Wednesday, June 15, 2011

பாவத்தை செய்த கனி... பாசத்தில் துடிக்கும் கலை...

செய்த பாவம் தீருதடா சிவகுரு நாதா.. இந்தப் பாடல் இப்ப கலைஞர் கருணாநிதிக்கு பொருத்தமான இருக்கும்கிறதில சந்தேகம் ஏதாச்சும் உண்டாங்க..

கோடி கோடியா.. பணத்தை திருட ஓடி ஓடி உழைச்சிங்களே.. அதனோட பலன் என்ன... திகார் ஜெயிலுக்குள்ள கனிமொழி களி தின்னுக்கிட்டு இருக்க வேண்டிய கட்டாயம் வந்துடுச்சிங்களே..

பெத்த மக ஜெயிலுக்குள்ள... பெத்த வயிறு நெருப்புக்குள்ள... கலங்கிப் போயிருக்கும் கலைஞருக்கு ஆறுதல் சொல்ல ஆள் இல்லாம தவிக்கிறாருங்க.

ஆனா ஒன்னு மட்டும் புரியலைங்க. ராசாவையும் கனிமொழியையும் இணைத்து பத்திரிகையில வாங்கு வாங்குன்னு வாங்குறாங்க. பொதுமக்கள் அந்த பொல்லாத உறவைப் பத்தி பொருமுறாங்க.

ஆனா.. பெத்தா ஆத்தாளோ... பெத்ததுக்கு காரணமா இருந்த அப்பனோ கவலைப்படாததுக்கு காரணம் என்னங்க. எல்லாம் பணம் தாங்க. அதுக்கா கொள்கைக்கு கொள்ளி வைச்சதாலே இப்ப சந்தி சிரிச்சி கலைஞர் சாக்கடையில குளிக்க வேண்டிய கட்டாயம் வந்திடுச்சிங்க.

பெத்த பாசம் பிள்ளை பண்ணுன தப்பை மறைக்குதுன்னு சொல்றாங்க. தப்பை பண்ணச் சொன்னதே தலைவர் தான்னு திமுக தொண்டர்களே தெம்மாங்கு பாடுறதை கேட்க முடியுதுங்களே..

வெற்றி தோல்வி அரசியலில சகஜமுன்னு ஐயாவுக்கு ஆறுதல் சொல்றாங்களாம். ஆனா. இந்த தோல்வி சகஜம் இல்லங்க. கலைஞரின் புத்திசாலித்தனத்துக்கு...சாணக்கியத்தனத்துக்கு.. புகழுக்கு அடிச்ச் சாவு மணிங்க..

பெரிய கட்சியில் தலைவரு.. அஞ்சு தடவை முதலமைச்சரா இருந்தவரு... சோனியா காந்திக்கு எனிமா கொடுத்தவரு... இப்ப ஜெயிலுக்கு போன மகளை திரும்ப கொண்டு வரமுடியாம திக்கி திணறிக்கிட்டு இருக்கிறது சாதாரண விஷயம் இல்லைங்க.

ஆனா.. திமுகவோட பலம் என்ன தெரியுமுங்களா.. இந்த அசிங்கத்துக்கும் முப்பெரும் விழா எடுத்து முட்டுச் சந்துக்கு முட்டுச் சந்து திமுக உடன்பிறப்புக்கள் பாராட்டுக் கூட்டம் போடுவாங்க...

இப்படி இருக்கும்போது கொள்கைக்கா ஜெயிலுக்கு போறதும்.. கொள்ளைக்காக ஜெயிலுக்கு போறதும் ஒன்னுதானுங்களே....









1 comment:

  1. கடைசி வரை தமிழ்நாட்டை சுரண்டி விட்டுத்தான் கலைஞர் அரசியலை விட்டு விலகுவார். எப்படியாவது மகளூக்கு மந்திரி பதவி வேன்டும் என்பது அவரின் ஆசை. ஆனால் அது மட்டும் என்ன காரணத்தாலோ நடக்கவில்லை.

    ReplyDelete