Tuesday, December 29, 2009

திவாரிக்கு என்ன எழவு டேஸ்ட்டோ...உவ்வே....!

நம்ம திவாரி ஐயா கதையைப் படிக்கப் படிக்க கண்ணக் கட்டுதுங்க. அவரு சாப்பிடும்போது பொண்ணுங்க அம்மனமா இருந்தாத்தான் ஐயாவுக்கு சோறு தொண்டைக்குழிக்குள்ள இறங்குமாமே...

உவ்வே... என்ன எழவெடுத்த டேஸ்ட்டுடா இது. நல்ல வேளை அவருக்கு புள்ளை குட்டிங்க இல்லை. அதுல பொம்பிளைப்பிள்ளைங்க இருந்திருந்தா... கொஞ்சம் நினைச்சுப் பாருங்க...



நடக்கும்போது கூட அழகான பொண்ணுங்க பக்கத்தில பொறந்த மேனிக்கு வந்தாத்தான் ஐயாவுக்கு வாக்கிங் போகவே பிடிக்குமாம். என்ன கொடுமைடா இது.

அது சரிங்க... இவரு பாட்டுக்கு பிரான்சு நாட்டில இருக்கிற பிறந்த மேனி கிளப் மாதிரி ஆளுனர் மாளிகையில அலப்பறை பண்ணி இருக்கிறாரு. இதை யாருமே கண்டுக்கலையா... அல்லது கிடைச்சவரைக்கும் லாபமுன்னு அங்க போற அரசியல்வாதிகள் கில்லி அடிச்சாங்களா...

அவரு புரண்டு எந்திரிச்சது பொம்பளைங்க மேல இல்லைங்க... அப்பாவி மக்கள் கட்டுற வரிப்பணத்து மேலேங்கிறது இந்த மானங்கெட்ட ஜனங்களுக்கு எங்கே தெரியப் போகுதுங்க.

85 வயதிலையும் இவரு இப்படி ஏத்தம் கட்டி இறைச்சிருக்காருன்னா... வாலிப வயசுல கிண்டிக் கிழங்கெடுத்து நோண்டி நொங்கெடுத்து இருக்க மாட்டாரு...

அதுசரி... இந்த காங்கிரஸ் கட்சிக்காரங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்காங்க. குறட்டை விட்டாவே அன்னை சோனியாவுக்கு மொட்டைக் கடதாசி போட்டுருவாங்க. திவாரி பண்ணுன சவாரி விஷயத்தை மட்டும் கமுக்கமா விட்டுட்டாங்களே....

இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு வரத்துடிக்கும் ஆந்திர இளசுகளுக்கு திவாரி சிம்ம சொப்பனமாக இருக்காறாமுங்க. 40 வயதுக்கு கீழே இருந்தா மட்டும் இளைஞர்ன்னு ஒத்துக்க முடியுமுங்களா...

திவாரி மாதிரி காய கல்ப கந்தசாமி தலைவரா இருந்தாத்தானே அந்தப் பதவிக்கு பெருமைன்னு சிலர் காத்துவாக்கில செய்தியைக் கசிய விட்டா... திவாரி இளைஞர் காங்கிரஸ் பதவியை சுலபமா தட்டிக்கிட்டு போயிட மாட்டாரு...ன்னு பயப்படுறாங்களாம்.

எது எப்படியோ... எசகு பிசகா மாட்டிக்கிட்டு வெளியே வந்திருக்கு திவாரியோட திருகுதாள தில்லாலங்கடி வேலை. இது மாதிரி எத்தனை கண்ணறாவி கூத்து இந்த நாட்டில நடந்துக்கிட்டு இருக்குதோ....

Monday, December 28, 2009

திவாரியின் குதிரைச் சவாரி

சரச சல்லாப லீலைகள் செய்யிறதில சாமியாருங்கதான் மகா கெட்டிக்காரனுங்க.



நம்ம ஆந்திர கவர்னரு திவாரி...திம்சு கட்டை அழகிகளை புரட்டி எடுத்து இந்த சாமியார் பயலுகளை எல்லாம் ஓரம் கட்டி ஆந்திராவையே அதிர வைச்சிட்டாருன்னு பத்திரிகையில பரபரப்பா செய்தி வந்து இருக்குங்க.

இது உண்மையாக இருந்தா கின்னஸ் சாதனைக்கு பரிந்துரைக்கலாமுங்க.
திவாரிக்கு 85 வயதுக்கு மேல இருக்குமுன்னு சொல்றாங்க. இந்தக் காலத்தில இளவட்ட பசங்களே முத்தெடுக்க முடியாம மூச்சுத் திணறும் போது திவாரி சும்மா... தில்லானா ஆடி சின்னப் பசங்களை எல்லாம் பொறாமையில வேக வச்சிருக்கிறாருன்னு பேசிக்கிறாங்க.

என்னோட மனசைக் குடையிற சந்தேகம் இது தாங்க. அறுபது வயதுவரை அப்படி இப்படின்னு கசமுசா பண்ணலாமுன்னு நமக்கு தெரிஞ்ச ஒரு அஜால் குஜால் மருத்துவரு சொல்றாருங்க.

அதுக்கு மேலே வயாக்ரா போட்டு நயாகராவை வரவழைச்சாலும் சிலம்பாட்டம் ஆட உடம்புல தெம்பு வேணுமுங்களே... இந்த இடத்தில தாங்க ஒன்னு இடிக்குது. பசிச்சவன் பழங்கணக்கு பாத்த மாதிரி உருண்டு புரண்டு பாத்திருப்பாரோ.

என்ன இருந்தாலும் ஆளுநர் மாளிகையை ............. மாளிகையா மாத்துன பெருமை நம்ம திவாரியைத் தான் சேருமுன்னு 80 வயதைக் கடந்த சில பெருசுகள் பெருமையோட மார் தட்டுறாங்களாம். ரசிகர் மன்றம் ஆரம்பிக்கிற முயற்சியில இறங்கி இருக்காங்களாம்.

Thursday, December 17, 2009

விசித்திர அடிமைகள் நாம்

நாமெல்லாம் விசித்திரமான அடிமைகள்.... ஆண்டவனுக்கு அடிமையாக இருக்கிறோமுங்க. அடுத்து ஆளுகின்றவர்களுக்கு அடிமையா இருக்கிறோமுங்க. சினிமா நடிகர் நடிகைகளுக்கு அடிமையா இருக்கிறோமுங்க.




வெளிநாட்டில் இல்லையா அப்படின்னு நீங்க கேட்கலாமுங்க. இருக்காங்க... அவங்களலெல்லாம் அடிமையாக அல்ல... ஆதரவாளர்களாக.... அது எப்படின்னு கேட்கிறீங்கள்....
அங்க கென்னடி சுடப்பட்டபோது யாரும் தீக்குளிச்சாங்களா... அல்லது புஷ் தோத்து போனதுக்கு யாரும் உயிரை விட்டாங்களா... இத்தாலி பிரதமரை மூக்கை உடைத்ததுக்கு பஸ்சை எரிச்சாங்களா... கடைகளை அடித்து நொறுக்கினாங்களா....

அங்கையும் வன்முறை இருக்கு. போராட்டம் வெடிக்குது. போலீஸ்காரங்களோடு மோதுறாங்க. அதெல்லாமே உரிமைக்காக.... ஒரு தலைவனின் சுயநலத்துக்காக இல்லைங்க.

அண்மையில ரஜினி காந்த் பிறந்த நாள் வந்துச்சு. ஒருத்தர் ரஜினி கட்டவுட்டுக்கு பால் ஊத்தி அபிஷேகம் பண்ணுறாருங்க. அந்தப் பாலைக் காய்ச்சி நாலு ஏழைக்குழந்தைகளுக்கு கொடுத்தா... ரஜினி எவ்வளவு சந்தோசப்படுவாரு.... அந்த ஏழைக் குடும்பம் ரஜினியை வாழ்த்துமே.....

இந்திரா காந்தி எவ்வளவு பெரிய தலைவிங்க. அவுங்க சாப்பிட்ட இலையில உட்காந்து சாப்பிட யாராவது போட்டி போட்டிருக்கிறாங்களா.... ஆனா, நம்ம தமிழ்நாட்டில ஜெயலலிதா சாப்பிட்ட இலையில உக்கார ஒரு இசை நாற்காலி போட்டியே நடந்துச்சுங்களே....

தலைவருக்கு ஏதாவது ஒன்னுன்னா எதுக்கு பொதுச் சொத்தை சேதப்படுத்துறாங்க...
இப்ப ஆந்திராவை எடுத்துக்கங்க. ராஜசேகர ரெட்டி இறந்த நேரமா பாத்து சந்திரசேகர ராவ் தெலுங்கானா பிரச்சினையை கிளப்பி விட்டாரு.... இப்ப ஆந்திராவே பத்திக்கிட்டு எரியுது.

சமீபத்தில மதுரை மீனாட்சி கல்லூரி மாணவிகள் போராட்டம் நடத்துனாங்க. ஏதோ பொழுது போக்கா செய்யிற மாதிரி சிரிச்சுக்கிட்டு, ஒருத்தரை ஒருத்தர் தள்ளிக்கிட்டு இருக்கிற காட்சியை தொலைக்காட்சியில பாக்கும்போது மனதுக்கு வேதனையா இருக்குங்க.

ஒரு அரசியல்கட்சித் தலைவரை பத்தி விமர்சனம் செய்ய முடியுமா... அவரைப்பத்தி அவதூறா எழுதினா.... தொண்டர்கள் ஆத்திரப்படுறது நியாயமுங்க. ஆனா... நடந்த சம்பவத்தை பத்தி எழுதினாக்கூட உயிருக்கு உத்திரவாதமில்லாத நிலை ஏற்பட்டு இருக்குங்க.

விலைவாசியைக் குறைக்கணுமுன்னு ஒரு போராட்டத்தை ஒரு கட்சி நடத்துது. அதில நூறு பேருக்கு குறைவானவங்களே கலந்துக்கிறாங்க. பாக்கி உள்ளவங்களுக்கு விலைவாசிப் பாதிப்பு இல்லைங்களா.. அப்புறம் ஏன் ஒன்னா கூட முடியலை.
முன்பு சாதிப்பிரிவினை நம்மளை பாதளத்தில தள்ளுச்சுங்க. இப்ப கட்சிப்பிரிவினை அதல பாதாளத்தில தள்ளிக்கிட்டு இருக்குங்க. மக்கள் எல்லாம் ஒன்னு சேர்ந்தா யாரும் எந்தத் தப்பும் செய்ய மாட்டாங்க. ஆனா, அது நடக்காதுங்க. அப்படி நடக்க அரசியல்வாதிகள் விட மாட்டாங்க.

அப்படி ஒரு அடிமைத்தனமான நிலைக்கு நாம் ஆட்பட்டு இருக்கிறோமுங்க. மேலே குறிப்பிட்ட மூனு அம்சங்களில் இருந்து எப்ப மக்கள் தங்களை விடுவித்துக் கொண்டு வெறும் ஆதரவாளர்களாக மட்டும் இருக்கிற பக்குவத்தை அடையுறாங்களோ அப்போதுதாங்க தமிழ் மக்களின் தரம் உயருமுங்க.





Thursday, December 3, 2009

அன்பு சிவத்துக்கு நன்றிங்க...

நம்ம மச்ச குருக்கள் தேவநாதன்கிட்ட ஒரு தொலைக்காட்சி நடிகையும் மாட்டி இருக்கிறாராமே... சபாஷ்... சரியான குருக்கள்தான் நம்ம தேவநாதன்.


கண்ணி வச்சு பிடிச்ச மாதிரி இப்படி சொல்லி வச்சு சொக்கட்டான் விளையாடிய தேவநாதனுக்கு என்ன விருது கொடுத்தாலும் தகுமுங்க. ஆனா, இவருக்கிட்ட மடங்காத பெண்களை சும்மானாச்சுக்கும் கையைக் காட்டி மாட்டி விட்டுறப்போறாருங்க.

தேவநாதன் செய்தியைப் படிச்சிட்டு அருமைச் சகோதரர் அன்பு சிவம் ஒரு கேள்வியை எழுப்பி இருக்காருங்க.

மச்சேசுவரர் போனை கெடுத்ததுக்கு பதிலா மொதல்லயே வேற எதையாவது(?) கெடுத்திருந்தா இத்தனை பிரச்சனையும் வந்திருக்கவே வந்திருக்காதே... என்ன சொல்லறீங்க? :)

ஆணவம், கன்மம், மாயை...ன்னு மூனு அம்சம் இருக்குதுங்க. ஒரு காரை அளவுக்கு மீறிய வேகத்தில ஓட்டி கட்டுப்படுத்த முடியாம எதிலையாவது மோதி சாவதுங்க. இது ஆணவத்துக்கு கிடைத்த தண்டனை.

காரை வேகமாக ஓட்டினாலும் உடனே விபத்து நடக்காது. காலப் போக்கில் என்றாவது இறப்பு ஏற்படும். இது கன்மம்...அதாவது போன ஜென்ம பாவ புண்ணிய பலனால் ஏற்படுவது.

மாயை என்பது கண் சிமிட்டும் நேரத்தில் நடப்பது. இதில் இரண்டாவது ரகம்தான் தேவநாதனுக்கு நடந்தது. எந்தக் காரியத்தையும் உடனே தடுத்துவிட முடியாது என்பதை காட்டுவதற்காகத்தான் இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்கள் எழுதப்பட்டன.

இருந்தாலும் தவறு நடப்பதற்கு முன்னாடி தடுத்திருந்தா பல பேருடைய நிம்மதியைக் காப்பாத்தி இருக்கலாமுங்க. என் எழுத்துக்கு அன்போடு இடையுரையாடிய அன்பு சிவத்துக்கு நன்றிங்க.

Wednesday, December 2, 2009

தேவநாதனுக்கு சாணி அடி தேவையா...?

நம்ம கும்மாங்குத்து குருக்களை போலீசார் பின்னி எடுக்க... எடுக்க... அள்ள அள்ள குறையாத அட்சயபாத்திரத்தில இருந்து வருகிற அன்னம் மாதிரி உண்மைகள் அணையை உடைத்துக் கொண்டு வரும் போல இருக்குங்க.


பக்திப் பரவசத்தோடு கோவிலுக்கு போன பொண்டாட்டிகளை பாசத்தோடு வழி அனுப்பி வச்ச புருசன்மாருங்க...மோசம் போயிருப்பமோன்னு தவியாத் தவிக்கிறது யாருக்குங்க தெரியப் போகுது.




இப்ப நீதி மன்றத்துக்கு வந்த "தேக சாந்தி திவ்விய புருசன்" தேவநாதனை சில பெண்கள் சாணியை எடுத்து அடிச்சிருக்காங்க. விளக்குமாத்தால விளாசி இருக்காங்க. அது நியாயமான கோபம் தாங்க.

இன்னொரு விஷயத்தையும் இங்க உங்களுக்கு சொல்லணுமுங்க. சில நாட்களுக்கு முன்னர் ஒரு நண்பர் எனக்கு ஒரு வீடியோ காட்சியை அனுப்பி வைத்தாருங்க. ஒரு பெண்ணை வைத்து ஆபாசப்படம் எடுத்த காட்சி அதுங்க.

பணத்துக்காக வந்ததோ அல்லது பயமுறுத்தி கொண்டு வரப்பட்டதோ தெரியலைங்க. கேமராவை பாக்கிறதுக்கு அந்தப் பெண் படுகிற பாட்டைப் பார்த்து என்னோட நெஞ்சில ரத்தம்தான் வழிஞ்சதுங்க. கூச்சமும் இயலாமையும் அந்த முகத்தில தெளிவா தெரிஞ்சதுங்க.

நம்ம இனத்தை வெள்ளைக்காரன் வியப்போடு பாக்கிறதுக்கு காரணம் நமது குடும்ப ஒழுக்கம்தாங்க. மேலை நாடுகளில சமுதாய ஒழுக்கம் அதிகம். குடும்ப ஒழுக்கம் குறைவுங்க. நாம அப்படி இல்லைங்க. ஒரு குடும்பத்துக்கு நன்னெறி எவ்வளவு முக்கியம் என்பதை மேடைதோறும் பேசி வருபவன் நானுங்க.

அதனாலதான் அந்தக் காட்சியை எனக்கு அந்த நண்பர் அனுப்பி வைத்தாருங்க. அந்தப் பெண்ணை கடுகு அளவுகூட என்னால் தப்பாக பார்க்க முடியலைங்க.

ஆனா, நம்ம தேவநாதன் தில்லாலங்கடி பாடிய பொண்ணுங்களை பார்க்கும்போது எனக்கு ஈரல் குளையே ஆடிப்போச்சுங்க. ஒரு கோவில் தளத்தில... எந்த நேரத்திலும் யார் வேண்டுமானாலும் உள்ளே நுழைந்து பார்க்கக்கூடிய வாய்ப்பு இருக்கிற இடத்தில... பேசும் மொழி கடந்து இந்திய தேசம் முழுவதையும் ஒரே கட்டுக்குள் வைத்திருக்கிற கடவுளின் கருவறைக்குள்ளே...

கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல்... தப்பு செய்கிறோமே என்ற நாணம் இல்லாமல்...வெள்ளைக்காரப் பெண்களையே போட்டிக்கு அழைக்கின்ற விதத்தில் பல கோணங்களில் கும்மாளம் போட்ட அந்தப் பெண்களைப் பார்க்கின்ற போது இரத்தம் கொதிச்சதுங்க.

இதுல ஒரு பொண்ணு "மயக்க மருந்து கொடுத்து என்னைக் கற்பழிச்சிட்டான்"ன்னு சொல்லி இருக்குங்க. அண்டபுளுகு... ஆகாசப் புளுகு...ன்னு கேள்விப்பட்டிருக்கேங்க. அதைவிட இந்தப் பொண்ணு சொன்னது எல்லாரையும் கேணையன் ஆக்குகிற மல்டி மீடியா புளுகுங்க. இது மாதிரி பொண்ணுங்க கதிரியக்கக் கசிவு மாதிரிங்க. இருக்கிற இடத்தை மட்டுமில்லாம அந்தப் பகுதியையே அழிக்கக்கூடிய அணுகுண்டு புளுகிங்க இவ.

அறிமுகம் இல்லாத ஒரு பொண்ணு "அண்ணா" என்று அழைத்து விட்டால் தவறிக்கூட தப்பான பார்வை பார்க்காத தமிழ்நாடுங்க. உறவுமுறை கொண்டவன்கூட தவறான எண்ணத்தில் தன்னை நெருங்கும்போது "நான் அப்படிப்பட்ட ஆள் இல்லை" என்று அவன் மானத்தையும் தன்னுடைய மானத்தையும் காத்துக் கொண்டு வாழ்ந்த கண்ணியம்மிக்க பூமிங்க.

காலம் மாறும் போதும்... வளர்ச்சி ஏற்படும்போதும்... நாகரிகச் சிதைவு ஏற்படுவது தடுக்க முடியாதுங்க. ஆனா, இவ்வளவு கொடுமையான மாற்றம் இருக்கக்கூடாதுங்க.

"தாய் அறியாத சூல்" இல்லைன்னு சொல்லுவாங்க. அதுபோல இவ்வளவு பெரிய தப்பு நடக்கிறது தெரியாம இருந்தது ஆச்சரியமா இருக்குதுங்க. தேவநாதனின் கொடுமை தாங்காம மச்சேஸ்வரர்தான் அவனுடைய போனைக் கெடுத்து அதன் மூலமா உண்மைய வெளிச்சத்துக்கு கொண்டு வந்து இருக்கிறாருங்க.

இல்லைன்னா... இன்னும் எத்தனை பெண்களை சூறையாடி இருப்பானோ.... எத்தனை பெண்கள் கட்டினவனுக்கும் பெத்தவங்களுக்கும் துரோகம் செஞ்சு இருப்பாங்களோ... நினைச்சுப்பாக்கவே அச்சமா இருக்குதுங்க.

இப்ப ஆவேசப்படும் பெண்களே... உங்க பகுதியில இது மாதிரி தப்பு நடக்குதான்னு உத்துப் பாருங்க. ஆனா.. அதுலையும் ஒரு சிக்கல் இருக்கு. சம்பவம் நடக்கிறதுக்கு முன்னாடி ஏதாச்சும் சொல்லிட்டா " எம் பொண்டாட்டியை எப்படி சொல்லலாம்" ன்னு நம்ம வீராதி வீரனுங்க அரிவாளைத் தூக்கிக்கிட்டு வந்திடுவானுங்க.

சில வக்கிரம் புடுச்ச பொண்ணுங்க வேணுமின்னே கட்டுக்கதை கட்டுறதும் நடக்கலாமுங்க. எப்படிப் பாத்தாலும் இந்தப் பொண்ணுங்க பண்ணுனது வயித்துப் பொழைப்புக்காக முந்தானையை விரிக்கும் விலைமாதுவோட செயலைவிட கேவலமானதுங்க.

Monday, November 30, 2009

கிட்டிப்புல்லு விளையாட்டில் கில்லாடி பூசாரி

சாமியார்கள்தான் ஆரம்ப காலத்தில் சல்லாபச் சடுகுடு ஆட்டத்தில் கலைமாமணி விருது வாங்கி வந்தாங்க. இப்ப கோவில் குருக்களும் கும்மாங்குத்து மல்லாங்குத்து வேலையில கின்னஸ் சாதனை படைக்க ஆரம்பிச்சு இருக்காங்க. நான் யாரை சொல்றேன்னு தெரியுதுங்களா. கும்பகோணம் மச்சேஸ்வரர் கோவில் பூசாரி தேவநாதனைத்தான் சொல்றேங்க.





கிட்டிப்புல்லு விளையாட்டில் மகா கில்லாடின்னு அவரு சம்பந்தப்பட்ட வீடியோ காட்சிகளை பார்த்து தெரிஞ்சுக்கிட்டேங்க. எனக்கு ஒன்னு மட்டும் புரியலைங்க. கோவில் கர்ப்ப கிரகத்தில ஆயகலை அறுபத்தி நாலையும் நடத்தும்போது அந்தப் பெண்கள் முகத்தில கூச்சமோ வெட்கமோ இல்லைங்க.

ஒரு பக்கம் மேளச் சத்தம். இன்னொரு பக்கம் ஒலிபெருக்கியில பக்திப் பாடல்கள். இதுக்கு மத்தியிலதாங்க நம்ம தேவநாதன்... காம நாதனா மாறி கபடி விளையாடி இருக்காரு. உண்மையிலேயே தேவநாதன் கில்லாடிக்கு கில்லாடிங்க. வெள்ளைக்காரப் பயலுக எல்லாம் வாயில விரல் சூப்புற அளவுக்கு பல புதுமைகளைச் செஞ்சிருக்காருங்க.

அந்தப் பெண்களோட வாழ்க்கை என்ன ஆகுமோன்னு என்னோட நண்பன்கிட்ட வேதனையோட சொன்னேங்க. அதுக்கு "போடா லூசு... இந்த பல்லாங்குழி விளையாட்டெல்லாம் பக்தி மார்க்கத்தில சகஜமப்பான்னுட்டு அந்தப் பொண்ணுங்களோட புருசன்மாருங்க  இன்னொரு கோவிலுக்கு அனுப்பி வைப்பாங்க.

இப்ப போலீசில மாட்டிக்கிட்ட தேவநாதனுக்கு இனிமேத்தான் மவுசு மானாங்கன்னியா ஏறப்போகுது. இப்ப அந்தப் பகுதி பொம்பளைங்கதானே கருவறைக் கண்ணாமுச்சி ஆடி நிலவறை நெல்லுக்குத்தினாங்க.

பத்திரிகையிலையும் தொலைக்காட்சியிலையும் பரபரப்பான தேவநாதனைத் தேடி தமிழ்நாடு முழுவதும் இருந்து பெண்கள் கூட்டம் அலைமோதப் போகுது. டோக்கன் கொடுத்து சிலம்பாட்டம் நடத்தப் போறான். ஒரு தேவநாதன் மாட்டிக்கிட்டான். இன்னும் மாட்டாத தேவநாதனுங்க எத்தனை பேரு இருக்கிறானுங்களோ"ன்னு சொல்றாங்க.

இப்படிச் சொல்லும்போது ஓங்கி அவனை அறையலாம் மாதிரி இருந்ததுங்க. ஆனா.. முடியலைங்க. ஏன்னா.. அந்த தேவநாதன் பண்ணுன படுபயங்கரமான அசிங்கத்தை பார்த்துத் தொலைச்சிட்டேனுங்களே...

Thursday, November 19, 2009

விவசாயிகளே...விழித்துக் கொண்டால்தான் விடிவு

கரும்பு விலை குறிச்சு ஒரு சட்டத்தை மத்திய அரசாங்கம் போட்டிருக்குங்க. இதை எதித்து ஆர்ப்பாட்டம் பண்ணுறாங்க விவசாயிங்க எல்லாம். சரி... உங்ககிட்ட ஒரு கேள்விங்க. இந்த சட்டத்தை கொண்டு வந்த கட்சிக்காரங்களில விவசாயிங்க இல்லையா...?





விவசாயிகள் ஒன்ன நல்லா புரிஞ்சுக்கணுமுங்க. இந்தியாவில 80 சதிவிகிதம் பேரு விவசாயிங்க. அவுங்க நெனைச்சா ஒரே நாளில அரசாங்கத்தை ஆட்டம் காண வச்சுடலாமுங்க. ஆனா, அதை அவங்களால செய்ய முடியாதுங்க.

ஒரு கிராமத்தில் 1000 பேரு வசிக்கிறாங்கன்னு வச்சுக்கிட்டா 900 பேரு விவசாயித்தான் இருப்பாங்க. இவங்கள்ல ஒரு பகுதி திமுக. ஒரு பகுதி அதிமுக. இப்படி கட்சிக்கு சில பேரா இருப்பாங்க.

திமுக ஆட்சியில விவசாயிகள் பாதிக்கப்பட்டா அதிமுககாரங்க போராட்டம் நடத்துவாங்க. திமுக கூட்டணிக்காரங்க குண்டியப் பொத்திக்கிட்டு குத்துக்கல்லாட்டம் இருப்பாங்க.

அதே மாதிரி அதிமுக ஆட்சி காலத்தில ஒரு பிரச்சினையின்னா திமுககாரங்க காட்டுக்கத்தா கத்துவாங்க. அதிமுககாரங்க அம்மா பஜனை பாடிக்கிட்டு ஏதோ பாகிஸ்தானில நடக்கிற பிரச்சினை மாதிரி பாத்தும் பாக்காம இருப்பாங்க.

முன்பு ஜாதி இவங்களை கூறு போட்டு கூழுக் கிண்டிக்கிட்டு இருந்ததுங்க. இப்ப கட்சி கூறுபோட்டு கஞ்சி காச்சிக்கிட்டு இருக்குதுங்க. ஜாதிக்கும் கட்சிக்கும் பேருதாங்க வித்தியாசம். மத்தபடி எல்லாம் ஒன்னுதாங்க. முன்பு தேவர், கவுண்டர், நாயக்கர்ன்னு அடிச்சுக்குவாங்க. இப்ப திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட்டுன்னு அடிச்சுக்கிறாங்க.

இப்படி இருந்தாத்தான் அரசியல்வாதிகள் அஜால் குஜால் வேலைகளைச் செய்ய முடியும். ஆனா, இந்த முட்டா ஜனங்களுக்கு கண்ணுக்கு முன்னாடி இருக்கிற இந்த உண்மை ஏனோ மண்டையில உறைக்க மாட்டேங்குதுங்க.

நம்ம அரசியல்வாதிங்க இந்தியாவில இருந்து சட்டம் போடுறமாதிரி தெரியலைங்க. ஏதோ இங்கிலாந்திலையோ அமெரிக்காவிலையோ இருந்து சட்டம் போடுற மாதிரி இருக்குதுங்க.

கரும்பு போட்டு விவசாயம் பண்ணுற அரசியல்வாதி இருக்காங்களா... நெல் சாகுபடி செய்யிற அரசியல்வாதி இருக்காங்களா... இருப்பாங்க.. அவங்களுக்கு சத்தமில்லா எல்லா வசதியும் வீட்டு வாசல்ல வந்து கையைக் கட்டிக்கிட்டு நிக்கும்.

ஆனா... விவசாயிகளுக்கு.... ஜாதியும் கட்சியும் தான் ஏழை மக்களை ஏழையாகவே வச்சிருக்கு. ஆனா, ஜாதியை விட கட்சி கொடுமையானதுன்னு எப்ப விவசாயிங்களுக்கு புரியுதோ... அப்பத்தாங்க அவங்களுக்கு விடிவு. அதுவரை ஊருக்கு சோறு போடுற ராஜா, ஒத்த ரூபா நாணயத்துக்கு பிச்சை எடுத்த கதைதாங்க.

Wednesday, November 18, 2009

கலைஞரைக் குறை சொல்வது சரியா...?

சமீபத்தில் பெய்த மழை தமிழகத்தை புரட்டுப் போட்டு இருக்குதுங்க. மலைகளில் அழகி என வர்ணிக்கப்படுகின்ற நீலகிரி... வில்லனிடம் மாட்டிய கதாநாயகியைப் போல கசங்கிப் போய் கிடக்கிதுங்க.



அங்கு இருக்கின்ற மக்கள் சாப்பாட்டுக்கு என்ன செய்றதுன்னு தெரியாம தவிச்சுக்கிட்டு இருக்காங்க. சீரமைப்பு பணிகள் செய்யிறதுக்கும் கஷ்டமான நிலைதாங்க.

இந்த நேரத்தில மக்களுக்கு சேவை செய்யவே மண்ணில பொறப்பெடுத்து வந்திருக்கமுன்னு மார் தட்டுற அரசியல்வாதிகள் என்ன செய்யணும். அந்த இடத்துக்கு போயி முடிஞ்சவரை உதவி செய்யணுமுங்க.

அதை விட்டுப்புட்டு யாரையாவது வம்புக்கிழுத்துக்கிட்டு இருக்கிறது எந்த வகையில நியாயமுங்க. கலைஞர் கருணாநிதி நீலகிரிக்கு வரலைன்னு அதிமுககாரங்க போராட்டம் நடத்துறாங்க. அந்தக் கட்சிக்காரங்களையே கேட்கிறேன் இது சரியாங்க.




தவிக்கிறது நம்ம ஜனங்க. இதில நீ...நான்...ன்னு போட்டி போடுறது நல்லாவா இருக்கு. கலைஞருடைய உடல் நிலையை நினைச்சுப் பாருங்க. சக்கர நாற்காலியிலதான் நகர்ந்துக்கிட்டு இருக்கிறாரு. அதோடு குளிரான நேரத்தில மலைப்பிரதேசங்களுக்கு போறது பாதிப்பை ஏற்படுத்துமுன்னு எல்லாருக்கும் தெரியுமுங்க. இப்படிப்பட்ட முதல்வர் தேவையான்னு குதர்க்கமா விவாதம் பண்ணினா.... பண்பாட்டுக்கு பேர் போன தமிழன்னு சொல்லிக்கிறதில அர்த்தம் இல்லைங்க.

மக்களோடு ஆதரவைப் பெறனுமுன்னா.. களத்தில இறங்கி காரியத்தைப் பாருங்க. அதை விட்டு விட்டு குறை மட்டும் சொல்லிக்கிட்டு இருந்தா மக்கள் குறைவாத்தாங்க ஆதரிப்பாங்க. வெறும் அறிக்கை மட்டுமே மக்களூக்கு திருப்தியைத்தருமுன்னு கணக்குப் போட்டா விடை தப்பாத்தாங்க வருமுங்க.

Tuesday, November 3, 2009

சரத்குமார் அண்ணாச்சி... சமக என்னாச்சு

அணி மாறுவதில அணிலை விட வேகமாத் தாவுறதில கில்லாடி நம்ம சரத்குமார் அண்ணாச்சிங்க. நான் சொல்றது அரசியலில மட்டும்தாங்க. நீங்க பாட்டுக்கு ஏடாகூடமா கற்பனை பண்ணி என்னைச் சிக்கல்ல மாட்டி விட்டுடாதீங்க.





நாட்டாமை படம் வேட்டாமையா மாறி வசூலை வாரிக் குவிச்ச உடனே இவருக்கு அரசியல் ஆசை வந்துச்சுங்க. அந்த நேரத்தில அம்மா ஆட்சி. அதனால அம்மாவுக்கு பக்க பலமா நின்னாருங்க.

அப்புறம் திடீர்ன்னு கலைஞர்மேல காதல் கொந்தளிச்சிருச்சுங்க. உடனே அந்தர் பல்டி அடிச்சு திமுக வந்தாருங்க. இவரை நம்பி கலைஞர் இவருக்கு எம். பி. பதவி கொடுத்தாருங்க.

அந்த நேரத்தில விஜயகாந்த் கட்சி ஆரம்பிச்சு வெளிச்சமா இருந்ததாலே இவருக்கு விலா எலும்பு துடிச்சிருச்சுங்க. உடனே பொசுக்குன்னு ஒரு கட்சியை ஆரம்பிச்சு அடுத்த முதல்வர் நான் தான்னு அல்ஜா குல்ஜா ஆட்டம் போட்டாருங்க.

இடைத்தேர்தல் தேர்தல் வந்துருச்சுங்க. தனிச்சு நின்னு ஓட்டு வாங்கினா அடுத்து பேரம் பேச வசதியா இருக்குமுன்னு கட்சிக்காரரை நிறுத்துனாருங்க. பாவம் யாருமே கண்டுக்கலை. யானையும் யானையும் மோதும்போது இடையில பூனை போயி புல்லாங்குழல் வாசிச்சா அதோகதிங்கிற விஷயம் என்ன காரணத்தினாலோ இவருக்குத் தெரியலைங்க.

இப்ப திமுக பக்கம் பல்லைக் காமிச்சிக்கிட்டு பட்டம் விட ஆரம்பிச்சிருக்காருங்க. கலைஞர் பெருந்தன்மையானவருங்கிற காரணத்தாலே ஏமாத்திட்டு போனவங்களையும் ஏத்துக்குவாருங்க... முதுகில குத்திட்டு போனவங்களையும் சேத்துக்குவாருங்க.

அதுசரி இவரு ஆரம்பிச்ச சமத்துவக் கட்சி என்ன ஆச்சுன்னு கேக்கிறீங்களா... அதை உயிர் மூச்சு உள்ளவரை காப்பாற்றி அமெரிக்க தேர்தலில் போட்டி போட்டு ஒபாமாவை ஓட ஓட விரட்டுவதுதான் சரத்குமாரின் அடுத்த திட்டம்ன்னு சொல்லப்படுதுங்க.

இப்படி மாத்தி மாத்தி மாராப்பை விலக்குறாங்களே இவங்களுக்கு வெட்கமா இருக்காதான்னு கேக்கிறீங்களா... முதலிரவில எப்படி நடந்துக்கிறதுன்னு காலேஜ் கட்டி செயல்முறை விளக்கம் செய்யுற புதுமையான காலத்தில இருக்கும்போது வெட்கமாவது மண்ணாங்கட்டியாவதுன்னு பதிலுக்கு கேட்டா... பண்பாடு கலாச்சாரமுன்னு பேசுற பழைமைவாதிகளான நாம முகத்தை எங்க போயி வச்சுக்கிறதுங்க.

Monday, November 2, 2009

ராசா..ராசாதி ராசா... எங்க ராசா..

என்னை பெத்த ராசா... ஏலம் போட்ட ராசா... சிக்குப்பட்ட ராசா... மொத்துப்பட்ட ராசா...ன்னு கிராமத்தில ஏடாகூடமாகத் திரிகின்ற இளசுகளப் பாத்து பெருசுங்க சொல்லுவாங்க.

இந்தப் பேச்சு இப்ப நம்ம ராசாவுக்கு பொருத்தமா இருக்கும் போல தெரியிது. அதுதாங்க... மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சரா இருக்கிறவரு.

அலைவரிசை ஒதுக்கியதில கைவரிசையக் காட்டிட்டாருன்னு எல்லாப்பக்கம் இருந்தும் இவர் மீது குற்றச்சாட்டுச் குண்டுகள் வீசப்படுதுங்க.




பாரதிய ஜனதா கட்சி பகிரங்கமாகவே ராசாவின் ஊழலைப் பத்தி பேசுதுங்க. கண்ணியில மாட்டிக்கிட்ட கதுவாளி மாதிரி ராசா வெடா வெட்டிக்கிட்டு இருக்கிறாருங்க.

என்னோட பக்கம் எந்தத் தப்பும் இல்லை. பிரதமருக்குத் தெரியாம எதுவும் நடக்கலைன்னு ஈன சுரத்தில இவர் முணங்கிறது எடுபட்ட மாதிரி தெரியலைங்க. சிபிஐ ரெய்டு வேற இவரு சிண்டைப் பிடிச்சு சிக்கெடுக்க ஆரம்பிச்சிருக்குங்க.

கிராமத்தில கொஞ்சம் கோளாறான ரெண்டு பொம்பளைங்களுக்குள்ள சண்டை வந்தா அந்தத் தெருவே நாறி நாத்தெடுத்துப் போகுமுங்க.

"அடி அறிவு கெட்ட சிறுக்கி... புருசன் பொழப்புக்கு போன நேரத்தில அரிப்பெடுத்துப் போயி அடுத்தனுக்கு பாய் விரிச்ச அவுசாரி.. இப்ப நானுந்தான் நல்லதங்காள்ன்னு நடுமனைக்கு வந்துட்டா சீவிச் சிங்காரிச்சு... இதைக் கேட்க நாதியும் இல்லை.. நாலு ஜனமும் இல்லை"ன்னு சும்மா கொசப்பேட்டை ரவுடி மாதிரி கொசுவத்தைச் சொருகிக்கிட்டு நிப்பாங்க... ஒருத்தி.

இன்னொருத்தி நல்லவளா இருந்தா என்ன சொல்லியிருக்கணும்.

"அடியே.. நாலும் கெட்ட நாதாரி... கட்டுன புருசன் கண்ணுக்குள்ள வச்சுக் காப்பாத்தும்போது... கண்ட பயலுக்கு நான் ஏண்டி கதவைத் திறக்கப்போறேன்... என்னோட வாய் சுத்தம்.. கை சுத்தம்.. மடி சுத்தம்.."ன்னு பேசுனவ வாயை பேஸ்ட் போட்டு ஒட்டணும்.

ஆனா இவ என்ன சொல்றா தெரியுமா... "அடி மூனும் கெட்ட மூதேவி.. என்னையப் பாத்தா அவுசாரின்னு சொல்றே... உன்னோடு கதைதான் ஊரு சிரிச்சுப் ஊழ நாத்தம் அடிக்குதே...மூனாவது வீட்டு முத்துக் கருப்பனோடு முந்தா நாளு முக்காடு போட்டுக்கிட்டு முந்திரிக்காட்டுக்குள்ள போனது எனக்குத் தெரியாதா.. அங்க நீங்க முக்குனதும்  முனகுனதும் மூனு ஊருக்கு கேட்டுச்சே...இதை மறந்துட்டு வாயைக் காதுவரைக்கு நீட்டி வக்கணையா பேச வந்துட்டா...வழக்கங்கெட்ட வசைகாரி"ன்னு எசைப் பாட்டுப்  பாடுனா என்ன அர்த்தமுங்க. மூக்கரையும் மூக்கரையும் மல்லுக்கட்டுறான்னுதானே அர்த்தம்.

இப்படித்தான் இருக்குங்க நம்ம ராசா நடத்தும் லாவணிக் கச்சேரி.

எதிர்க்கட்சிக்காரங்க குற்றம் சொன்னா.... "நான் அப்படிச் செய்யலை"ன்னு ஆதாரத்தோட பதில் சொல்லணுமுங்க. இல்லாட்டி "பிரதமருக்குத் தெரியாம நான் ஒன்னுமே செய்யலை"ன்னு அந்தப்பக்கம் கையைக் காட்டிட்டு ஹாயா... கொடைக்கானல்ல உட்காந்து கொட்டாவி விட்டுக்கிட்டு இருக்கணுங்க.

(ஏன்னா.. கோமணத்துக்கு வழியில்லாத ஏழைச் சனங்க கோடி கோடியா கொட்டிக்கொடுக்கிற வரிப்பணம் நீங்க குஜாலா இருக்கிறதுக்குத்தானே பாதி போகுதுங்க. அதையும் அசிங்கப்படாம அனுபவிக்கிற அஞ்சா நெஞ்சு நம்ம நாட்டு அரசியல்வாதிகளுக்கு மட்டும்தானே இருக்குதுங்க)

அதை விட்டுப் புட்டு " அலைவரிசை ஒதுக்கீட்டுல 20000 ஆயிரம் கோடிக்கு மேலே ஊழல் செஞ்சேன்னு சொல்றீங்களே...உங்க ஆட்சியில ஒரு லட்சம் கோடிக்கு மேலே நீங்க ஊழல் செஞ்சது எனக்குத் தெரியாதா"ன்னு பாரதிய ஜனதாவைப் பார்த்து அனுபல்லவி பாடிக்கிட்டு இருந்தா என்ன அர்த்தமுங்கன்னு என்னோடு காதுக்குள்ள கரண்டுக் கம்பியை விட்டாருங்க ஒரு சமுதாய சிந்தனையாளரு. அதை அப்படியே இங்க எடுத்துச் சொல்லி இருக்கேங்க. இதைப் படிச்சுப்புட்டு கோபத்திலே எனக்கு 'அடி'யாபிஷேகம் பண்ணிராதிங்க.

நீங்க கேட்டுக்கிட்டீங்கன்னா...என்னுகிட்ட சொன்னவர் யாருன்னு சுணக்கமில்லாம விரலை நீட்டிருவேங்க.  ஏன்னா.... காட்டிக்கொடுக்கிறதிலதான் நாம மன்னாதி மன்னன்களாச்சுங்களே....

Thursday, October 29, 2009

காடு வெட்டி குருவுக்கு நாக்கில் சனி

காடு வெட்டி குரு வீடு கட்டி விளையாட ஆரம்பிச்சுட்டாருங்க. டாஸ்மாக் தண்ணியடிச்சு பாஸ் மார்க் வாங்கின பேட்டை தாதா மாதிரி மைக்கை பிடிச்சு மானாங் கண்ணியா பேச தொடங்கிட்டாரு.




எல்லாம் அதிமுக தலைவி ஜெயலலிதாவைப்பத்தித்தான். இவரு அம்மா இல்லை.... சும்மா... இவருக்கு பவரு இல்லை.... பம்மான்னும் வார்த்தையாலே வசை கவியரங்கம் நடத்தத் தொடங்கிட்டாருங்க.

திருடித் தின்ன கருவாட்டு முள்ளு தொண்டையில சிக்கிக்கிட்ட பூனை மாதிரி திரு திருன்னு முழிச்சிக்கிட்டு இருந்த ராமதாசுக்கு அருமையான சந்தர்ப்பம் அடுக்குமாடி பஸ்சில வந்துக்கிட்டு இருக்குங்க.

அதுக்கு அச்சாரமாத்தான் காடுவெட்டு குருவின் பேச்சு இருக்குதுங்க. காங்கிரசுக்கும் திமுகவுக்கும் உரசல் உரலுக்குள்ள விழுகிற உலக்கை மாதிரி இடிக்க ஆரம்பிச்சிருக்குங்க.

வடநாட்டில காங்கிரசுக்கு ஒரு கம்பீரத்தை ராகுல் காந்தி ஏற்படுத்தி இருக்கிறாங்க. தேர்தலுக்கு முன்னாடி மாநிலக் கட்சிகளுக்கிட்ட மண்டி போட்டு நின்ன காங்கிரஸ்காரங்க இப்ப முத்திப் போன முருங்கைக்காய் மாதிரி முறுக்கிட்டு இருக்கிறாங்க.

அதனால தமிழ் நாட்டுலயும் ஏன் ஒரு கபடி ஆட்டம் ஆடக் கூடாதுன்னு ராகுல் கணக்குப் போடுறாராமுங்க. அந்தக் கணக்கில திமுக கழிக்கப்பட்டா

கலைஞருக்கு தெம்பூட்ட மருத்துவர் விடுக்கிற மடல் விடு தூதுதானாம்.. நம்ம காடு வெட்டியாரின் முக்கலும் முனகலும்.

ஒரு பெண்ணு காசுக்காக உடம்பை வித்தா அதுக்கு விபச்சாரமுன்னு சொல்லி கைது பண்ணுறாங்க. ஆனா.. காடு வெட்டியார் போன்ற அரசியல்வாதிகள் அசிங்கப்படாம நாக்கை வித்து விபச்சாரம் பண்ணுறாங்களே இதுக்கு சட்டப்படி ஒன்னும் செய்ய முடியாதுங்களா...

குந்தானி போனா... முந்தானை விரிக்க சிந்தாமணி இருக்கான்னு இந்தமுறையும் யோசிக்காம மாம்பழத்தைத் தூக்கி மடியில வச்சா அதுக்குள்ள இருக்கிற வண்டு (காடு வெட்டி) அடியில ஓட்டை போட்டு அஸ்திவாரத்தையே ஆட்டம் காண வச்சிடும்கிறதை கலைஞரு கவனமா புரிஞ்சிக்கிட்டா நல்லதுங்க.

ஏழரைச் சனியில மூனு பிரிவு உண்டுங்க. சிரசுச்சனி, ஜென்மச்சனி, பாதச்சனி..ன்னும் அதுல நம்ம காடு வெட்டியாருக்கு இருக்கிறது நாலாவது சனிங்க. அதாவது நாக்கில சனிங்க. இல்லையின்னா. மத்திய அமைச்சரவையில திறமைமிக்க அமைச்சரா பவனி வந்த அன்புமணி ராமதாசு தைலாபுரம் தோட்டத்தில மயிலாட்டம் பாத்துக்கிட்டு இருக்கிற நிலைமை வந்திருக்குமா.

Tuesday, October 27, 2009

வாய் கிழியப் பேசி என்ன பிரயோசனம் வைகோ அண்ணாச்சி

நம்ம வைகோ அண்ணாச்சி வாயை வச்சுக்கிட்டு சும்மா இருக்க மாட்டார் போலிருக்கு. முள் வேலி தடுப்பு முகாமில் இருந்து தமிழர்களை விடுவித்தால் மட்டும் போதாது. அவர்களுக்கு சொந்த மண்ணில் சுதந்திரம் வேண்டும் என்று இங்கு வாய் கிழிய கத்துறாருங்க.





அண்ணாச்சி.... இப்பத்தான் அரி...ஓம்முன்னு தமிழர்கள் அவங்க அவங்க இடத்துக்கு திரும்ப ஆரம்பிச்சு இருக்காங்க. நீங்க ஏதாவது ஏடாகூடாம கத்தி 'தனா பிறக்கிற பிள்ளையை சிஷேரியன்' பண்ண வச்சிடாதீங்க.

முந்தி இப்படி கத்திக் கத்தித்தான் விடுதலைப் புலிகளை வேரோடு சாச்சிட்டீங்க. இலங்கை அரசாங்கமே புலிகளைப் பாத்து பயந்துக்கிட்டு இருந்துச்சு. நீங்க அதில குளிர் காய நினைச்சீங்க.

அதனால தனி ஈழம்... தனி ஈழம்...ன்னு கூடிக்கூடி கும்மியடிச்சீங்க. விடுதலைப்புலிகளை அழிக்க வெளிநாட்டில போயி உதவி கேட்கிறதா...ன்னு வெட்கப்பட்டுக்கிட்டு இருந்த ராஜபக்சே வேற வழியில்லாம முக்காட விலக்கிட்டு ஆயுதப் பிச்சை எடுக்க ஆரம்பிச்சாரு.

அவரை உசுப்பேத்தி விட்டு இந்தியா, சீனா, பாகிஸ்தான்னு எல்லா நாட்டு தொடர்பையும் உண்டாக்கி விடுதலைப்புலிகளோடு மோத வச்சது உங்களைப்போல ஆளுங்க.

உணர்ச்சிபூர்வமா பாக்காம.. அறிவுப்பூர்வமா பாருங்க... இதில இருக்கிற உண்மை தெரியுமுங்க. தமிழ் நாட்டில புலிகளோட நடமாட்டமே இல்லாம செஞ்சு பலவீனப்படுத்தியது ஜெயலலிதாங்க. சோனியா காந்தி சும்மா இருந்தாலும் இந்த அம்மா பண்ணின அலும்பு கொஞ்ச நஞ்சமில்லைங்க.

அந்த அம்மா முந்தானைக்குள்ள இருந்துக்கிட்டு வைகோ அண்ணாச்சி பேசுறது...'பீ' தொட்டிக்குள்ள உட்காந்துக்கிட்டு 'பிரியாணி' வித்த கதைதாங்க.

அண்ணாச்சி... நீங்க இடத்தை மாத்தாத வரைக்கும்.. நடக்கிற தடத்தை மாத்தா வரைக்கும் நீங்க வாய் கிழிய பேசுற வசனங்க எல்லாம் செத்தவன் வாய்க்குள்ள சீனிய வச்சு திணிச்ச் மாதிரிதாங்கிற கொஞ்சம் நினைச்சுப்பாருங்க அண்ணாச்சி...

Thursday, October 22, 2009

திக்கு... திக்கு... திருமாவளவன்

"என்ன பழ.கருப்பையா அண்ணே... என்னையப் பத்தி தாறுமாறா எழுதி இருக்கீங்க. உங்களுக்கு என்ன கிறுக்கா பிடிச்சிருக்கு. தமிழ் நாட்டில தான் மேடை போட்டு படிச்சதையும் புடிச்சதையும் வாந்தி எடுக்க முடியும்.



இங்கதான் நான் என்ன சொன்னாலும் கேக்க இளிச்சவாயனுங்க இருக்காணுங்க. இலங்கையில வாயத் தொறந்தா கடவாய்ப் பல்லை கழட்டி குப்பியில் போட்டுல்ல கொடுத்து விட்டுருவானுங்க.

ராஜபக்சே என்ன பெரிசா சொல்லிட்டாரு... பிரபாகரனோட இருந்தா... உங்களையும் சுட்டு இருப்போம்ன்னு சொன்னாரு. இதை ஏன் நீங்க துப்பாக்கின்னு நினைக்கிறீங்க. எங்க சுரணையில்லா தம்பிங்க மாதிரி தோசை சுடுறதுன்னு நினைங்க.

நான் வீரமா ராஜபக்சேகிட்ட பேசலையாம். அந்த ஆளு முகத்தைப் பாத்ததுமே எனக்கு பேண்டுக்கு கீழ ஈரமானது உங்களுக்கு எங்கே தெரியப்போகுது. அதுக்குமேல விட்டா அடியிலே சுடுவாங்கன்னுட்டுத்தானே ரூம்ல வந்து சுருக்குப் பையைத் தொறந்தேன்.

இலங்கையில உட்காந்து இருக்கும்போது என்னோ முகத்தை நீங்க பாத்திங்களா அண்ணே... அண்ணாமலை படத்தில ரஜினிய அம்மணமா பாத்த குஷ்பு மாதிரி நானே அரண்டு போயி இருந்தேன்... நீங்க வேற....எரிச்சலை கிளப்பாதீங்கண்ணே..

நாம எங்காவது அப்பு வாங்கினாலோ அறை வாங்கினாலோ.... அதை காட்டிக்கூடாதுண்ணே... உடனே அதை மாத்துற மாதிரி டகால்டி வேலையில இறங்கிடணும்.


இப்ப பாருங்க. தில்லை நடராஜர் கோவிலில நந்தனார் நுழைஞ்ச பாதையைத் தொறக்கணுமுன்னு போராட்டத்தில இறங்கி இருக்கோம். இதுக்கு ராஜபக்சேனால ஒன்னும் கிழிக்க முடியாது.

என்னோட தம்பிங்க எல்லாம் "இப்ப என்ன செய்யுவே... இப்ப என்ன செய்யுவே..."ன்னு ராஜபக்சேயை பழிப்புக் காட்டுறது புளிப்பு மிட்டாய் சாப்பிடுற உங்களுக்கு எங்க தெரியப் போகிறது.

முள் வேலிக்குள்ள இருக்கிற தமிழர்களைப் பத்தி நான் பேசலையாம். எப்படியாவது நான் ராஜபக்சேக்கிட்ட எத்து வாங்கணுமுன்னு ரொம்ப பேர் நினைச்சாங்க. அதில நீங்க ஒருத்தருன்னு எனக்கு நல்லா புரிஞ்சு போச்சு.

முள் வேலி பிரச்சினை இப்ப உள்ளது. நந்தனார் பிரச்சினை பல நூறு வருசத்துக்கு முன்னது. எதை முதல்ல முடிக்கணும். இதுகூட தெரியாத முட்டாத்தனமான ஆளா இருக்கிறீங்களே.

இப்ப பாருங்க. அங்க தமிழர்களை கொன்ன பாவத்தைக் கழுவ தமிழ்நாட்டுக் கோவிலுக்கு இலங்கை மந்திரிங்க எல்லாம் வர்றாங்க. அங்க போயி போராட்டம் அது..இதுன்னு பம்மாத்து வேலை காட்டினா வேட்டிக்கு அடியில இல்ல வெடி வைப்பாங்க.




இங்க நந்தனாரும் கேக்க மாட்டாரு... தில்லை நடராஜரும் கேக்க மாட்டாரு... கலைஞருக்கும் குடைச்சல் கொடுத்த மாதிரி இருக்கும். சிரிச்சிக்கிட்டே என்னோட வாய்க்குள்ள குச்சியை விட்டு சிக்கெடுத்த ராஜபக்சே அண்ணாச்சிக்கு சவால் விட்ட மாதிரி இருக்கும்.

இப்ப புரியுதா இந்த திருமாவளவன் யாரு"ன்னு

திருமாவளவனைப் பத்தி பழ.கருப்பையா சொன்னதா வந்த செய்தியை பத்திரிகையில படிச்சேங்க. இதுக்கு திருமாவளவன் உண்மையிலேயே பதில் சொல்லி இருந்தா இப்படித்தாங்க இருக்கும்.

Wednesday, October 21, 2009

நெஞ்சு... குஞ்சு நெடுங்காடி விவேக்

பிரபுதேவாவும் நயன்தாராவும் பிரிஞ்சிட்டாங்களாமில்ல. இந்த எழவத்தான் நான் ஏற்கனவே எழுதியிருந்தேனுல்ல. அது சரி அல்வாவை எத்தனை நாளைக்குத்தான் அவக்கு அவக்குன்னு திங்க முடியும்.



நம்ம கலாச்சார காவலரு... அதுதாங்க நெஞ்சு... குஞ்சு நெடுங்காடி... இரண்டு அர்த்தத்தில பேசி தமிழ் செம்மொழியை செவ்வாய்க்கிரகத்தில நிலை நாட்டப் போறவரு... அவரு இதுமாதிரி சமாச்சாரங்களுக்கு என்ன சொல்லப் போறாரு.

செந்தமிழ் நாட்டில் சீர்திருத்த விதைப் பயிர் வளர்க்கிற சிருங்கார சிட்டுகள்தான் தமிழர்களின் தன்மானக் குன்றுகள் என்று குத்தாட்டம் போட்டு பிரபுதேவாவுக்கும் நயன்தாராவுக்கு ஜனாதிபதி விருதுக்கு சிபாரிசு செய்வாரோ.

இல்லாட்டி மாபெரும் நடிகர்கள் கூட்டத்தைக் கூட்டி மாலை மரியாதையின்னு போட்டு கலாச்சாரக் காவலர்கள்ன்னு பட்டம் கொடுப்பாரோ...



ஐயா விவேக்காரே.. நீங்க பத்திரிகைகாரங்களைப்பத்தி மைக்குக்கு முன்னாடி வாந்தி எடுத்த மாதிரி வீட்லயும் வாந்தி எடுப்பிகளோ... என்ன செய்யிறது... இரட்டை அர்த்தத்தில ஆபாசமா பேசி காசு பண்ணுறது விபச்சாரத்தை விட கேவலமானதுன்னு ஒரு பேராசிரியர் சொன்னாரு. அப்ப நீங்க எந்த ரகமுங்க.

இதுக்கும் கேசு போடுவிகளோ... இனி தமிழ் நாட்டில குடும்பப் பொண்ணா வாழுறவங்கதான் வெட்கப்பட்டுக்கிட்டு இருக்கணும் போல இருக்கு.

Tuesday, October 13, 2009

சிதறி நின்னு சிலம்பாட்டம் ஆடினா

ஒரு ஊரில் இரண்டு பிரிவு. ஆளுக்கொரு பகுதியை வைத்துக் கொண்டு சண்டை போட்டாங்க. ஒரு பிரிவு (X) முழுசும் எங்களோடது என்றது. இது எங்களுக்குச் சொந்தமான இடம். பிரித்துக் கொடுத்துவிடுங்கள் என்று இன்னொரு பிரிவு (Y) சொன்னது.


இந்த ஊருக்கு இடையில் ஒரு ஆறு.Y பிரிவும் இந்த ஊர்க்காரர்களும் ஒரே இனம். அதனால், ஆதரவுக்குரல்கள் ஓங்கி முழக்கமிட்டன.

"ஏய் தில்லு இருந்தா எங்க ஆளுமேலே கைய வச்சுப் பாரு...உன்னோட மண்டையப் பிளந்து மாவிளக்கு வச்சுடுவோம். எச்சி துப்பியே உன் இனத்தை காணாம ஆக்கிருவோம்... மூத்திரம் பேஞ்சே உன்னோட நாட்டை மூழ்கடிச்சுடுவோம்"ன்னு என மேடை போட்டு கர்ஜனை முழக்கமிட்டாங்க நிறைய பேர்.

இதன் காரணமாக X பிரிவு அச்சத்தோடு எல்லை தாண்டாமல் இருந்தது. இப்படியே ஆண்டுகள் ஓடின. இனிமேல் சும்மா இருக்கக்கூடாது என X பிரிவு அண்டை ஊர்க்காரர்களிடம் ஆதரவு தேடியது. அதற்கு ஆதரவும் கிடைத்தது.

அந்த பலத்தை வைத்துக் கொண்டு கொஞ்சம் முன்னேறியது. உடனே ஆற்றுக்கு அந்தப் பக்கம் இருந்து ஆவேசக்குரல்கள் பாய்ந்தன. இன்னும் கொஞ்சம் முன்னேறியது. இப்போதும் கூக்குரல் மட்டுமே ஒலித்தது.

இந்த நேரத்தில்தான் X பிரிவு ஒரு உண்மையைக் கண்டு கொண்டது. கூக்குரல் வந்த பக்கத்தில் கும்பல் கும்பலாக குரல்கள் வேறுபாடாக ஒலித்தன. Y பிரிவுக்கு ஆதரவு கொடுப்பதை விட ஒருவரை ஒருவர் வீழ்த்த Y பிரிவினரை பகடைக்காயாக பயன்படுத்துவதை கண்டு கொண்டது.

இது போர்க்குரல் அல்ல. வெறும் நாய்க்குரல் என்று முடிவுக்கு வந்து இறுதிக்கட்ட சண்டையில் இறங்கியது.

ஆற்றுக்கு அப்பால் இருந்து உதவி கிடைக்கும். X பிரிவினரை ஓட ஓட விரட்டி விடலாம் என கணக்குப் போட்ட Y பிரிவினருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இறுதியில் அவர்கள் உயிரும் போனது . அவர்களை நம்பி இருந்த மக்கள் முள் கம்பிகளுக்கு இடையே மூச்சுவிடும் பிணங்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.




ஆகா...ஆற்றுக்கு அப்பால் இருந்தவர்கள் 'டம்மி பீசு' என்பது தெரியாமல் இத்தனை ஆண்டுகளை வீணாக்கி விட்டோமே என X பிரிவினர் ஏளனத்தோடு கைகொட்டி நகைக்கின்றனர்.

இப்படி ஒரு இனமே அழிந்த பின்பும் ஆற்றுக்கு அப்பால் இருந்து இன்னும் ஆவேசக் குரல்கள் வெட்கமில்லாமல் வெடித்துக் கொண்டிருக்கின்றன.

ஒருவேளை " நாங்கள் வானத்தை வில்லாக வளைக்கிறோம். மணலைக் கயிறாக திரிக்கிறோம். ஒரு நிமிடத்தில் எதிரியை அழிக்கிறோம். ஆறுகோடி மக்களின் உயிரைத் அர்ப்பணிக்கிறோம்" என இந்த வெத்துவேட்டு வெங்காயங்கள் முழக்கமிடாமல் இருந்திருந்தால் அது ஊர்ப்பிரச்சனையாகவே இருந்திருக்கும். இந்த அழிவும் அவலமும் வந்திருக்காது என்பது என்னைப் போன்ற பலரின் கருத்து.

இந்தக் கதை புரியுதாங்க. X என்பது இலங்கைங்க. Y என்பது விடுதலைப்புலிங்க. ஆற்றுக்கு அப்பால் என்று நான் சொன்னது, நம்ம கண்டனக் கூட்ட மன்னர்கள் வசிக்கின்ற தமிழ்நாடுதாங்க. இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தி விட்டே அடுத்தவன் உடம்பை ரணகளமாக்குகிற இவுங்க சும்மா இருந்திருந்தா சுயபலத்தாலே விடுதலைப்புலிங்க இன்னும் கொஞ்ச நாளைக்கு தாக்குப் பிடிச்சிருப்பாங்க.

இப்ப கம்பிக்குள் இருந்து கண்ணீர் வடிக்கிற மக்களை கண்காட்சி மாதிரி பாக்கப் போயிருக்காங்க. அமெரிக்க அதிபர் ஒபாமாவையே "போடா ஹொய்யா"ங்கிறாரு நம்ம ராஜபக்சே.




நம்ம நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்க ராஜபக்சே வக்கிற விருந்தைத் தின்னுட்டு விரலை நக்கிக் கொண்டு வரவேண்டியதுதாங்க. "இங்க நடக்கிறதைப் பத்தி மூச்சுவிட்டா முட்டியை பேத்திடுவேன்" னு சொல்லித் தாங்க எல்லாரையும் அவரு உள்ளாற விட்டிருக்கிறாரு.

"நக்கின நாய் நாவெழும்பிக் குலைக்காது"ங்கிற பழமொழி மாதிரி போனமா வந்தமான்னு இவங்களும் இங்க வந்து போத்திக்கிட்டு படுக்கத்தான் போறாஙகளே ஒழிய வேற எந்தப் பிரயோசனமும் இல்லைங்க.

போன எம்பிக்கள் வந்து என்ன சொல்லப் போறாங்க. " அங்க ஒன்னுமே நடக்கல. முகாமுக்குள்ளே பாலாறும் தேனாறும் ஓடுது. இந்த ஜனங்க இருக்கிறது காட்டுப் பகுதிங்கிறதாலே சிங்கம், புலி, நாய், நரி வந்து இவங்களைக் கடிச்சிடக்கூடாதுன்னுதான் முள் கம்பி போட்டுருக்காங்க.

அங்க இருக்கிற மக்கள் இப்ப சுதந்திரமா சந்தோசமா சீட்டு, பல்லாங்குழி, ஆடுபுலி ஆட்டமுன்னு அமர்க்களப்படுத்திக்கிட்டு இருக்காங்க.

அவங்களுக்கு ராஜபக்சே செஞ்சிருக்கிற வசதிகளைப் பாத்து கொஞ்ச நாளைக்கு அங்க தங்கி இருக்கலாமுன்னு எங்களுக்கே ஆசை வந்துச்சுன்னா பாத்துக்கங்களே" ன்னு அறிக்கை விடப்போறாங்க.

அய்யோ இதெல்லாம் சுத்தப் பொய்யின்னு போக வாய்ப்பு கிடைக்காதவங்க குய்யோ முறையோன்னு கத்தப் போறாங்க. ஆனா, உண்மையிலேயே ஈழ மக்களைக் காப்பாத்தணுமுன்னா ஆரம்பத்தில இவங்க என்ன பண்ணியிருக்கணும்




எல்லாரும் ஒத்துமையா நின்னுருக்கணுமுங்க. அங்க பாதிக்கப்படுறது எங்க இனம். அதுக்காக நாங்க என்ன வேணாலும் செய்வோம். முதலமைச்சர் கருணாநிதிக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்போம். இந்தப் பிரச்சினையாலே திமுக ஆட்சி கலைக்கப்பட்டா எங்க ஒட்டு மொத்த ஓட்டும் திமுகவுக்குத்தான்னு நம்ம ஜெயலலிதா, ராமதாசு ஐயா, வைகோ அண்ணாச்சி அத்தனை பேரும் ஒரே மேடையில ஏறிச் சொல்லி இருந்தா மன்மோகன் மண்டையப் பிச்சுக்கிட்டு மல்லாந்து படுத்திருப்பாருங்க.

சோனியா காந்திக்கு நிமோனியா வந்து கொஞ்ச நாளைக்கு இத்தாலிக்கு இடம் பெயர்ந்திருப்பாருங்க. அதைவிட்டுப் பிட்டு கலைஞரைக் கவுக்கிறதலையே மும்முரமா இருந்தா எப்படிங்க. இதைத் தெரிஞ்சிக்க முடியாத அளவுக்கு கேணத்தனமாகவா இருக்காரு ராஜபக்சே.

"திருக்குறளைப் படிங்க.... திருக்குறளைப் படிங்க..."ன்னு அப்பாவி மக்களுக்கிட்ட தில்லாலங்கடி பாடுற தலைவர்கள் எல்லாம் முதல்ல 'அஞ்சுதல் அஞ்சாமை பேதமை'ங்க அந்த வரியை மனப்பாடம் செஞ்சுக்கிறது நல்லதுங்க.

சில காயத்தை மருந்து போட்டு ஆத்தலாம். சில காயம் தானா ஆறுனாத்தான் உண்டு. சொந்த மண்ணில் வெந்து சாகும் ஈழ மக்களும் இந்த ரகம்தாங்க.

செத்த பிணத்துக்கு முன்னாடி குத்தாட்டம் போட்டு குதூகலிக்கிற கூட்டம் நாமங்க. செத்துக் கொண்டிருக்கிற மக்களுக்கு முன்னாடி அதைச் செய்ய வேண்டாங்க. முதல்ல எல்லாரும் ஒன்னா சேருங்க. ஒத்துமையா நில்லுங்க. இமய மலையைக்கூட எலந்தப்பழம் மாதிரி தூக்கிடலாமுங்க.

சிதறி நின்னு சிலம்பாட்டம் ஆடினா....குரங்கு கூட கும்மாங்குத்து விடும்கிறத நம்ம ஜனங்க எப்பத்தான் புரிஞ்சுக்கப் போறாங்களோ

உன்னைப் பார்த்து உலகம் வியக்கிறது

இன்னைக்கு எழுதுறதுக்கு ஏராளமான செய்திங்க இருக்கே, எதை எழுதலாமுன்னு யோசிச்சுக்கிட்டு இருந்தேங்க. அப்ப ஏதோ ஒரு சத்தம் காதுக்குள்ள கேட்டுச்சு.


என்னன்னு திரும்பிப் பார்த்தேன். என்னோட பேனாதான் பரிதாபமா முனகிக்கிட்டு இருந்துச்சு. "இன்னைக்கு நயன்தாரா சென்னைக்கு வந்த செய்தியைப் பத்தித்தானே எழுதப் போறீங்க.

என்னைய என்ன சொரணை இல்லாத தமிழ் ஜனங்கன்னு நினைச்சீங்களா... அந்த நாசமாப் போன நயன்தாரா சென்னைக்கு வந்தா என்ன... மண்ணுக்குள்ள போனா என்ன... நெஞ்சை நிமித்திற மாதிரி ஒரு செய்தி எழுதுங்க"ன்னு கம்பீரமா சொன்னுச்சு.




அடுத்த வினாடி நோபல் பரிசு வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் என் மூளைக்குள்ள பளிச்சின்னு நின்னாருங்க. நோபல் பரிசுன்னா சும்மாவாங்க. அதுவும் ஆராய்ச்சித் துறையில. எத்தனையோ வெள்ளைக்காரங்களுக்கு மத்தியில நம்ம தமிழருக்கு நோபல் பரிசு கிடைச்சிருக்குன்னா அதை கோவில் கட்டி கொண்டாட வேண்டாமாங்க.

இதுமாதிரி சாதனைகளை மக்களுக்கு கொண்டு போயி சேர்க்க வேண்டிய பத்திரிகைங்க... "நயன்தாரா நாய்க்கு நெஞ்சு வலி. நமீதா நாய்க்கு குஞ்சு வலி"ன்னு கொட்டை கொட்டையா செய்தி போடுறாங்க.

அவங்களைக் குத்தம் சொல்லி என்ன பிரயோசனம்... குடிக்கிறதுக்கு சில்லுன்னு மோரைக் கொடுத்தாலும் கூவத்துத் தண்ணியத்தான் குடிப்பேன்னு அடம்பிடிக்கிற நம்ம மக்களைதான் சொல்லணுமுங்க.

டீக்கடையில இருந்த ஒரு பெருசுக்கிட்ட இந்த நோபல் பரிசு செய்திய மகிழ்ச்சியோட சொன்னேனுங்க. அப்படின்னா... என்னன்னு அது என்னைய திருப்பிக் கேட்டுச்சு. எனக்கு மண்டைக்கு ஏறிடுச்சுங்க.

நாக்கப் புடுங்கிற மாதிரி நாலு கேள்வி கேட்டேங்க. "அட போப்பா... நயன்தாராவ ரம்லத்து செறுப்பால அடிப்பாளா... விளக்குமாத்தால அடிப்பாளா...ன்னு கவலைப்பட்டுக்கிட்டு இருக்கேன். இந்த நேரத்தில் நோபல் பரிசு... நாவல் பரிசுன்னு.... அலட்டிக்காம சொல்லிச்சுங்க.

இந்த மாதிரி ஆட்களுக்கு எல்லாம் நோபல் பரிசுன்னா என்ன... அதனோட பெருமை என்ன... அதை வாங்கி இருக்கிற தமிழரோட மதிப்பு என்ன என்பதை புரிய வைக்கிற காரியத்தில் பத்திரிகைகாரங்க இறங்கணுமுங்க.

இதில அரசியல்வாதிகளை இழுக்க முடியாதுங்க. அவங்க கல்யாணவீட்டில மாப்பிள்ளையா இருக்கணும்பாங்க. எழவு வீட்டில பொணமா இருக்கணும்முன்னு நினைப்பாங்க. ஏமாந்து முதல் ராத்திரி அறை வரைக்கும் வர விட்டா மாப்பிள்ளை விரலைச் சூப்பிக்கிட்டு வெளியிலதான் நிக்கணுமுங்க.

என்னோட இந்தச் செய்தியை படிக்கும் நண்பர்கள், தங்களுடைய வலைப்பூவில நம்ம இனத்துக்கு மாபெரும் மரியாதையைக் கொண்டு வந்த வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனைப் பத்தி எழுதுங்க. இது அவருக்கு நாம செலுத்துற நன்றிக் கடனுங்க. அந்நிய நாட்டில இருந்தாலும் அடையாளத்தைத் தொலைக்காத் மனிதரான வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனுக்கு என்னோட ராஜ வணக்கமுங்க.

Monday, October 12, 2009

கணவனை மாத்திற ஹைடெக் விபச்சாரம். சிலரின் சித்து விளையாட்டு

எழுத வேண்டாமுன்னு நினைச்சாலும் இந்த எழவெடுத்த சினிமாக்காரங்க செய்தி மண்டையப் பிராண்டுறதாலே எதையாவது சொல்லத்தானே வேண்டி இருக்கு.


விபச்சாரம்ங்கிற அந்த வார்த்தைக்கு மனசைக்கிழிக்கிறமாதிரி ஒரு கவிஞர் அர்த்தம் சொல்லி இருக்காருங்க. "ஆடை வாங்குவதற்காக நிர்வாணத்தை விற்கிறோம்."

அரை வயிற்று கஞ்சிக்கு வழியில்லாத அப்பாவிகள் செய்யும் காரியத்துக்கு கவிஞர் எழுதுன ரத்த வரிகள். ஆனால், இவர்கள் மாட்டினால் போலீஸ்காரர்கள் நார் நாராக கிழித்து விடுவார்கள்.

எட்டடுக்கு மாளிகையில் எரிகின்ற விளக்குகளுக்கு இடையே லட்சக்கணக்காக பணம் வாங்கிக்கொண்டு விபச்சாரம் செய்யும் நடிகைகளைத் தொட்டால் போலீஸ்காரர்கள் நார் நாராகக் கிழிந்து போவார்கள்.

பொது மக்களோட சிந்தனை மாறாத வரைக்கும் இவங்களை ஒன்னுமே பண்ண முடியாதுங்க. வீடியோ படமே எடுத்துக் காட்டினாலும் அது கிராபிக்ஸ்சுன்னு சொல்லி வெளியே வந்திருவாங்க.

இவ்வளவு கர்மத்துக்கு பிறகும் விபச்சாரத்தில பிடிபட்ட அந்த புவனேஸ்வரி துப்புற எச்சியை பிரசாதம் போல வாங்கி கண்ணுல ஒத்திக்கிற கர்மாந்திரம் பிடிச்ச ஜனங்க 80 சதவிகிதம் பேர் இருக்காங்க.

அதனால, விபச்சாரம் அது...இது..ங்கிற வில்லுப்பாட்டெல்லாம் தமிழ் நாட்டில எடுபடாதுங்க. சிங்கம் சிங்கிளாத்தான் வருமுன்னு சிவாஜி படத்தில ரஜினிகாந்த் சொல்லுவார்.

நம்ம புத்திசாலி மடையனுங்க எல்லாரும் அதை மேடை மேடைக்கு பேசிக்கிட்டு இருக்கிறானுங்க. ஆனா, டிஸ்கவரி சேனலைப் பாருங்க. எந்தச் சிங்கமாவது தனியா வேட்டையாடுதா... இல்ல தனியாத்தான் நடந்து போகுதா...

சந்திரமுகி படத்தில எவ்வளவு கேவலமான இரட்டை அர்த்த வசனங்கள். சிவாஜி படத்தில ஸ்ரேயே ஒரு பாட்டுக்கு ஆடும்போது போட்டிருக்கிற உடையைப் பாருங்க. குலுக்கிற குலுக்கில கொட்டாங்கச்சியே கழண்டு விழுகிற மாதிரி இருக்கும்.




இந்தப் படத்தை பாத்துட்டு கொடிகாஞ்சு போன ஒரு பெருசு ராத்திரியிலே கிழவிக்கிட்ட சில்மிஷம் பண்ண,, அந்தக் கிழவி இனிமே இந்த மாதிரி படத்துக்கு போவியா...போவியான்னு விளக்கு மாத்தாலே விளாசிருச்சாம்.

இப்படிப்பட்ட நடிகர் நடிகைங்கதான் நம்ம கலாச்சாரத்தைக் கட்டிக் காக்கிற தெய்வம்முன்னு நினைக்கிறாங்க. அவங்களுக்கு ஒரு பிரச்சினையின்ன உடனே ஒன்னா சேந்துட்டாங்க.

திரைப்படத்திலையும் சீரியல்லையும் பெண்களை மகா கேவலமாக காட்டுறாங்களே...அதையும் நம்ம பெண்கள் வாயப் பிளந்து பாக்கிறாங்களே... இதை எதுத்து போராட்டம் நடத்த முடியுங்களா... ஏன்னா... நாம... அசிங்கத்தையே அல்வான்னு சாப்பிடற அவல நிலைக்கு வந்துட்டோ முங்க.

என்னோட நண்பன் ஹைடெக் விபச்சாரமுன்னு ஒன்னை சொன்னான். அதை அப்படியே இங்க எழுதுறேன். சரியா.. தப்பா...ன்னு நீங்கதான் சொல்லணும்.

காசு வாங்கிக்கிட்டு விபச்சாரம் பண்ணினாத்தானே போலீஸ் பிடிக்கும்.( அரசியல்வாதிகள் ஆதரவில்லாதவர்களை) ஆனா, அதையே வித்தியாசமா பண்ணினா..

ஒரு பணக்காரரை திருமணம் செய்து கொள்வது. அவரிடம் இருக்கும் காசு கரைந்தவுடன் இன்னொரு பணக்காரனைக் கல்யாணம் செய்வது. இப்படியே இட்லி, வடை, தோசை, பிட்ஸா, கிண்டெக்கின்னு ருசிக்கு ருசி... பணத்துக்கு பணம்... ஆனா, சமுதாயத்தில இவங்கதான் புரட்சிப் பெண்மணிகள்.

ஒரே புருசனோடு குப்பை கொட்டுறவங்க ஏமாந்த சோணகிரிங்க. வாழத்தெரியாதவங்க. இந்த பல புருசக் குத்துவிளக்குகளைத்தான் பல இடங்களுக்கு குத்துவிளக்கு ஏத்த கூப்பிடுறாங்க கவரிமான் பரம்பரைத் தமிழர்கள்.



பணம்தான் வாழ்க்கையின்னு ஆயிப் போச்சு. அந்தப் பணத்தை தேட முடியாத ஏழைங்க எல்லாரும் சினிமாவைப் பாத்து அது மாதிரே கற்பனையில வாழுறாங்க. இந்தச் சிந்தனை இருக்குற வரைக்கு சினிமாக்காரங்களை ஒன்னும் பண்ணமுடியாதுங்க.

சினிமாக்காரங்களுக்கு ரசிகர்கள் இருக்காங்க. ரசிகர்களுக்கிட்ட ஓட்டு இருக்கு. இந்த ஓட்டு அரசியல்வாதிகளுக்குத் தேவை. கூட்டிக் கழித்து பாருங்க. ஒரு பத்திரிகைகாரனை அவசர அவசரமாக கைது பண்ணின கணக்கு புரியும்.

இதுல அடுத்த வீட்டு பெண்களைப் பத்தி எழுதினா இப்படித்தான் நடக்குமுன்னு வியாக்கியானம் வேறு. இவங்களெல்லாம் பெண்களா.... எங்களோடு சேர்த்து இவங்களை ஒப்பிடலாமான்னு நம்ம புலியை முறத்தாலே விரட்டின தமிழச்சிங்க எல்லாம் பொங்கி எழுந்தாத்தான் விடிவு கிடைக்குமுங்க. பொங்குவாங்களா...

Friday, October 9, 2009

நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா சொல்லுங்கள்

உலகத்தில் எத்தனையோ தர்மங்கள் இருக்குங்க. அதில இரண்டு தர்மங்கள் மிக மிக முக்கியமானவைங்க. ஒன்னும் யுத்த தர்மமுங்க. இன்னொன்னு பத்திரிகை தர்மமுங்க.


இதில எது தடம்புரண்டாலும் மக்களுக்கு நல்லது இல்லைங்க. விபச்சார வழக்கில மாட்டிக்கிட்ட புவனேஸ்வரி சொன்னதா ஒரு பத்திரிகை வெளியிட்ட செய்தி திரை உலகத்தையே திக்கு முக்காட வச்சிருச்சுங்க.

ஆனா, அது தவறான செய்தின்னு போலீசும் புவனேஸ்வரியும் மறுத்திருக்காங்க. இது குறிச்சு நடவடிக்கை எடுக்கணுமுன்னு திரைப் பட்டாளமே முதல்வர் வீட்டு கதவை தட்டிருச்சுங்க.

இப்ப அந்த செய்தியை வெளியிட்ட பத்திரிகை ஆசிரியர் சிறைக்குள் இருக்காருங்க. ஒரு செய்தி வெளியிடுவதற்கு முன்னர் எந்த அளவுக்கு உண்மையின்னு ஆராய்ந்து பார்க்க வேண்டியது அவசியமுங்க.

ஒரு பேனா தலைகுனியும்போது உண்மை தலை நிமிரணுமுங்க. தவறு செய்யாதவங்க தலைகுனியக்கூடாதுங்க. அந்த வகையில சட்டம் கடமையை செஞ்சுருக்குங்க.




அதே நேரத்தில் இதுக்கு கொதிச்சு எழுந்த பெரிய நடிகர்கள் எல்லாம் ஒரு சில விஷயங்களில அக்கறையா இருந்தா நல்லதுங்கறது என்னோட அபிப்பிராயமுங்க. தினமலருக்கு எதிரா போராட்டமுன்னு சொல்லி ஆளாளுக்கு நடிகர் நடிகைகள் ஆபாச வார்த்தைகளால் அர்ச்சனை பண்ணியிருக்காங்க. இது எந்த வகையில நியாயமுன்னு தெரியலைங்க.

இப்ப பத்திரிகைகாரங்களும் ஒன்னா சேர்ந்திருக்காங்க. அவங்க கூட்டம் போட்டு போராட்டமுன்னு ஆரம்பிச்சா என்ன ஆகுமுங்க. இதெல்லாம் நாட்டுக்கு நல்லது இல்லைங்க. சின்னக் கலைவாணர்னு பேர வச்சுக்கிட்டு விவேக் ரொம்ப சின்னத்தனமா பேசி இருக்கிறாராமுங்க. பத்திரிகைகாரங்க வீட்டு பொம்பிளைங்க எல்லாம் விளக்கமாத்தைத் தூக்கிட்டு வந்தா சின்னக் கலைவாணர் நெஞ்சு ( அவரோட பாஷையில் குஞ்சு) பதற ஓட வேண்டியது தாங்க.




திரையுலகத்தில தப்பே நடக்கலைன்னு சொன்னா இமய மலையை இடுப்பு வேட்டிக்குள்ள மறைச்ச கதையா போயிடுமுங்க. எங்காவது தப்பு நடக்குதுன்னு தெரிஞ்சா அதை அவங்களைக் கூப்பிட்டு உடனே எச்சரிக்கை பண்ணணுமுங்க.

நடிகர் சங்கத்தில இருந்து அவங்கள நீக்கி படங்களில நடிக்க முடியாதபடி பார்த்துக்கணுமுங்க. இது தனிமனித உரிமையில தலையிடுற வேலையின்னு நடிகர் சங்கம் ஒதுங்கக் கூடாதுங்க.

இன்னொரு முக்கியமான காரியத்தை நடிகர் சங்கம் கண்டிப்பா செய்யணுமுங்க. பொது நிகழ்ச்சிகளில கலந்துக்கிற நடிகைகள் ஓரளவு ஆபாசமில்லா உடை உடுத்தி போகணுமுன்னு ஒரு தீர்மானத்தை கொண்டு வரணுமுங்க. சில நடிகைகள் போட்டுக்கிட்டு வர்ற உடையப் பாத்தா நம்ம சிறுசுகளுக்கும் பெருசுகளுக்கும் சூடு 200 டிகிரியைத் தாண்டி எகிறிடுதுங்க.

எந்தப் பொருளை எடுத்தாலும் நடிகைங்க பேரைச் சொல்லித்தான் விக்கிறாங்க. குஷ்பு சேலை, அசின் சேலை, நமீதா சுடிதார்ன்னு கடைக்கு கடை கூவிக்கூவி விக்கிறாங்க. அதை நம்ம பொண்ணுங்க போட்டி போட்டுக்கிட்டு வாங்குறாங்க.

ஒரு காலத்தில குஷ்புவுக்கு கோவில் கட்டினாங்க. குஷ்பு இட்லின்னு கூட வித்தாங்க. இப்படி நம்ம பெண்களுக்கு முன்னுதாரணமா இருக்கும் நடிகைங்க அக வாழ்க்கையில எப்படி இருந்தாலும் புற வாழ்க்கையில் ஒரு கட்டுக்கோப்பைக் கடைப்பிடிக்கிறது நல்லதுங்க.




விஜயகாந்த், சரத்குமார் போன்ற தைரியமான நடிகருங்க இந்த ஒழுங்கை கொண்டு வந்துட்டாங்கன்னா தமிழ் பண்பாடு நிலைக்கணுமுன்னு நினைக்கிற அத்தனை பேரும் உங்களைக் கையெடுத்துக் கும்பிடுவாங்க.

கடைசியா ஒன்னு கேக்கிறேங்க... நீங்க நடிக நடிகைங்கிறதை மறந்திட்டு ஒரு சாதாரண மனுசனா இருந்து நீங்க நடிச்ச படங்களைப் பாருங்க. எவ்வளவு கேவலமா இருக்குன்னு அப்ப தெரியும். நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானான்னு தமிழ் சமுதாயம் கேள்வி கேட்கிறமாதிரி நடிகர் நடிகைகள் நடந்துக்காக இருக்கிறது நல்லதுஙக.

சரி... குளவிக்கூட்டை கலைச்சு விட்டுட்டுங்க. குளவி கொடுக்கை நீங்க புடுங்கப் போறீங்களா.... குளவி கொடுக்கு உங்களைப் பதம் பார்க்கப் போகுதா என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்கணுமுங்க.

நான் 'என் வழி' யில் திருடிய படங்கள் இவை...நன்றி

Thursday, October 8, 2009

படித்தவனை விட நடித்தவனுக்குத்தான் தமிழ்நாட்டில் மரியாதை அதிகம்

போன மாதக் குமுதம் இதழில் ஒரு செய்தி படிச்சேங்க. கந்தசாமி படத்தைப் பத்தி எழுத்தாளர் ஞாநி ஏதோ கருத்து சொல்லி இருக்கிறாருன்னு நினைக்கிறேங்க.


அதுக்கு அந்த படத்தோட இயக்குனர் சுசி கணேசன் கண்ட மேனிக்கு ஒரு பதில் சொல்லி இருக்காருங்க. கந்தசாமி படம் ஒரு வாரத்திலேயே பல கோடி ரூபாய்க்கு விற்பனையாகி விட்டதாம். அந்தப் படத்துக்கு ஈடு இணையே இல்லையாம்.தரத்தில புடம் போட்ட தங்கமாம். அதனால அது பத்தி ஞானி செஞ்ச விமர்சனத்தை ஒரு குப்பைன்னு சொல்லி இருக்காருங்க. தெரியாமத்தான் கேட்கிறேன்...





வீட்டு வேலைக்கு போற ஒரு குடும்பப்பொண்ணு ஒரு நாளைக்கு நூறு ரூபாய் சம்பாதிக்கிறா.... ஆனா, விபச்சாரம் செய்ற ஒரு பொண்ணு ஒரு மணி நேரத்துக்கு 20000 ரூபாய் சம்பாதிக்கிறா... இதுக்காக அவளைத் தரமான பொண்ணுன்னு சொல்ல முடியுமா...

ஒரு நாளைக்கு 50 லட்ச ரூபாய்க்கு பால் விக்குது. ஆனா... 500 கோடி ரூபாய்க்கு மதுபானம் விக்கிது. அதுக்காக பாலை விட மதுபானம் எவ்வளவோ ஒசத்தின்னு சொல்ல முடியுமா....

ஒரு நாளைக்கு ஊதுபத்தி தமிழ்நாடு பூராம் எவ்வளவு விக்குதுன்னு தெரியாது. ஆனா... சிகரெட்டு 50 கோடிக்கு மேலே தாண்டும். இதை வச்சு சிகரெட்டுக்கு எவ்வளவு மரியாதை அப்படின்னு சொல்ல முடியுமா...

நான் தஞ்சாவூரில படிச்சிக்கிட்டு இருக்கும்போது பேருந்து நிலையத்துக்கிட்ட இருக்கும் ஒரு தியேட்டருக்கு சினிமா பாக்க போவேன். சாயங்கால காட்சிக்கு ஆளு இல்லாம காத்தாடும். ஆனா, பத்து மணி காட்சிக்கு கிழடு கெட்டைன்னு வித்தியாசம் இல்லாம கூட்டம் அலைமோதும்.





எதுக்கு தெரியுங்களா.. நம்ம மலையாளத்து நடிகை ஷகிலா அக்காவோட பிட் சும்மா ஐஞ்சு நிமிசம் ஓடும். அந்தக் காட்சி முடிஞ்ச உடனேயே எலிக்குஞ்சு பொந்தை விட்டு வெளிய வந்த மாதிரி ரொம்பப் பேரு கிளம்பி போயிருவாங்க.

அந்தக் காட்சியை ரொம்பப்பேரு விரும்புறாங்கன்னுட்டு தரத்தில் சிறந்ததுன்னு தம்பட்டம் அடிக்க முடியுமுங்களா.. எனக்கு ஒன்னு மட்டும் புரியலைங்க. ஒரு படத்தை பல கோடி ரூபாய்க்கு எடுத்து வெற்றிகரமா ஓட வைக்கிற ஒரு இயக்குனருக்கு இது மாதிரியான சாதாரண விஷயம்கூட மண்டைக்குள் உரைக்கலையேங்கிறதுதான்.

கந்தசாமி படத்திலகூட நம்ம ஸ்ரேயா கஷ்டப்பட்டுத்தானே துணி போட்டுக்கிட்டு இருக்காங்க. சென்சார்போர்டுன்னு ஒன்னு இல்லாட்டி அதையும் கழட்டி எறிஞ்சிட்டு கபடி ஆட்டம் ஆடிட மாட்டாங்க.




முதல்வர் கலைஞர் கருணாநிதி கலந்து கொண்ட நிகழ்ச்சியிலே முக்கால்வாசியைத் திறந்து காட்டியபடி இருந்தவங்க நம்ம ஸ்ரேயா...அதையும் பேப்பர்காரங்க படம்புடுச்சு போட்டாங்க. எங்க கிராமத்தில இருந்த ஒரு பெருசு அந்தப் படத்தை நக்கி நக்கியே பேப்பரைக் கிழிச்சிடுச்சு. இப்படி இருக்கும்போது படம் ஏங்க பல கோடிக்கு விக்காது.

படம் பல பேரைக் கவர்ந்திருக்கு... பல கோடியைச் சம்பாதித்து இருக்கு.... எல்லாரும் நல்ல லாபம் சம்பாதிச்சு இருக்கீங்க. உங்களுடைய உழைப்பை பாராட்டுறேங்க. அதுக்காக உலகத்திலேயே கந்தசாமி படம்தான் தரத்தில் உயர்ந்ததுன்னு சொல்லி உதார் காட்டாதீங்க.

பல துறைகளில பட்டப் படிப்பு முடிச்சு பேராசிரியர்களைவிட ஒரு படத்தில தலை காட்டினவனுக்கு தமிழ்நாட்டில மரியாதை ஜாஸ்திங்கிற எதார்த்த உண்மை தெரிஞ்சவங்க நான். அதனால ஞாநியை விட நீங்க பல மடங்கு பிரபலமானவருன்னு புரியுதுங்க.

அதுக்காக பண்பட்ட பத்திரிகையாளரான ஞாநி மாதிரி ஆளுங்களை அவதூறா பேசாதீங்க. அது அவரைப் பேசுனதா அர்த்தம் இல்லைங்க. அன்னைத் தமிழைப் பேசுனதா அர்த்தமுங்க.




அது சரி தமிழ்நாட்டுல எங்க தமிழ் இருக்கு. தொலைக்காட்சியிலும் திரைப்படங்களிலும் தொலைந்து போன 80 சதவிகித மக்கள் முழிச்சுக்காத வரைக்கும் உங்க காட்டுல மழைதாங்க. அதனால ஞாநியை என்ன கலைவாணியைக் கூட உங்க கால் செறுப்பாத்தானே நினைப்பீங்க.

Tuesday, October 6, 2009

போன மச்சான் திரும்பி வந்தான் பூ மணத்தோட

"போன மச்சான் திரும்பி வந்தான் பூ மணத்தோட"...


வீராப்பா பேசி விட்டு வீட்டை விட்டு போன மாப்பிள்ளை தட்டுக்கெட்டு திரும்பி வந்தால் கேலிக்காரர்கள் நக்கலாக பேசும் நையாண்டி வார்த்தைங்க இது.




இதுதான் இப்ப ராமதாசு ஐயாவின் கதை. இவரு எதுக்குங்க திமுகவை விட்டுப் போனாரு. கலைஞர் இவரை என்ன மரியாதைக் குறைச்சலாகவா நடத்தினாரு. 'திமிரு எடுத்த கொக்கு கெழுத்தியை பிடிச்சு முழுங்கின' கதையா வெளிக்கிளம்பி விட்டு இப்ப புதுசு புதுசா கதை விட்டுக்கிட்டு இருக்கிறாரு.

'மச்சான்கிட்டயும் கொழுந்தன் கிட்டயேயும் மாத்தி மாத்தி போயி காரியம் பார்த்த மாரியம்மா கடைசியில நடுத்தெருவில நின்னு நாறுனாளாம்' இந்தக் கதையாக திருதிருன்னு முழிச்சிக்கிட்டு நிக்கிறாரு நம்ம மருத்துவரு.

கலைஞர் நல்லவரா.... கெட்டவரா... என்பதில்லைங்க பிரச்சினை. மருத்துவருக்கும் வைகோவுக்கும் மரியாதை கொடுத்து வச்சிருந்தாருங்கிறதை மறுக்க முடியுமா... ஆனா, அவங்க கலைஞருக்கு செஞ்ச துரோகம் எந்தக் காலத்திலையும் தூங்காதுங்க.

செஞ்ச தப்பை உணர்ந்தா... மக்கள் போனா போகுதுன்னு மறந்திடுவாங்க. அதை விட்டுட்டு ஒடம்பு முழுதும் சாக்கடையை பூசிக்கிட்டு ஒன்னுமே நடக்காதமாதிரி பேசினா....தெருத்தெருவா போனாலும் மருத்துவரை திரும்பிப் பார்க்கக்கூட ஆளு இருக்காதுங்க.






மருத்துவர் ஐயா... இன்னிக்குத்தான் ஜெயலலிதாவோட குணம் தெரிஞ்ச மாதிரி டகால்டி வேலை காட்டாம துரோகத்துக்கு மருந்து போடப் பாருங்க. வரும்காலத்திலேயாவது வைப்பாட்டியா இருக்காம... பொண்டாட்டியா இருக்கப் பாருங்க.

எதுக்கு இம்புட்டு கோபம் சரத்குமார் அண்ணாச்சி....?

சரத்குமார் அண்ணாச்சி புவனேஸ்வரி வாக்குமூலத்தைக் கேட்டு பொங்கி எழுந்துட்டீங்களே... அடுத்து நீங்க பாட்டுக்கு சகட்டுமேனிக்கு பத்திரிகைக்காரங்களுக்கு பஞ்ச் கொடுத்திருக்கிறீங்க.


அதெல்லாம் சரிதாங்க அண்ணாச்சி.... நாங்கெல்லாம் ஒரு குடும்பமுன்னு ஒரு பெரிய கண்டுபிடிப்பு அணுகுண்டை வெடிச்சிருக்கீங்க. அண்ணாச்சி.... ஒரு குடும்பத்தில பிள்ளை தப்பு பண்ணினா...குடும்பத்தலைவர் என்ன பண்ணுவார்.




பிள்ளையைப் பக்கத்தில கூப்பிட்டு "இங்க பாரப்பா... தலைமுறை தலைமுறையா தலை நிமிர்ந்து வாழ்ந்த குடும்பம்.. நீ பாட்டுக்கு சந்து முனையில சிந்து பாடி குடும்பத்தை சந்தியில நிறுத்திடாதே... நீ ஒருத்தன் செய்யுற தப்பாலே நம்ம குடும்பமே தலைகுனிஞ்சு நிக்குது"ன்னு சொல்வார்.


நெஞ்சில கையை வச்சு சொல்லுங்க அண்ணாச்சி.. நீங்க எப்பவாவது அப்படி சொல்லி இருக்கிறீங்களா...

சினிமாவுல இருப்பவங்களுக்கு காசு மேலே காசு கொட்டுது. அதனாலதான் கிழக்கு கடற்கரை சாலையையே சினிமா பட்டாளம் நாறடிச்சுக்கிட்டு இருக்குது. இதை நான் சொல்லலை சாமி. காலங்காலமா வருகிற பத்திரிகை தகவல்தான் சொல்லுது. இதைத் தடுக்க நடவடிக்கை எடுத்திருக்கீகலா அப்பு.

பத்திரிகை மேல பாய்ஞ்சு பிறாண்டி இருக்கீகலே.. இந்த பத்திரிகைகள்தான் உங்கள வெளிச்சத்துக்கு கொண்டு வந்து வெள்ளிக்காசுகளில குளிக்க வச்சுச்சு. ஆதாயமுன்னா ஆ....ன்னு வாயைப் பிளக்கிறது... பாதகமுன்னு உர்....ன்னு பல்லைக் காட்டுறதா..... இது என்ன பழக்கமுங்க அண்ணாச்சி.

சரி உங்ககிட்ட ஒரே ஒரு கேள்வி.... இந்தப் பொண்ணு புவனேஸ்வரி ஏற்கனவே இரவு சேவை செஞ்சு மாட்டிக்கிட்டது உங்களுக்கு தெரியும்தானே அண்ணாச்சி.

அதை கூப்பிட்டு " அம்மா... நாமெல்லாம் ஒரே குடும்பம்... நீ தப்பு பண்ணினா அது நம்ம திரைக்குடும்பத்தை பாதிக்கும்...ன்னு புத்தி சொல்லி புதுப்பாதை காட்டி இருக்கலாமுல்ல. நீங்க என்ன அலும்பு பண்ணினாலும் சொரணை இல்லாத தமிழ்க்கூட்டம் உங்க காலைக் கவ்விக்கிட்டுத்தானே கிடக்கப்போகுது. பின்ன எதுக்கு அண்ணாச்சி உங்களுக்கு இம்புட்டு கோபம்.

கிராமத்து பக்கமெல்லாம் ஒருத்தர் நியாயம் பேசினா... அவரு ஓரளவுக்கு வாழ்க்கையில சரியா இருக்கணும் அண்ணாச்சி. இல்லையின்னா "உனக்கு இதைப்பத்தி பேச என்ன யோக்கியதை இருக்கு"ன்னு முகத்தில காரி துப்பிருவாங்க அண்ணாச்சி.




இந்த யோக்கியதை எத்தனை பேருக்கு இருக்குன்னு கணக்கெடுத்துப்புட்டு அப்புறமா பத்திரிகைகாரங்க மேலே பாய்ங்க அண்ணாச்சி. காசு இருந்தா என்ன கர்மத்தை வேண்டுமானாலும் செய்யலாம்.... பேசலாம்...கிற காலத்தில உங்களை மாதிரி ஆளுங்களை பகைச்சுக்கிறது பாம்புக்கிட்ட போய் பல்லைக் காட்டச்சொன்ன கதையா இல்ல போயிரும். சத்தம் போடுறதை விட்டுப்புட்டு உங்க பக்கத்தைக் கொஞ்சம் சுத்தப்படுத்துங்க அண்ணாச்சி.
ஷகிலாவோட கில்பான்சி படங்கள் நிறைய இருக்குங்க. அதை போட மனசு வரலைங்க அண்ணாச்சி...

Monday, October 5, 2009

நமீதா விலை ஒரு லட்சமா....?

நடிகர் நடிகைகள் குறித்து ஏற்கனவே நான் எழுதி இருக்கிறேங்க. என்னோட் நண்பர்கள் சிலருக்கு இதில வருத்தமுங்க. அதிலும் நமீதாமேல அபார பாசம் வச்சிருக்கிற ஒருத்தர் என்னோட சண்டைக்கே வந்திட்டாருங்க.





ஆனா, நேத்து செய்தி விபச்சார வழக்கில் நடிகை புவனேஸ்வரி கைது. அவரை கைது செய்யப்போன போலீசுக்கிட்ட அழுது புலம்பி இருக்கிறாருங்க. "எத்தனையோ நடிகைங்க ஏசி ரூம்பில லட்சக்கணக்கில பணத்தை வாங்கிக்கிட்டு விபச்சாரம் பண்ணுறாங்க. அவங்களையெல்லாம் பிடிக்காம என்னைய மட்டும் குறி வச்சே புடிக்கிறீங்களே. என்னோட பொழப்பில மண்ணை வாரி போட்டுட்டீங்களே" கண்ணீர் விட்டு இருக்கிறாருங்க.

அதோட விபச்சாரம் செய்யும் நடிகைங்க பேரையும் அள்ளி விட்டிருக்கிறாருங்க. அதுல நமீதா ஒரு லட்சம் வாங்கிக்கிட்டு விபச்சாரம் செய்யிறதா சொல்லி இருக்கிறாருங்க. இந்த செய்தியை என் நண்பன்கிட்ட காட்டினேனுங்க.




அவன் சங்கடப்படுறதுக்கு பதிலா பெருமையா சொல்றாங்க. " பாத்தியா உடம்பைப் போலவே தொகையிலும் என்னோட ஆளு டாப் லிஸ்ட்ல இருக்குது. இப்ப தெரிஞ்சுக்க என்னோட ஆளின் மகிமையை" ன்னு சந்தோசத்தோடு சொல்றாங்க.

அதோட இன்னொரு விஷயத்தையும் சொன்னானுங்க. " நீ என்னதான் எழுதினாலும் ஒரு பயலும் அதை பெரிசா நினைக்க மாட்டான். விலை கூடக் கூடத்தானே சொத்துக்கு மதிப்பு. அதுமாதிரிதான் நமீதாவும்' ன்னு சந்தோசத்தோடு சொல்றாங்க. இப்ப இருக்கிற இளைஞர்கள் எல்லாரும் இப்படித்தானுங்களா.... நான் தான் உலக நிலவரம் தெரியாம குண்டுச் சட்டிக்குள்ள குதிரை ஓட்டிக்கிட்டு இருக்கேனா...

எனக்கு ஆறுதலா யாராவது பதில் சொல்லுங்களேன்.

Thursday, October 1, 2009

பாவம் பத்துமலை முருகன்

நம்ம ஜனங்களைக் கட்டிப் போட்டு வைச்சிருக்கிறது மூன்று அம்சமுங்க. 1-இறை நம்பிக்கை . 2.சினிமா. 3- அரசியல். இந்த மூன்று காரியத்திலும் அறிவுக்கு இடம் கொடுப்பது அறவே இல்லைன்னு என் நண்பன் அடிக்கடி என்னிடம் சொல்லுவான்.





இதில் எனக்கு உடன்பாடு இல்லைன்னாலும் சில நேரங்களில அவன் சொல்வது சரித்தான்னு என்னோட மனசுக்கு படுதுங்க.

சமீபத்தில் வந்த ஒரு செய்திங்க. கோவிலுக்குள்ளேயே ஒரு பூசாரி காமக் களியாட்டம் நடத்தி இருக்காருங்க. அவரை போலீஸ் தேடுவதாக தகவலுங்க.

அந்தப் பூசாரியை ஒரு பக்கம் தள்ளுங்க. சாமி கும்பிட வந்த பெண்கள் சல்லாபத்துக்கு இணங்கி இருக்காங்கன்னா... இது தனிப்பட்ட விஷயமுன்னு தள்ள முடியாதுங்க. பெண்கள் சமுதாயத்தையே தலைகுனிய வைக்கிற சம்பவமுங்க. தப்பு செஞ்சது யாரோ... எவரோ.... அந்தக் கோவிலுக்குப் போன எல்லா பெண்களும் சந்தேக வட்டத்துல வந்துடமாட்டாங்களா... நம்ம ஆன்மீகத் தத்துவமே அடிபட்டு போயிடாதுங்களா...

அடுத்தது சினிமா... கொட்டுற பணத்தை என்ன செய்யிறதுன்னு தெரியாம சினிமா நடிகருங்க, கும்மாளம் அடிக்கிறாங்க. அந்தரங்க வாழ்க்கையை அலசிப் பாத்தா கூவம் சாக்கடை எவ்வளவோ தேவலைங்க. ( இப்படி சொல்லியதற்காக சிவகுமார் போன்ற சிறந்த மனிதர்கள் மன்னிக்க வேண்டும்). ஆனா, அவங்களை தெய்வங்களா நெனைச்சு பாலாபிஷேகம் முதல் பன்னீர் அபிஷேகம் வரை பண்ணி நம்ம நாகரிகத்தையே சிதைச்சு சின்னா பின்னமாக்கிடுறாங்க.




இன்னொன்னு அரசியல்... ஜெயலலிதாவை மேரி மாதா ஆக்கினாங்க. இப்ப ஸ்டாலினை முருகனாக்கி இருக்காங்க. அதுவும் மலேசியாவில் உள்ள முருகன் திருத்தலமான பத்துமலையில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டிருக்கும் 140 அடி முருகன் சிலை படத்தில் ஸ்டாலின் தலையை ஒட்ட வைச்சிருகாங்க. அந்த சுவரொட்டியின் கீழே 'வணங்கும் பக்தர்கள்' என்ற வாசகம் வேறு.

மூன்று இனங்கள் வாழுகின்ற ஒரு நாட்டில் மிகவும் பாடுபட்டு எத்தனையோ எதிர்ப்புகளுக்கு இடையே எழுப்பப்பட்ட ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆன்மீகச் சின்னத்தை அவமானப்படுத்துவது என்ன நியாயமுங்க.

பகுத்தறிவு பகவலன் தந்தை பெரியாரின் தம்பிகளாக இருந்து ஆரிய ஆதிக்கத்தின் வேரறுத்த போர்த்தளபதிகளான பேரறிஞர் அண்ணா, உலகத் தமிழினத்தலைவர் கலைஞர் கருணாநிதி போன்றவர்களின் கொள்கையைக் குழி தோண்டி புதைக்கின்ற காரியம் தானுங்களே இது. இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கப்பட்ட திராவிட இயக்கத்தின் வரலாறு தெரியாத சிலர் செய்கின்ற காரியங்கள் பெரிய தலைவர்களின் போராட்டத்தை புரையோடிப் போகச் செய்யாதுங்களா....

இப்படி வைங்கன்னு ஸ்டாலின் கேட்டாரா... இது அவரை சங்கடத்தில் ஆழ்த்துகின்ற சங்கதிதானுங்களே.... ஸ்டாலின் மீது அன்பு வைத்திருக்கிற அவங்க. ஸ்டாலின் பேரால நல்ல காரியம் பண்ணுங்க. ஏழைங்களுக்கு உதவுங்க. படிக்க பணம் இல்லாத பிள்ளைகளுக்கு பணம் கொடுங்க.இது மாதிரி செஞ்சீங்கன்னா துணை முதல்வரே உங்க வீடு தேடி வந்துடுவாருங்க.




அதை விட்டுப்புட்டு இப்படிப்பட்ட முட்டாள்தனமான காரியங்களை செய்கின்ற நம்ம சமுதாயத்தை எப்படிங்க முன்னேறிய சமுதாயமுன்னு வாய்கூசமா சொல்றாங்க. என்னங்க....என்னுடைய வேதனை சரிதானுங்களே...

Tuesday, September 29, 2009

மருத்துவரை அடிக்கலாமா?

கடலூரில் ஒரு சம்பவம். அரசாங்க மருத்துவமனைக்கு வைத்தியம் பாக்க வந்தவங்க அங்கிருந்த மருத்துவர் கன்னத்திலே ஒரு அப்பு அப்பிட்டு போயிட்டாங்க. இதனால அந்த மருத்துவமனை மருத்துவர்கள் எல்லாம் வேலை நிறுத்தம்.


ஒரு மருத்துவரை அடிப்பது மாபெரும் தப்புங்க. மருத்துவர் ஆண்டவனுக்கு அடுத்த இடத்தில இருப்பவருங்க. ஆனா, அவரையே அடிக்கிற நிலைமைன்னு அந்த மருத்துவர் என்ன பண்ணியிருப்பாரு. போக்கிரி படத்தை மனசுல போட்டு பாருங்க. புரியும்.

படிப்பறிவு இல்லாத அப்பாவி ஜனங்களுக்கு பக்குவம் ரொம்ப இருக்காதுங்க. தெய்வமா நினைக்கிற ஒருத்தர் எமனா மாறினாருன்னா ஆத்திரத்தில அடிதடி வரைக்கும் இறங்கிடுறாங்க.

வேலை நிறுத்தம் செய்யுற மருத்துவர்களே கொஞ்சம் எண்ணிப் பாருங்க. உங்களுக்கும் ஒரு தனிப்பட்ட மனிதருக்கும் பிரச்சினை. இப்ப வேலை நிறுத்தத்தாலே எத்தனை பேரோட வயித்தெறிச்சலையும் கோபத்தையும் கொட்டிக்கப் போறீங்க. நீங்க சம்பளம் வாங்கிறதே பொது மக்களோட வரிப்பணத்திலாங்கிறத மறந்திடாதீங்க.

மருத்துவர்கள் எல்லாம் மனச்சாட்சியோட நடந்துக்கிட்டாங்கன்னா...ஏமை பாழைங்க உங்களை இதயத்தில கோவில் கட்டி கும்பிடுவாங்க. அப்படி மனச்சாட்சியோட நடக்கிறீங்களான்னு ஒரு தரம் நெஞ்சில கையை வச்சு பாருங்க.

இதுமாதிரிதான் ஏர் இந்தியா விமான ஓட்டுனருங்க வேலை நிறுத்தமும். இதில் பாதிக்கப்படுறது யாரு. வெளி நாட்டுக்கு சுத்திப் பாக்க போறங்களப் பத்தி பிரச்சினை இல்லைங்க. இன்னைக்கு இல்லாட்டி நாளைக்கு போயிருவாங்க.

வாயைக் கட்டி வயித்தக் கட்டி வட்டிக்கு வாங்கி கொடுத்த பணத்தில வெளிநாட்டுக்கு வேலைக்கு போறவங்களோட விசா முடிஞ்சு போச்சுன்னா என்ன ஆகுமுங்க. உங்க போராட்டத்தில நியாயம் இருக்கலாம். அது பொது மக்களப் பாதிக்காத வண்ணம் இருந்தா நல்லா இருக்குமுங்க.

யாரு போராட்டம் நடத்தினாலும் பொது மக்களை மையமா வச்சு நடத்துறாங்க. ஆனா, பொது மக்கள் யாரை மையமா வச்சு போராட்டம் நடத்துவாங்க. அது தெரியாததாலதான் இன்னமும் இளித்தவாயர்களா இருக்காங்க. நான் எழுதி இருக்கிறதுல்ல தப்பு இருந்தா என்னை மன்னிச்சுடுங்க.

Monday, September 28, 2009

பணத்தை உறிஞ்சுங்க...பண்பாட்டை உறிஞ்சாதீங்க

என்னோட நண்பன் ஒருத்தன் நடிகர் கமலஹாசனைப் பத்தி காரசாரமா ஒரு கருத்தைச் சொன்னான். அது தேவையில்லாத விஷயமா இருந்தாலும் அதில் இருந்த உண்மை கொஞ்சம் மனசுக்கு நெருடலா இருந்துச்சு. அதனால அவன் சொன்னதை அப்படியே உங்க பார்வைக்கு வைக்கிறேங்க.


கமலஹாசன் சமீபத்தில ஒரு அருமையான கருத்தைச் சொல்லி இருக்காருங்க. அது மட்டும் எனக்கு ரொம்பப் பிடிச்சு இருக்குங்க. வாழ்க்கையில நடக்கிறதை இயல்பா நடிக்கணும். ஆனா, இந்த தமிழ ஜனங்களுக்கு அது புரிய மாட்டங்குதுன்னு ரொம்ப வருத்தப்பட்டிருக்கிறார்.





குளியல் அறையிலே எப்படிக் குளிக்கிறமோ அப்படியே காண்பிக்க முடியுங்களா. முதலிரவுக் காட்சி கூடத்தான் எல்லா குடும்பங்கள்லயும் நடக்குது. அதை இயல்பா சொல்றேன்னு அப்படியே எடுத்துக் காட்ட முடியுமா...சினிமா நடிகனை கடவுளா பாக்கிற பாமர மக்கள் வசிக்கிற பூமிங்க தமிழ் நாடு. நீங்க தாவித் தாவி அடிக்கிறதையும் கூவிக் கூவி உதைக்கிறதையும் அப்படியே உண்மைன்னு நம்பி வச்ச கண்ணு வாங்கமா பாக்கிற அப்பாவி ஜனங்கள்கிட்ட மிச்சமிருக்கிறது நம்மோட மண்ணின் பண்பாடு மட்டும்தான்.

சினிமா நடிப்பை நம்பி 80 சதவித மக்கள் சீரழிஞ்சுக்கிட்டு இருக்கிறாங்க.
நீங்க என்ன பண்ணினாலும் எத்தனை மனைவி கட்டினாலும் எத்தனை பிள்ளைங்க பெத்தாலும் அது பரம்பரையா பாமர மக்களின் பணத்தை உறிஞ்சத்தான் போகிறது. பணத்தை மட்டும் உறிஞ்சுங்க. பண்பாட்டை உறிஞ்சிறாதீங்க. நீங்க எப்படி வேண்டுமானாலும் இருந்து தொலைங்க. உங்களை மாதிரி மக்களை மாத்திராதீங்க. இது தாங்க அவன் சொன்னது. இதுல உங்களுக்கு ஏதேச்சும் மறுப்பு இருந்தா என் நண்பனுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கிறேங்க. ஏன்னா நானும் தமிழன் தானுங்களே.

தலைத் தீபாவளி

"ஏண்டி இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இப்படி இருப்பே...ஒன்னு சொந்தப்புத்தி வேணும். இல்லாட்டி சொல் புத்தி வேணும். இரண்டுமே


இல்லாட்டி என்ன பண்ண முடியும்"

கலாவின் வார்த்தைகள் இப்படி கடுமையாக வந்து விழுந்தன. ஆனால் இதைக் காதில் வாங்காதது போல் இருந்தால் சுமதி.

" என்னடி நான் பாட்டுக்கு பேசிக்கிட்டு இருக்கேன். நவராத்திரிக்கு பிடிச்சுவச்ச கொழுக் கட்டை மாதிரி உட்கார்ந்துக் கிட்டு இருக்கே"

சுமதியின் முடியைப் பிடித்து இழுத்து அவளுடைய முகத்தை தன்பக்கம் திருப்பினாள் கலா.

"இஷ்...விடுங்கக்கா வலிக்குது. நான் என்ன செய்யட்டும் அக்கா... வீட்டில சொல்றதத்தானே கேட்க முடியும். என்னோட இஷ்டத்துக்கு எதுவும்

செய்யமுடியுமா"

சுமதி சாதாரணமாக பேசினாலும் அந்தப் பேச்சில் ஒரு இனந்தெரியாத சோகம் இழையோடிக் கொண்டிருப்பதை கலாவால் உணர முடிந்தது.

கலாவும் சுமதியும் கோலாலம்பூரில் ஒரு வங்கியில் பணி புரிகிறார்கள். கலாவுக்கு திருமணமாகி ஒரு குழந்தை இருக்கிறது. சுமதிக்கு இன்னும்
திருமணம் ஆகவில்லை.

இந்தா... அந்த... என்று வயது இருபத்தி எட்டைத் தொட்டு விட்டது. திருமணம் ஆகவில்லை என்பதற்காக சுமதி சுமாராக இருப்பாள் என்று தப்புக் கணக்கு போட்டு விடாதீர்கள். பார்ப்பவர்களைச் சுண்டி இழுக்கக்கூடிய கொள்ளை அழகு.

அதே வங்கியில் வேலை பார்க்கும் பார்த்திபனுக்கு சுமதி மீது ஒரு கண். எப்படியாவது அவளுடைய மனதைத் திருடி அவர்கள் வீட்டுக்கு மருமகனாகி விட வேண்டும் என ஆசைப்பட்டான்.

எவ்வளவோ முயன்றும் சுமதியிடம் அவனால் நெருங்க முடியவில்லை. எதிரே பார்த்துக் கொண்டால் ஒரு புன்னகைதான். அதற்குமேல்

சுமதியிடமிருந்து எதையும் பெற முடியவில்லை.

அரசல் புரசலாக பார்த்திபனின் ஆசையைப் புரிந்து கொண்ட கலா மெதுவாக சுமதியிடம் பேச்சை எடுத்தாள். ஆனால் இதுமாதிரி பேச்சு வந்தால் சுமதி பட்டென்று வெட்டி விடுவாள்.

"பாரு சுமதி...பார்த்திபன் ரொம்ப நல்ல பையன். எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. மத்தவனுங்க மாதிரி பிக்கப்பு...டிராப்பு ... எஸ்கேப்புன்னு போற பார்ட்டி கிடையாது. நீ மட்டும் சரின்னு சொன்னா உன்னைய கண்ணுக்கு கண்ணா வச்சு பாத்துக்குவான்"

பார்த்திபன் பேச்சை எடுத்தால் சுமதியின் கண்ணுக்குள் ஒரு பல்பு எரியும். அதை சாமர்த்தியமாக மறைத்துக் கொள்வாள்.

"அக்கா... நான் என்ன ஆசையில்லாத ஜடமுன்னா நினைச்சீங்க. எனக்கும் மத்த பொண்ணுங்க மாதிரி கல்யாணம் பண்ணி வாழக் கூடாதுன்னா
இருக்கேன்.எங்க அப்பாவும் அம்மாவும் ஜாதி பாக்கிறவங்க. எங்க ஜாதிப் பையனுக்குத்தான் என்னைக் கட்டிக் கொடுக்கணுமாம். எத்தனையோ நல்ல
மாப்பிள்ளை வந்தும் இந்த பாழாய்ப்போன ஜாதியாலே தட்டிப் போய்க்கிட்டே இருக்கு. என்னையப் பெத்தவங்களோ ஜாதியில் பிடிவாதமா
இருக்காங்க. அவங்கள மீறி போறதுக்கும் என்னோட மனசு கேட்க மாட்டேங்கிறது. நான் என்ன செய்யட்டும். சொல்லுங்க அக்கா..."

சுமதியின் கண்களில் இருந்து முத்து முத்தாக கண்ணீர்த்துளி கன்னத்தில் வழிந்தது. கலாவால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. சுமதியின் பெற்
றோர்கள் மிகவும் நல்லவர்கள். சுமதி மீது பாசத்தைக் கொட்டி
வளர்த்தார்கள் இந்த ஒரு விஷயத்தில் மட்டும்தான் அவர்கள் ஏறுக்கு மாறாக இருக்கிறார்கள்.

காலம் உருண்டது. சுமதிக்கும் வயது ஏறியது. காதோரத்தில் ஒன்றிரண்டு நரைமுடிகள் எட்டிப் பார்த்தன. ஆனால் அவளின் அழகும் வனப்பும் மட்டும்
அப்படியே இருந்தன. வேளை மாற்றலாகி ஜொகூருக்கு போய்விட்டாள்.

தீபாவளி வந்து விட்டது. சுமதி தீபாவளிக்கு இரண்டு நாட்கள் முன்பாகவே கோலாலம்பூருக்கு கிளம்பினாள். பேருந்து புடுராயா நிலையத்தில் வந்து
நின்றது.பெட்டியை எடுத்துக் கொண்டு இறங்கியவள் அப்படியே திகைத்து நின்றாள். எதிரே பார்த்திபன்.

"எப்படி இருக்கிறாய் சுமதி"

"அப்படியேதான் இருக்கிறேன்"

அந்த ஒரு வார்த்தையில் ஆயிரம் அர்த்தங்கள்.

"ஏன்..."பார்த்திபனின் இதயத்தில் இருந்து எழுந்த கேள்வி இது.

"ஜாதிதான் முக்கியம் என்று வந்த மாப்பிள்ளை களை எல்லாம் அப்போது வேண்டாம் என்றார்கள் என் அப்பாவும் அம்மாவும். ஆனால் இப்போது
எந்த மாப்பிள்ளையாக இருந்தாலும் பரவாயில்லை என்கிறார்கள். மாப்பிள்ளைதான் வந்த பாடில்லை"

சுமதியின் வார்த்தை விம்மலாக வெளி வந்தது.

"உனக்காக நான் இருக்கும்போது ஊரெல்லாம் ஏன் மாப்பிள்ளை தேடுகிறார்கள் உன் பெற்றோர்கள். கொடு பெட்டியை..." என்றான் பார்த்திபன்.

பெட்டியோடு மனசையும் சேர்த்தே கொடுத்தாள் சுமதி.

இந்தத் தீபாவளி அவர்களுக்கு இனிமையான தீபாவளி. அடுத்த தீபாவளி தலைத்தீபாவளி.

(மலேசியாவில் இருந்து வந்த மண்வாசனைக் கதை இது. அங்கும் ஜாதி என்ற ஜோதி அணையாமல் இருப்பதை இந்தக் கதையின் கரு அருமையாக வெளிப்படுத்தி இருக்கிறது. படிப்பவர்களுக்கு பிடித்திருந்தால் விமர்சனங்களை பதிவு செய்யுங்கள)

Sunday, September 27, 2009

தூளாகும் துயரங்கள்

மேகநதி மீதினிலே மென்காற்று நீந்திவர
          மின்னலொடு மழையாய் வீழும்
மேலெழும்பும் வெய்யோனால் மேருமலை பனியுருகி
          மீன்துள்ளும் ஆறாய் நீளும்
மோகமொடு நந்தவனம் மொய்க்கின்ற தேனீக்கள்
         முயற்சியொரு தேன்கூ டாகும்
முகமலர்ந்த சிப்பிக்குள் முந்திவிழும் நீர்த்துளிதான்
         முறுவலிக்கும் முத்தாய் மாறும்
சோகமென்ன செய்துவிடும் தூக்கியெறி துரத்திமிதி
          துன்பங்கள் விலகி ஓடும்
துவளாத மனத்தோடு துடிக்கின்ற தோள்சேர்ந்தால்
         துயரங்கள் தூள்தூ ளாகும்
பாகமொரு உடல்கொண்ட பார்வதியின் அண்ணனவன்
        படையாக நிற்கும் திருவே
பணிவோர்க்கும் எளியோர்க்கும் பரிவோடு அருள்கின்ற
        பதினெட்டாம் படிக்க ருப்பே

Friday, September 25, 2009

உலகத் தமிழ் மாநாடு உல்டாவா....?

கோயமுத்தூரில உலகத் தமிழ் மாநாடு நடக்குமுன்னு கலைஞர் கருணாநிதி அறிவிச்சு இருக்காரு. உடனே நாலா பக்கம் இருந்து கண்டனக் கணை பறக்குதுங்க.


இலங்கைத் தமிழர்களின் இன்னல்களைத் துடைக்க வக்கு இல்லாத கருணாநிக்கு உலகத்தமிழ் மாநாடு ஒரு கேடா...ன்னு சிலர் கேட்கிறாங்க.இலங்கை பிரச்சினையிலே கருணாநிதியாலே ஒரு நடவடிக்கையும் எடுக்க முடியலைங்கிறது உண்மைதாங்க


இப்பக்கூட இந்த உலகத் தமிழ் மாநாடு உலகத் தமிழ் மக்களின் அனுதாபத்தை பெறத்தான்னு சின்னப் பிள்ளைக்குக்கூட தெரியுமுங்க. ஆனா...கலைஞராலே ஏன் இலங்கைப் பிரச்சினையில் எதுவும் செய்ய முடியாமப் போச்சு.

கொஞ்சம் ஆழாமா பாருங்க. உண்மை தெரியும். இலங்கை பிரச்சினையில் ஏடாகூடமா கலைஞர் நடந்தா காங்கிரஸ் கட்சி என்ன செய்யும். கூட்டணிக்கட்சின்னு கூட பாக்காம திமுக ஆட்சிக்கு தில்லானா பாடிரும்.

இதைத்தானே எதிர்க்கட்சிகள் எதிர்பார்த்தன. உண்மையிலேயே ஜெயலலிதாவும் ராமதாசும் வைகோவும் இலங்கை தமிழ் மக்களைக் காப்பாத்தனுமுன்னா என்ன செஞ்சிருக்க வேண்டும்.




கலைஞர் இலங்கைத் தமிழர்களுக்கு குரல் கொடுக்கட்டும். நாங்க எல்லாரும் அவரு பின்னாடி நிக்கிறோம். திமுக ஆட்சியை காங்கிரஸ் கலைக்கட்டும். நாங்க யாரும் தேர்தலில் போட்டி போட மாட்டோம். ஒரு வேளை ஆதரவை மட்டும் வாபஸ் வாங்கினாங்கன்னா...தவணை முடிகிறவரை நாங்க ஆதரவு கொடுக்கிறோம்ன்னு ஒட்டு மொத்தமா சொல்லி இருக்கணுமில்லையா....அப்படிச் சொன்னாங்களா.....இல்லையே...

அண்ணன் எப்ப சாவான் திண்ணை எப்ப காலியாகுமுன்னுதானே எல்லா கட்சிக்காரங்களும் நினைச்சாங்க. இப்படி இருக்கும்போது அரசியலில பழம் தின்னு கொட்டை போட்ட கலைஞர் எப்படிங்க சிங்கத்தின் வாய்க்குள்ள தலையைக் கொடுப்பாரு.

இன்னொரு விஷயத்தையும் நீங்க கவனமா சிந்திச்சு பார்க்கணும். விடுதலைப்புலிகளை ஒழிக்கணுமுன்னு கங்கணம் கட்டிக்கிட்டு இருந்தவங்க ஜெயலலிதா. விடுதலைப்புலிகளின் தோல்விக்கு ஜெயலலிதாவும் ஒரு காரணமுன்னா அதுல் தப்பு இல்லைங்க.

அப்படிப்பட்ட ஜெயலலிதாகூட ராமதாசும் வைகோவும் இருந்துக்கிட்டு குய்யோ முறையோன்னு கத்தினா ஜனங்க எப்படி நம்புவாங்க. இன்னொரு விஷயமுங்க... இலங்கை அதிபர் ராஜபக்சே ஐநா சபைக்கே அல்வா கொடுத்துக்கிட்டு இருக்கிறாரு. இதுல கலைஞருக்கு காராசேவு கொடுக்க எவ்வளவு நேரமுங்க ஆகும். உலகத் தமிழ் மாநாட்டை இவங்க எதுத்தா அதனால நட்டம் கலைஞருக்கு இல்லைங்க. இவங்களுக்குத்தான். நான் கலைஞருக்கு வக்காலாத்து வாங்கலைங்க. நான் குறிப்பிட்டு இருக்கிறதை கூட்டிக் கழிச்சுப் பாருங்க. கணக்கு சரியா வரும். தப்பா இருந்தா சுட்டிக் காட்டுங்க. ஏத்துக்கிறேன்.



Thursday, September 24, 2009

சிந்திக்க வேண்டும் சினேகா

சினேகாவிடம் சில்மிஷம். வாலிபருக்கு அடி உதை. இது இன்னிக்கு வந்த பரபரப்பான செய்திங்க. இந்த அம்மா பேச்சைக் கேட்டு காவலாளிகள் அந்த வாலிபரை அடிச்சு உதைச்சு இருக்காங்க. அவரோட் மனைவி வேற பக்கத்தில இருந்திருக்காங்க.


எந்த மடையனாவது மனைவி பக்கத்தில இருக்கும் போது இன்னொருத்திக்கிட்ட சில்மிஷம் பண்ணுவானா. இது அந்த முட்டா ஜனங்களுக்கு தெரிய வேண்டாம். பத்திரிகையில வேற கொட்டை கொட்டையா செய்தி.

என்னமோ இதுவரை சினேகாவின் உடம்பில ஆம்பிளைங்கள் கையே படாத மாதிரி. பணத்தை வாங்கிக்கிட்டு சினிமாவில பப்பளப்பான நடிக்கிறாங்க. கதாநாயகன் சும்மா...புரோட்டாவுக்கு மாவு பிசையற மாதிரி புரட்டி புரட்டிப் பிசையிறான். அப்படிப்பட்ட கைபடாத உடம்புல கூட்டத்தில கை பட்டுருச்சாம்...அந்த அம்மாவோட கற்பே சந்திராயன் ராக்கெட்டுல ஏறி வான மண்டலத்துக்கு போயிருச்சாம்.




தெரிஞ்சோ தெரியாமலோ கைபட்டுருச்சுன்னா அந்த அம்மா என்ன செஞ்சிருக்கணும். கண்டும் காணாதது மாதிரி போயிருக்கணும். அது பெருந்தன்மை. பணம் வாங்கிட்டு பல்லைக் காட்டும் இவங்க. பொது இடத்துக்கு வராம இருந்திருக்கணும். ஏதோ அவங்க வாழ்க்கையில நடக்காதது நடந்திட்ட மாதிரி அதுக்கு வக்காலத்து வாங்க ஆயிரம் பேரு. இவங்களுக்கெல்லாம் வெட்கமே கிடையாதா...

அப்பாவி குடும்பப் பொண்ணுக்கு இப்படி ஒரு நிலை வந்திருந்தா இது மாதிரி கொதிச்சிருப்பாங்களா...கூட்டத்தில இதெல்லாம் சகஜம்மான்னு நீயெல்லாம் எதுக்கு கடைக்கு வாராய்ன்னு எகத்தாளமா பேசி இருப்பாங்க.

இப்ப அந்த ஆணோட நிலைய நெனைச்சுப் பாருங்க. அக்கம் பக்கத்தில இருக்கிறவங்க எல்லாம் இனிமே அவரை எப்படிப் பார்ப்பாங்க. நல்ல வேளை அவரோட மனைவி பக்கத்தில இருந்ததால சரியாப் போச்சு. இல்லாட்டி என்ன ஆகியிருக்கும்.

பொது மக்கள் பணத்தில புஸ்வானம் விடுற நடிகர் நடிகைகளும் அவங்கள பாக்க நாக்கத் தொங்கப்போட்டுக்கிட்டு திரியற ஜென்மங்களும் இனியாவது சிந்திச்சுப் பாத்து நடந்தா நல்லதுங்க.

பிரவுதேவா - நயன்தாரா - ஆறு மாதம்?

பிரபுதேவா- நயன்தாரா பத்தி பத்திரிகைகளில பரபரப்பு செய்திங்க. கல்யாணம் பண்ணிக்க போறாங்களாம். பிரபுதேவாவின் மனைவி
ரம்லத், நயன்தாராவுக்கு தர்ம அடி கொடுக்க தயாரா இருக்காங்களாம். இது எனக்கு வேதனையா இருந்துச்சுங்க. ஏன்னா எனக்கு பிரபுதேவா
நடனத்துமேல ஒரு இதுங்க. ஆனா, நயன்தாரா செய்யிறத ஏத்துக்க முடியலைங்க.

"இப்படி ஒரு பெண்ணோட வாழ்க்கையை கெடுக்குதே இந்தப் பொண்ணு....கல்யாணம் ஆகாம எத்தனையோ பசங்க திரியுறாங்களே...அவங்களில
ஒருத்தனை கவ்விக்கிட்டு போக வேண்டியதுதானே...சூடு சுரணை இல்லாத ஜென்மங்கள்"ன்னு சங்கடத்தோட சொன்னேங்க என் நண்பன்கிட்டே.


இது பத்தி அவனோட கருத்து வேற மாதிரியா இருக்குங்க. "பிரபுதேவாவின் மகன் ஒருத்தன் புற்று நோயால இறந்துட்டான். அந்த துக்கத்தை
நயன்தாரா மடியில படுத்து மறக்க நினைக்கிறாரு பிரபுதேவா.
நம்ம நயன்தாராவும் தாயன்போடு தடவி தடவிக் கொடுத்து பிரபுதேவாக்கு மருந்தா மாறி இருக்காரு. இந்த சமுதாய சேவையைப் போய் தப்பா
சொல்லலாமா"ன்னு அவன் ஒரு போடு போட்டான்.





இந்தப் பேச்சில இன்னொரு நண்பன் இடையிலே பூந்து என்னோட கேள்விக்குப் பதில் சொன்னாங்க. " நாம வேலு மிலிட்டரி ஹோட்டல்,
அஞ்சப்பன், அரசப்பன், சரவணபவன்னு எதுக்குப் போறோம். ருசியா சாப்பிடத்தானே. அது மாதிரிதான் நயன்தாரா செய்யுறாங்க. இது ஊரு
உலகத்தில நடக்கிறதுதானே...
இதுல பிரபுதேவா மனைவி வருத்தப்பட ஒன்னும் இல்லைங்க. மோகம் முப்பது நாள்...ஆசை அறுபது நாள்தானே. ஆறு மாசத்திலோ....ஒரு
வருசத்திலோ....காதல் கசக்கும். பழுத்த மரம் பாத்து பச்சைக்கிளி பறந்திரும். போன மச்சான் திரும்பி வரப்போகிறார். இதுக்கு போயி
அலட்டிக்கலாமா"ங்கிறான்.

இன்னொரு விஷயத்தையும் சொன்னான். அதைத்தான் தாங்க முடியவில்லை. " நயன்தாராவுக்கு சூடு சுரணை இல்லையான்னுதானே
கேட்டே...அவங்களுக்கு இருந்தா என்ன... இல்லாட்டி என்ன... நம்ம காசில மஞ்சக் குளிச்சு இப்படி மானங்கெட்ட வேலை செய்யிற இவங்களைப்
பாக்க நாயா அலையிறமே நமக்குத்தான் சூடும் இல்லை சுரணையும் இல்லை"ன்னு என் கன்னத்தில சப்புன்னு ஒரு அப்பு அப்பினான்.
அந்த வலி கொஞ்ச நேரத்தில் மாறிப் போச்சு. அவன் சொன்ன விஷயம் எம் மனசில் ஏற்படுத்தின வலி இன்னும் ஆறலைங்க.

இதை படிச்ச பின்னாடி உங்களுக்கும் அந்த வலி இருந்தா சொல்லுங்க.....

Wednesday, September 23, 2009

தலையாக செயல்பட்டால்....

எனக்கு கவிதையும் கொஞ்சம் வரும். அதுவும் சமுதாயம் சம்பந்தப்பட்டதா இருக்கணும்கிறது என் ஆசை. காதல் கத்திரிக் காய்ன்னு சமுதாயம் சல்லாபத்தில மூழ்கி இருக்கும் போது இதை யாரு படிக்கப் போறாங்கங்கிற சிந்தனை இருக்கத்தான் செய்யுது. என்ன பண்ணுறது பேனாவை எடுத்தா இது மாதிரி கவிதைதானே வந்து தொலைக்குது. படிப்பவங்க படிச்சதோட மட்டும் நிறுத்திக்காமே விமர்சனங்கிற பேர்ல என்னை ஒரு பிடிபிடிங்க. சந்தோஷமா இருக்கும். என்ன சரிங்களா.....


அலையாழி கோபத்தில் அதிரடிதான் நடத்தினால்
             அவனியே அழிந்து போகும்
அனல்கூடி நெருப்பாகி அதிரடிதான் நடத்தினால்
             அகிலமே அவிந்து போகும்
நிலையாக நம்மினந்தான் நிமிர்ந்தாலே நெருப்போடு
             நெடுங்கடலும் பயந்து நிற்கும்
நீருக்கு தவளையாய் நிலத்துக்கு எலியாகும்
             நிலைமைதான் மாற வேண்டும்
தலையாக எல்லாரும் தனியாக செயல்பட்டால்
            தளராதோ நமது ஆற்றல்
தகிக்கின்ற மக்களை தடம்மாற வைக்குமே
            தமிழர்கள் இணைவ தெப்போ
தெளிவான சிந்தையுடன் திடமாக நின்றாலே
           தேடிவரும் வெற்றி தானே
தீராத தீவினைகள் தீர்க்கின்ற தெய்வமே
            தீப்பாஞ் சம்மாள் தாயே!

நம்ம ஜனங்க ரொம்ப ஏமாளிங்க

சமீபத்தில ஜூனியர் விகடன்ல ஒரு செய்தி படிச்சேங்க. சென்னையில மோட்டார் உதிரிப் பாகங்கள் விற்கும் ரஞ்சித் குமார் என்பவருக்கு அமெரிக்காவில் வசிக்கும் மைக்கேல் ராபர்ட் என்பவர் ஒரு மின்னஞ்சல் அனுப்புறாருங்க.


நான் இந்தியாவுல தொழில் தொடங்கப் போறேன். அதுக்கும் உன்னுடைய உதவி தேவை. அதற்கான சேவைக் கட்டணமாக 10 கோடி ரூபாய் தருகிறேன். முதல்ல அதுக்கு பிணையாக 25 லட்சம் ரூபாயை வங்கியிலே செலுத்து.

முன்னபின்ன தெரியாத ஒருத்தன் உனக்கு 10 கோடி ரூபாய் தர்றேன்னதும் நாக்கை தொங்கப் போட்டுக்கிட்டு போனியே. இப்ப என்னாச்சு...அவன் மூனு நாமத்தை பட்டையா சாத்திட்டு போயிட்டான்

ஏமாந்த பின்னாடி போலீஸ் நடவடிக்கை எடுக்கலைன்னு காட்டுக் கத்தா கத்துனா என்ன அர்த்தம். இப்ப போலீசுக்கிட்ட போறியே. இவ்வளவு பெரிய தொகை கிடைக்கிறதுன்னா முன்கூட்டியே போலீசுக்கிட்ட போயி உண்மையா பொய்யான்னு தெரிஞ்சிருக்கலாமில்லை.

இன்னொரு விஷயத்தையும் நீங்க பார்க்கணும். சுளையா 10 கோடி ரூபாய தூக்கி கொடுக்க அவன் என்ன நம்மள மாதிரி கேணையனா... கிறுக்கனா...

அப்புறம் மேலும் ஒரு வருத்தமான செய்திங்க. இப்ப பாருங்க சென்னையில் ஒரு லட்சம் போட்டா அதுக்கு 48 சதவீதம் வட்டி தருவதாக சிட்டி லிமோசின் என்ற நிறுவனம் கிளுகிளுப்பாக அறிக்கை விட்டது.

அவ்வளவுதான் என்ன ஏதுன்னு விசாரிக்காமல் இருக்கிற பணத்தை அள்ளிக் கொண்டு போய் கொட்டி ஒரே நாளில் அந்தக் நிறுவனத்தின் முதலாளியை கோடீஸ்வரனாக்கி விட்டுத்தான் மறுவேலை பார்த்தாங்க நம்ம மக்கள்.




சுமார் 150 கோடி ரூபாயை ஏப்பம்விட்டுவிட்டு அந்த மோசடிக்காரன் சம்மர் ஷாட் அடித்து தலைமறைவாகிவிட்டான். ஏமாந்த மக்கள் சென்னை மாநகர ஆணையர் அலுவலகத்திற்கு நடைபயணம் செய்து கொண்டிருக்கின்றனர்.

இந்தப் பேராசைக்கு என்ன காரணம். தமிழகத்தில் குறிப்பிட்ட ஒரு சாரார் செல்வத்தில் மிதந்து ஆட்டம் பாட்டமுன்னு அதகளம் பண்ணிக்கிட்டு இருக்காங்க. இது சாதாரண மக்களை நிம்மதியா சாப்பிடவிடாம செய்யுற காரியமா போயிட்டது.

அதனால எப்படியாவது பணக்காரராகி விடணும்கிற ஆசையில இந்த மக்கள்... ஆப்பு கட்டையிலே அவங்களாகவே போயி உட்காந்துக்கிடுறாங்க. இது மாதிரி நல்லவங்க இருக்கிறவரை எத்தனை மோசடிக் கம்பெனி வேணுமின்னாலும் நடத்தலாமுன்னு வளைச்சு வளைச்சு சென்னையையே வட்டம் போடுறாங்க.

நம்ம சனங்க ரொம்ப நல்லவங்க. புதுசா ஒரு கம்பெனி வந்தா போதும்... பணத்தை போட போட்டி போடுவாங்க. பல கம்பெனிங்க ஏமாத்திட்டாங்களேன்னு அவங்ககிட்ட சொல்லிப் பாருங்க....அவங்க பதில் இப்படித்தான் இருக்கும்.

" நாங்க பணம் போட்டிருக்கிற கம்பெனி அது மாதிரி இல்லைங்க. எங்க முதலாளி ரொம்ப நல்லவருங்க"

அப்புறம் அவன் அல்வா கொடுத்த பின்னர்தான் 'அய்யோ... அப்பா...ன்னு' வாயிலையும் வயித்திலையும் அடிச்சுக்கிட்டு புரளுவாங்க. இவங்க வேதனை எனக்கும் வேதனைதான். மனசு வலிக்குதுங்க. ஆனா இவங்க பணத்தை அவன் வந்து திருடலை. இவங்களா போயி திருட்டுக் கொடுத்தாங்க. அதனால பாதிதான் பரிதாபப்பட முடிகிறது. பணம் ரொம்ப முக்கியம்தாங்க. அதுக்காக பறக்கிறத நம்பி இருக்கிறத இழக்கலாமாங்க...?

பணக்காரங்க ஏமாந்தா அது அவங்களுக்கு காணாம போன கைத்துண்டு மாதிரிங்க. ஏழைங்க ஏமாந்தா அது உடம்புல இருக்கிற ஒட்டுமொத்த துணி மாதிரிங்க. மானம் போயிடும். மரியாதை போயிடும். நிம்மதி போயிடும்.

இதுமாதிரி சுலபமா சம்பாதிக்கிற ஆசை இருக்கிறவங்கள நீங்க சந்திக்க நேர்ந்தா தயவு செஞ்சு அவங்க மனச மாத்தப்பாருங்க.