சாரத்தின் போது ஒரு "காமெடி" வெடிகுண்டை வீசி விட்டு பேசிய அம்மா, களைப்புத் தீர தோழியுடன் ஓய்வெடுக்கப் போய்விட்டார்.



கேப்டன் விஜயகாந்தின் தன்னம்பிக்கைதான் ஆச்சரியப்படும் வகையில் இருப்பதாக சொல்லப்படுகிறது. வைப்புத் தொகையை வாங்க முடியாது என்பது தெரிந்தும் சங்கடப்படாமல் பிரச்சாரத்தில் சங்க நாதம் எழுப்பு வருகிறார் என அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

" ஒரு கண்ணோட்டத்தில் பார்த்தால் இந்த காலகட்டத்தில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறுவது போல் தோற்றம் அளிக்கும். அந்த வெற்றி ஜனநாயக முறைப்படி சரி என்றாலும் அது திமுகவுக்கு கிடைத்த வெற்றி என கருத முடியாது.



அதிமுக, பாமக, தேமுதிக போன்ற எதிர்க்கட்சிகளின் விவேகமற்ற நடவடிக்கைகளால் அவர்களாக திமுகவுக்கு தாம்பளத்தில் வைத்து  கொடுத்தவை அந்த வெற்றிகள் எல்லாம்.



திமுக- காங்கிரஸ் கூட்டணிக்கு இடையே சின்னச் சின்ன பிரச்சினைகள் இருந்தாலும் தலைமைத்துவ மட்டத்தில் வலுவாகவே உள்ளது. அதனால் பெரும்பாலும் வாக்குகள் சிதற வழி இல்லை. மேலும் திமுக தலைவர்களின் அணுகு முறையும் துணை முதல்வரின் ஆடம்பரம் இல்லாத நடவடிக்கைகளும் மக்களை ஈர்த்திருக்கிறது.

ஆனால், எதிர் அணியில் அனைத்துக் கட்சிகளும் சிதறிக்கிடக்கின்றன. மேலும் ஒருவரை ஒருவர் வசைபாடிக்கொள்ளவும் தயங்குவதில்லை. மருத்துவர் ராமதாஸ் கூட்டணி மாறுவதில் ஒரு குத்தாட்டமே நடத்தக் கூடியவர். அதனால் அவருடைய பேச்சுக்களை மக்கள் நம்பத் தயாராக இல்லை.  நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் ஈழத் தமிழர்களுக்காக கண்ணீர் வடிக்கும் ஒரே தலைவர் என்ற தோற்றத்தை மக்கள் தொலைக்காட்சி மூலமாக ஏற்படுத்தினார். இப்போது அந்த பேச்சு... காற்றோடு போச்சு...

ஜெயலலிதாவுக்கு வேறு ஏதோ பிரச்சினை என மக்கள் கருதும் நிலைக்கு ஆளாகி இருப்பதாக அதிமுக தொண்டர்களே நினைக்கும் அளவுக்கு அவருடைய நடவடிக்கைகள் உள்ளன. இரண்டு நாள் வெளியே தலை காட்டினால் இரண்டு மாதங்களுக்கு தோழியோடு சோழி விளையாடப் போய் விடுகிறார். ஏதோ ஒப்புக்கு கட்சி நடத்துவதுபோல் இருப்பதாக ஒரு பேச்சும் அடிபடுகிறது.



விஜயகாந்தின் அரசியல் வீரத்தில் மக்களுக்கு இருந்த ஈர்ப்பு குறைந்து விட்டதாகவே தெரிகிறது. ஏனென்றால் கூட்டணி இல்லாமல் போட்டியிட பெரிய கட்சிகளே பிரம்மப் பிரயத்தனப்படும்போது இவர் தெய்வத்தோடும் மக்களோடும் தான் கூட்டணி என சின்னப் பிள்ளைபோல் சொல்லிக் கொண்டிருப்பதை மக்கள் ரசிப்பது மாதிரி தெரியவில்லை.

ஆனால், இவர்கள் அனைவருமே தங்களால் முடிந்த வாக்குகளை மக்களிடம் இருந்து பெற்று வலிமையை நிலை நாட்ட போட்டி போடுகிறார்கள். விளைவு ... வீழ்ச்சி இவர்களுக்கு வெற்றி திமுக கூட்டணிக்கு...

தேர்தல் முடிந்த பின்னர்  திமுக கூட்டணி பெற்ற வாக்குகளையும் இவர்கள் பெற்ற வாக்குகளையும் கூட்டிப் பாருங்கள். தார்மீக வெற்றி யாருக்கு என்பது தெரியும். இதற்கு என்ன காரணம் ஈகோ... கூட்டணி தலைமை யாருக்கு என்ற ஈகோ... இந்த நிலை தொடரும் வரை திமுகவை வீழ்த்துவது என்பது கனவிலும் நடக்காத காரியமாகும்.

ஒருவேளை துணை முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் மத்திய அமைச்சர் முக. அழகிரிக்கும் உட்கட்சிச் சண்டை வந்து திமுக பிளவு பட்டாலும் கூட உதய சூரியன் சின்னம் வைத்திருக்கும் தரப்பும்   காங்கிரசும் இணைந்து நின்றால் அந்தக் கூட்டணிக்கு வெற்றி நிச்சயம்.

Friday, March 26, 2010

சபாஷ் சரியான தீர்ப்பு... குஷ்பு அக்காவுக்கு ஜே...

கல்யாணம் பண்ணிக்காமலே ரெண்டு பேரும் கசமுசா பண்ணிக்கிட்டா தப்பில்லைன்னு தீர்ப்பு சொல்லி இருக்காமே டெல்லி நீதி மன்றம். சபாஷ் சரியான தீர்ப்புங்க.



இதுவரை போலீசுக்கு பயந்துக்கிட்டு இருந்த கும்மாங்குத்து ஆசாமிங்களுக்கெல்லாம் இனி கொண்டாட்டம்தாங்க. தள்ளிக்கிட்டு வந்த சில்லோட லாட்ஜில போயி ரூம்பு கேட்டா முந்தி மாதிரி கல்யாணம் ஆயிருச்சா.. கழுத்தில கயறு கிடக்கா.. இல்லாட்டி ரூம் தரமுடியாது போ.... போ...ன்னு மேனேஜர்ரு விரட்ட முடியாதுங்க.

போடா.. போடா... டுபுக்கு.. இந்தா பாருடா தீர்ப்பு... உங்களுக்கெல்லாம் குஷ்பு வச்சிட்டாடா ஆப்பு....ன்னு சும்மா சிம்பு மாதிரி சிலா வரிசை எடுத்திற மாட்டாங்க.

இனிமே லாட்ஜுக்கு போலீசு ரெய்டு போற ரவுசெல்லாம் காட்டமுடியாதுங்க. உள்ள இருக்கிறது  சொந்த... சரக்கா... தள்ளிக்கிட்டு... வந்த சரக்கா...ன்னு விசாரிக்க ஆரம்பிச்சா.... நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காதா போலீசே ஒழிக....சட்டத்தை மதிக்கத் தெரியாத சாக்கடையே ஒழிக....ன்னு கோஷம் போட்டு போலீஸ்காரங்க வாயில லத்திய விட்டு ஆட்டிட மாட்டாங்க.

சுந்தர் சிக்கு முன்னரே பிரபு வோட சொக்கட்டான் விளையாடி அரிசி குத்துனதாக அக்கா குஷ்பு மேல அடுக்கடுக்கா பாராட்டுப் பத்திரம் வாசிச்சதா ஒரு பேச்சு அடிபட்டதுங்க. இது எல்லாருக்குமே தெரிஞ்சதுதானுங்களே... அதுனால தமிழ் பண்பாட்டைக் காப்பாத்த செஞ்ச இந்த முயற்சிக்கு நாம குஷ்புவுக்கு இன்னொரு கோவில் கட்டலாமுங்க.

ஆகா...அருமையான தீர்ப்புக்கு வழி வகுத்த குஷ்பு அக்கா வாழ்க.... அற்புதமான இந்தத் தீர்ப்பை சொன்ன நீதிபதி வாழ்க....இதே மாதிரி அம்மாவும் மகனும் இருக்கலாம்.... அண்ணனும் தங்கையும் நடக்கலாம்.. அப்பனும் மகளும் ரசிக்கலாமுன்னு பேசி அதுக்கும் அக்கா குஷ்பு நல்ல தீர்ப்பு வாங்கி கொடுத்தா நம்ம தமிழ் பண்பாடு மேலும் மேலும் செழிந்தோங்குமுங்க.

Tuesday, March 23, 2010

கொஞ்சிக் கொஞ்சி நித்திக்கு எண்ணெய் தேய்க்கும் ரஞ்சி

நித்திக்கு ரஞ்சி ( ரஞ்சிதாவோட சுருக்கமுங்கோ) கொஞ்சி கொஞ்சி எண்ணெய் தேய்ச்சி ( எண்ணெய்யோ வேறு என்ன எழவோ) விடுற காட்சியை பாத்துப் பாத்து பரவசமானேனுங்கோ. நீங்க பாத்தீங்களா....



அட...அட... அட... என்னா கிளுகிளுப்பு.. என்னா... சிலுசிலுப்பு... நான் சொல்றது நம்ம ரஞ்சி அக்கா முகத்திலங்கோ... ஏதோ ஒரு தைலத்தை எடுத்து ரஞ்சி அக்கா.. நித்திக்கிட்ட வருறாங்க. நித்தி மெதுவா காவி துணியை நீக்குறாரு.. ஒரு தாய் பச்சக்குழந்தையை படுக்க வச்சு பதமா எண்ணெய் தேக்கிற மாதிரி குறும்புச் சிரிப்போட நெருங்கி நின்னு நீவி விடுறாங்க.

முகத்தில தேய்க்கும் போது செல்லமா ஒரு சின்ன தட்டு தட்டுறாங்க. காது இடுக்கைக் கூட ரஞ்சி அக்கா விடலைங்க. அப்ப நித்தி உடுப்பைக் கழட்டுற அழகே அழகுங்க. நித்தி உடம்பு புடலங்காய் மாதிரி வளைவாத்தாங்க இருக்கு. தெம்பு கொஞ்சம் கம்மி மாதிரிதான் தெரியுதுங்க. நான் சொல்றது உடம்பு தெம்பை மட்டும்தாங்க. மத்ததைப் பத்தி இல்லைங்க.

நித்தியோடு நெத்தியில வலிக்காம வாழத்தண்டு கையால ரஞ்சி அக்கா தடவுறாங்க.. மண்டைக்குள்ள விரலை விட்டு நித்தியோட நீளமான முடிக்குள்ளாற கிச்சுக் கிச்சு தாம்பளம் விளையாடுறாங்க... அந்தக் காட்சியில ரஞ்சி முகத்தில பொங்கி வழியிற ஒளியே அலாதியானதுங்கோ... சாமியாரு மத்தவங்களுக்கு குண்டலினியை எழுப்பினாரோ இல்லையோ ரஞ்சி அக்காவுக்கு உறியடிச்சு உசுப்பேத்தி இருக்காருங்கோ..

ரஞ்சி அக்கா.. கிட்ட ஒரு சின்ன கேள்விங்க. ஆமா.. இந்த விளையாட்டை உங்க வீட்டுக்காரருக்கிட்ட விளையாண்டு இருந்தா புருசன் புட்டுக்கிட்டு போயிருக்க மாட்டாருங்களே.... நித்தி மாதிரி சாமியாருக்கு செய்யிற சேவையில ஆயிரத்தில ஒரு பங்கை கட்டுன கணவனுக்கு பண்ணுனா பொண்டாட்டி முந்தானைய விட்டு புருசமாருங்க தப்பிச்சு போக முடியுங்களா...

நமக்கெல்லாம் அந்த ஆசனம் இந்த ஆசனமுன்னு நித்தி சொல்லி பஜனை பாட வச்சுட்டு அது பாட்டுக்கு டிவியில குத்துப்பாட்டு பாத்துக்கிட்டு கும்மாளமா இருக்குதுங்க. ரிமோட்டை நிமிசத்துக்கு ஒருதரம் மாத்தி அத்தனை சேனலையும் அலசிக்கிட்டுத்தானே இருக்கு. சேனலே இந்தப் பாடுபட்டா மாட்டுன சேலைங்க என்ன பாடுபட்டிருக்குமுன்னு நினைக்கத் தோணுதுங்க.

இன்னொரு விஷயத்தையும் மனசு விட்டு சொல்லணுமுங்க. நியாயமுன்னா... எல்லாருக்கும் ஒன்னுதானுங்களே..... நித்தி ... ரஞ்சி பண்ணுற ரவுசு பண்பாட்டை மீறாத பல்லாங்குழி ஆட்டம் மாதிரி இருக்குதுங்க. என்னதான் நித்திக்கு நின்னு குனிஞ்சு மஜாஜ் பண்ணினாலும் மாராப்பு விலகல பாத்தீங்களா..



நித்தி கூட எசகு பிசகா நடக்காமா எண்ணெய் தேக்கிறதுக்கு தோதா உடம்பை காட்டுறாருங்க. ஒரு தடவை ரஞ்சி அக்கா தோள்பட்டையில கையை வைக்கும்போது கூட உணர்ச்சிய தூண்டுற இடங்களில உரசாம பாத்துக்கிட்டாருங்க. அதைத் தாண்டி ஒரு அடிகூட எடுத்து வைக்கலைங்க. கெமிஸ்ட்ரி ஒத்துப் போன நீ பாதி... நான் பாதி .. ஜோடி மாதிரி தானே அவங்க ரெண்டுபேரும் நடந்துக்கிறாங்க.

கணவன் மனைவி எப்படி இருக்கணுமுன்னு ரஞ்சிதா மூலமா காட்டுன நித்திக்கு.... காவிச் சாமியாருங்க உள்ளே... வெளியே.. விளையாட்டு இப்படித்தான் இருக்குமுன்னு உலகத்துக்கு நிரூபிச்ச நித்திக்கு.... பிரமச்சரியமெல்லாம் ஒரு பித்தலாட்ட வேலையின்னு பிரிச்சு மேஞ்ச நித்திக்கு.... நான் மட்டுமில்ல இனி காவி கட்டி வருற சாமியாருங்க எல்லாம் அந்தரங்கத்திலே நடத்துற சுந்தர விளையாட்டு இதுதான்னு சொல்லாம சொன்ன நித்திக்கு.... நன்றிங்க... நன்றிங்க... நம்ம தமிழ் சமுதாயத்தோடு தலை சாய்த்த நன்றிங்க.

Monday, March 22, 2010

அமெரிக்காவை அசர வைத்த நித்தியானந்தர்

நம்ம நித்தி பண்ணின அலப்பறையில அமெரிக்காவே ஆடிப்போச்சாமே... கூட்டிக்கிட்டு போற பொண்ணுங்க உடுத்தி இருக்கிற துணியை ஒன்னொன்னா அவுத்து போடச் சொல்லிட்டு நித்தி டப்பாங்குத்து குத்துமாமே.... ஆஹா... கேக்கும்போது காது இனிக்குதுங்க.... நினைக்கும்போது நெஞ்சு இனிக்குதுங்க..



நித்தியோட கதை வெளியானப்பறம் இதுமாதிரி  டையக்கோ... டம்மக்கோ...ஆடும் சில அரசியல்வாதிங்க.. அடடா...அவசரப்பட்டு அரசியலுக்கு வந்திட்டமே... நித்தி மாதிரி காவி கெட்டப்புல இருந்திருந்தா காசுக்கு  காசுமாச்சு......கசக்கலுக்கு கசக்கலுமாச்சுன்னு பொழந்து புட்பால் ஆடியிருக்கலாமேன்னு பெரு மூச்சு விடுறாங்களாம்.

ஏன் இந்த பெருமூச்சு.... எங்கிட்டோ அடிச்ச பணத்தை அண்டமா முனிவரெல்லாம் அடங்கிற அதுக்குள கொட்ட வேண்டி இருக்குதேன்னு வருத்தமாம். நித்தியைப் பாரு... சல்ஜாவுக்கு சல்ஜாவுமாச்சு ... பொட்டி பொட்டியா பணமும் ஆச்சுன்னு  படுக்கை பச்சகிளிங்க கிட்ட சொல்லிச் சொல்லி ஆத்துப் போறாங்களாம்.

அரசியல்வாதிகளுக்கிட்ட அதிகாரம் கையில இருந்தாலும் வெளிய போய் சாப்பிடுற தட்டு வெள்ளியா இருக்குமுன்னு சொல்ல முடியாதுங்களே. புதுசு புதுசா கெடைக்கிறது கஷ்டமுங்களே.... ஆனா. அதிர்ஷ்டக்கார நித்தியைப் பாருங்க எந்தப் பயமும் இல்லாம புதுப்புது தட்டுல சும்மா பொம்மலாட்டமில்ல நடத்தியிருக்கு.

காவிச் சாமி ... பாவிச் சாமியா மாறி பரிதாபமா இருக்குதுன்னு தப்பு கணக்கு போட்டுடாதீங்க. சாமியோட இன்னொரு பக்கம் டெரர்ன்னு நம்ம நண்பர் பயங்காட்டுறாரு. அதனால தான் இத அம்பலத்துக்கு கொண்டு வந்த லெனின்  எதையும் எரிக்கக்கூடிய  நெருப்பான அந்த தொலைக்காட்சிக்கு போனதாக சொல்றாருங்க.

இன்னொரு உவ்வே....ங்க.... சில கணவன்மாருங்க...  தயக்கத்தில நிக்கிற பொண்டாட்டிங்க முதுகில தட்டிக் கொடுத்து தைரியம் சொல்லி   சாமிக்கிட்ட அனுப்பிச்சிட்டு அர்ப்பணிப்பு கணவன்மாருங்க இருக்கிறதா லெனின் கருப்பன் சொல்றாருங்க.  கிராமத்தில தபால்காரனோட கொஞ்ச நேரம் தனியா பேசிக்கிட்டு நின்னாவே மனைவியோட தலையை புருசன் மாங்காயச் சீவுற மாதிரி சீவிடுறான். ஆனா இவுங்களப்பாருங்க....மேட்டுக்குடிகாரங்களாமுங்கோ..உக்கூம்....

இப்ப அமெரிக்காவில மன மகிழ் படங்க ( செக்ஸ் படத்துக்கு தமிழாக்கமுங்கோ) எடுக்கிற டைரக்டருங்க எல்லாம் நித்திய வலை போட்டு தேடிக்கிட்டு இருக்காங்களாம். இந்த சூட்ல படத்தை வெளியாக்குனா அவதார் படத்தோட சாதனையை முறியடிச்சுடலாமுன்னு மும்முரமா நிக்கிறாங்களாம். நித்தி... அமெரிக்காவ ஒரு ஆட்டு ஆட்டுங்க. அதுதான் நமது இந்து மதத்துக்கு பெருமை.

விவேகனந்தர் இந்து மதத்தின் எளிமையைப் பரப்புனாருன்னா... நித்தியானந்தர் ....... வலிமையைப் பரப்பட்டும். நமக்கெல்லாம் அது பெருமைதானுங்களே..

Friday, March 19, 2010

நித்திக்கு... விக்கி வச்ச வேட்டு




ஈசா பட நாயகன் விக்னேஷ் ... கிச்சு...கிச்சு... தாம்பளம்... கிய்யா...கிய்யா... தாம்பளம் விளையாட்டில் கில்லாடி சாமியார் நித்தியானந்தாவை ஒரு வாங்கு வாங்கி இருக்கிறாருங்க. அவரோட தைரியத்துக்கு பாராட்டுங்கோ...

விக்னேஷையும் சாமியாருக்கிட்ட கோர்த்து விட்டது ராகசுதாதானுங்களாம். வாழ்க அவரோடு சமூக சேவை.  பெரிய பணக்காரங்க,, பதவியில இருக்கிறவங்க... சினிமாக்காரங்கன்னு நிறையப் பேரு சாமியாரோட ரசிகருங்களாம்.

ஏழை பாலைங்க சாமியார தேடி போனா அதில நியாயம் இருக்குது. ஆனா ஊரை அடிச்சு உலையில போட்டு கோடி கோடியா பணத்தைச் சேத்த இந்தக் கோணங்கிங்க எதுக்குய்யா அங்க போறாங்க.



என்னதான் நம்மி நித்தி ரஞ்சிதாக்கிட்ட கொஞ்சிக் கூத்தடிச்சாலும் அவரு எல்லை மீறின மாதிரி வீடியோவில இல்லைங்க. அது நமக்கு கொஞ்சம் மன வேதனைதாங்க.

ஆனா... நித்தி எதுக்குங்க இந்தப் பம்மு பம்முறாரு. நான் பிரம்மச்சாரின்னு எப்பவாச்சும் சொல்லிருக்கனான்னு கேக்குறாரு. ஒரு வாட்டி ஞானிங்கிறாரு. இன்னொருவாட்டி ஆன்மீக ஆய்வாளர்ங்கிறாரு. அப்புறம் பாலியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கேங்கிறாரு. 

பாலியல் ஆராய்ச்சிக்குத்தான் நாராயண ரெட்டி மாதிரி பல டாக்டருங்க இருக்காங்களே... உனக்கு எதுக்கு சாமி கருமாந்திரம் புடிச்ச இந்த உவ்....வவ்...வே...வேலை. 



இது சம்பந்தமா என்னோட நண்பர் ஒருத்தரு விவாதம் பண்ணுறாரு.. அதை என்னால ஏத்துக்க முடியலைங்க. அது உண்மையா பொய்யாங்கிறதை உங்க முடிவுக்கே விட்டுடுறேங்க.

நித்தி ஆனந்த தாண்டவம் ஆடும்போது ஆம்பிளைங்களும் பொம்பிளைங்களும் ஆளு மாத்தி ஆளு கசமுசா காரியத்தில கண்ணு மண்ணு தெரியாம கலக்குவாங்கலாமே.. இதை சாமி அப்படியே ரசிச்சு பாப்பாராமே... இந்தக் கசமுசா விளையாட்டு  ரொம்ப நம்பிக்கையான விஐபி ஆளுங்க மத்தியிலதான்  நடக்குமாமே...அதனாலதான் அந்த சாமியாருக்கிட்ட பணத்தை கொண்டு போயி கொட்டுறாங்களாமே...

இப்படி மே... மே..ன்னு அடுக்கிட்டே போனாருங்க.. இப்படியும் இருக்குமான்னு என்னோட மனசு கெடந்து அல்லாடுதுங்க. ஏதோ நம்ம நித்தி வயசு கோளாறுல ( நித்தி படுக்கையில் செத்த பாம்பு மாதிரி கெடக்கிறத பாத்தா உடம்பும் கோளாறா இருக்கும் போல) ஒரு தபா தப்பு பண்ணிட்டா அதுக்கு இப்படியா இஸ்திரி போடுறதுன்னு கேட்டா அந்த நண்பரு அடங்க மாட்டேங்கிறாருங்க.

இந்தப் படத்தை பாருங்க. இவரு இஞ்சினியரு மாணவருங்க.. தண்டவாளத்தில மாட்டிக்கிட்ட ஒரு பெரியவரை காப்பாத்தப் போயி ரயிலல அடிபட்டு ரெண்டு காலும் போச்சுக்குங்க. தொடர்ந்து படிக்க முடியலைங்க. உழைச்சு பொழைக்கவும் வழியில்லைங்க.



நான்... இந்த பைத்தியகார பணக்காரங்களையும் ஏழை எளிய மக்களோடு காசில ஏசி போட்டு படுத்திருக்கிற சினிமாக்காரங்களையும் பாத்து கேட்கிறேங்க.

சல்லாபச் சாமியாருங்ககிட்ட போயி சங்கடப்படாம பணத்தை கொட்டுறீங்களே... நீங்க ஒரு நேர உவ்வேக்கு கொடுக்கிற காசில இதுமாதிரி ஏழைங்க எத்தனை பேர வாழ வைக்க முடியும் தெரியுங்களா... இதை செஞ்சு பாருங்கப்பா... உலகத்தில இருக்கிற சாமிங்க எல்லாம் உங்க வீட்டு வாசல்ல காத்துக்கிட்டு நிக்கும்.

Monday, March 15, 2010

சமாதி நிலையில் கோமணத்துக்குள்ள கூழு கிண்டிய நித்தி....

நம்ம நித்தி... நான் ஒரு சமூக சேவகன்னு சொல்லி நம்மை எல்லாம் புல்லரிக்க வச்சி இருக்காருங்க. அவரு சமூக சேவையைத்தான் வீடியோவில பாத் தோமே. ஒரு தடவை வீட்டுக்கு வந்தாவே லட்ச ரூபா வாங்குவாறாமே. இது எப்படிப்பட்ட சமூக சேவைங்க.

அப்புறம் நம்ம ரஞ்சிதா மேலே காலைத் தூக்கி போட்டு கபடி விளையாட்டுக் காட்டுறாரே இது தாங்க சூப்பர் சமூக சேவை. அப்புறம் படுக்கையில இருந்து திடீர்னு மாத்திரை சாப்பிட பல்டி வித்தை காட்டி காலைத் தூக்கிக்கிட்டு
கோமணத்தோட எழுந்திருக்கிறாரே இது சூப்பரோ சூப்பருங்க.



இப்படி பணத்துக்கு பணம் ஜாலுக்கு குஜாலுன்னு கும்மாங்குத்து குத்திட்டு ஆன்மீக ஆராய்ச்சியாளன், பாலியல் பயிற்சியாளன்னு இவ்வளவு தைரியமா எதனால் சொல்ல முடியுது தெரியுங்களா.... கேக்கிறவன் எல்லாம் கேணைப்பயல்ன்னு நினைக்கிறதாலேதாங்க.

இன்னொரு செய்தியும் சொல்றாருங்க. இனிமேத்தான் அவருக்கு மவுசு கூடப்போகுதுன்னு. அதுல என்னங்க சந்தேகம்... பக்கத்து வீட்டுக்காரன் பசியால துடிக்கிறத ரசிக்கிற நம்ம பணக்கார வர்க்கம், நித்தி மாதிரி போலி ஆசாமிங்ககிட்ட பணத்தையும் கொடுத்து .... சொல்றதுக்கே நாக்கு கூசுதுங்க... அதுக்கும் அனுப்பி வைக்கிறாங்களே... இந்த வெட்கக்கேட்டை எங்க போயி சொல்றதுங்க.

எனக்கு நம்ம நித்திக்கிட்ட பிடிச்சதே.... நாணமோ வெட்கமோ இல்லாம பேசுற அவருடைய ஸ்டல்தாங்க. சல்லாப சாமியாருன்னா இந்த தில்லு வேணுமுங்க. இவருக்கே உடம்பு சரியில்லையாம். அந்த நேரத்தில சேவை செய்யத்தான் ரஞ்சிதா போனாங்களாம். ரஞ்சிதா அமெரிக்காவுல மருத்துவப்பட்டம் படிச்சவரு பாருங்க...சரி இப்படிப்பட்ட ஆளு நோயைத் தீப்பான்னு சொல்லி லட்ச லட்சமா கொட்டி அழுத நம்ம முட்டா ஜனங்களை என்னன்னு சொல்றதுங்க.



நம்ம நித்தி வழக்கில்லாம வெளிய வர்றதுக்கு சான்சு அதிகமா இருக்குங்க. ஏன்னா. இவரோட வழக்கை கர்நாடக மாநிலத்துக்கு மாத்தி இருக்காங்க. கர்நாடக முதல்வர் எடியூரப்பா... நம்ம நித்திக்கு எடுபிடி கணக்கா இடுப்புப் பிடிக்க தயாரா இருப்பவரு... இந்து சமய பெரியவரு ராமகோபாலன் வேறு நித்தி செஞ்சது சட்டப்படி தப்பு இல்லைன்னு வக்காலத்து வாங்குறாரு. அப்புறம் என்னங்க.. நம்ம நித்தி... சும்மா குத்தி கிழிச்சிற மாட்டாரு.

பிரம்மசரியத்தின் பிதா மகன்னு சொல்லிக்கிட்ட நித்தி... தனி அறைக்குள்ள மாத்திரையைச் சாப்பிட்டு மல்லாந்து கிடக்கிறாரு. கட்டுன புருசனுக்கு கடுக்கா கொடுத்துட்டு ரஞ்சிதா அக்கா... சாமியாருக்கு சவரச்சனை செய்யிறாங்க. முத்தா கொடுக்கிறாங்க. மேலே ஏறிப்படுத்து குண்டலினியைக் குத்திக் குத்திக் கிளப்புறாங்க. இதில சமாதி நிலையில இருந்தேன்னு வேற நித்தி சால்ஜாப்பு சொல்றாருங்க. சமாதி நிலையில இருக்கிறவரு எதுக்குங்க கோமணத்துக்குல கையை விட்டு கூழு கிண்டிக்கிட்டு இருக்காரு.

அப்புறம் விளக்கை அணைச்சிட்டு பாலியல் ஆராய்ச்சியைப் பக்குவமா நின்னு நிதானிச்சு செய்யுறாங்க. இதுல என்ன சட்ட விரோதம் இருக்குன்னு  சில விளங்காத வெளக்கெண்ணெய் கருப்பனுங்க  கேக்கிறாங்க. இதில இருந்து என்ன தெரியுதுன்னா. மலையாளத்து பிட்டு படம் மாதிரி ரெண்டு பேரும் விளக்கு வெளிச்சத்தில ஜல்லிக்கட்டு நடத்தலைன்னு  இவங்க வருத்தப்படுறாங்க போல இருக்கு.

இந்த வருத்தம் எங்களுக்கே இருக்கே.. அப்படி நடந்து இருந்தா நம்ம நித்திக்கு சல்லாப சாமியார்ன்னு பட்டங்கொடுத்து ரசிகர் மன்றம் ஆரம்பிக்க ஒரு கூட்டம் தயாரா இருக்குதுங்களே...

நம்ம நித்தி உலகத்துக்கு வழிகாட்ட வந்த மகான்னு சொல்லிக்காம....இரக்கமில்லாத இளிச்சவாயி பணக்காரங்ககிட்ட கோடி கோடியா பணத்தைக் கறக்காம... அவரு பாட்டுக்கு நம்ம ரஞ்சிதா...குஞ்சிதா.... கோபிகா...குந்தவைன்னு யாருகூட ஜுஜ்ஜிலிப்பா பண்ணி இருந்தாலும் அதை யாருங்க பெரிசா எடுத்துக்கப்போறா....

இந்து சமயத்தின் பெருமையை சிகாகோவில பேசி உலகம் பூராம் பரவச் செய்த விவேகாநந்தர் மாதிரி காவி வேட்டி கட்டி வேஷம் போட்டு பொண்ணுங்ககிட்ட எல்லாம் பூப்பந்து விளையாடிய இந்த நித்திய.... இந்து சமயத் தலைவர்கள் ஆதரிப்பது வேடிக்கையாக இருக்குதுங்க. ஒருவேளை அவங்களும் இப்படித்தானோ....

Thursday, March 11, 2010

நித்தி.... சுணை இல்லாத கத்தி...

..ரொம்ப நாளாச்சு வலைத்தளத்துக்கு வந்துங்க.  அன்னாடம் வயித்துக்கு அல்லாடு ஜாதிங்கிறதாலே தொடர்ந்து எழுத முடியலைங்க. நம்ம நித்தி.... அதாங்க நித்திய ஆனந்தர்.... அவருதாங்க இப்ப என்னை இழுத்து வந்திருக்கிறாருங்க.




என்னை தொடர்பு கொண்ட இளசுகங்க.... நித்தியானந்தருமேலே கடுங்கோபத்தில இருக்கிறதா சொன்னாங்க. எதுக்கு. நம்ம ரஞ்சிதாவோடு நாக்கு முக்கு நாக்கு பண்ணுனதுக்கா.... இல்லைங்க.

நித்தி சுணையில்லாத கத்தி...ன்னு வெந்து நொந்து போகுதுங்க.  அவரு சாமியாரு வர்க்கத்துக்கே அவமானத்தை ஏற்படுத்திட்டதா கொதிச்சுப் போகுதுங்க..

ஆமா... நம்ம நித்தி...வாயில மாத்திரையைப் போட்டுட்டு துவைச்சுப் போட்ட துணி மாதிரி சொங்கித் தனமா படுக்கையில கிடந்தா கோபம் வரத்தானுங்களே செய்யும்.



32 வயசுலயே உடுக்கடிச்சுத்தான் அருளு வரவழைக்கிற நிலையில இருந்தா 50 வயசில என்னங்க பண்ணுவாரு..இவரே இப்படின்னா இவருடைய சீடருங்க சீக்குக் கோழி மாதிரியில்ல  படுக்கையில பப்பரக்கான்னு கிடப்பாங்க.

இவரு இப்படி கிடந்தது நம்ம கும்மாங்குத்து சாமியாருங்களுக்கெல்லாம் மானப் பிரச்சினையா போயிருச்சாமுங்க. அதனாலே போலீசு தேடுதோ இல்லையோ இவங்க தேடிக்கிட்டு இருக்காங்களாம்.

நம்ம நித்தி கையில கிடைச்சா... பின்னி பெடலெடுக்க போறாங்களாம். இப்படி பண்ணுவியா.. இப்படி பண்ணுவியான்னு... சம்பந்தப்பட்ட இடத்தில சப்புச் சப்புன்னு சாத்தப் போறாங்களாம்.

எனக்கொரு சந்தேகமுங்க. சங்கதி இல்லாத நம்ம நித்தி சாமிக்கிட்ட இந்த நடிகைங்க எல்லாம் எதைக் கண்டு இப்படி கிறக்கமா கிடக்கிறாங்கன்னு தெரியலைங்க.

ஆசையத் தொறக்கணும்... ஆணவத்தை தொறக்கணும்...ன்னு பக்தர்களுக்கு சொல்லிட்டு ரகசிய ராத்திரி தேவதை ரஞ்சிதாவோட உடுப்புகளைத் தொறந்ததாலே இப்ப சிக்கல்ல சிக்கி சேதாரமாயிட்டாருங்க.

ஆமா... எல்லாருக்கும் ஆசி வழங்குன கலியுக கடவுள் இப்ப தமிழ்நாட்டு குடும்பப் பொண்ணுங்களுக்கிட்ட விளக்குமாத்து பூஜை வாங்குற நிலைக்கு போயிட்டாரே... இதுக்கு பேரு என்னங்க... இதுதாங்க சூத்துக் கொழுப்பு..