Friday, August 13, 2010

டெல்லி பாக்டீரியா - அமெரிக்காவின் பம்மாத்த்து வேலை

இந்தியாவில் எப்போதும் பரபரப்பான செய்திகளுக்கு பஞ்சமிருக்காது. இப்போது புது விதமான பாக்டீரியா இந்தியாவை மட்டுமல்ல உலக நாடுகளையும் பதற வைத்து இருப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.





இதற்கு பெயர் New Delhi metallo - beta - lactamase - 1 என்று பெயராம். இது ஒரு வகை ஜீன் மூலமாக உருவாகி பாக்டீரியாக்களை உற்பத்தி பன்ணுகிறதாம். இது ஒரு அடங்காப்பிடாரி பாக்டீரியாவாம். செல்லம் சீரியலில் வரும் ரவுடி மனைவியைப் போல எந்த மருத்துக்கும் இது மசியாதாம். கட்டுப்படாதாம்.

இந்த பாக்டீரியாவால் பாதிக்கப்பட்டவர்கள் அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் அடையாளம் காணப்பட்டிருக்கிறார்களாம். இது இந்தியாவில் இருந்தான் இங்கு இறக்குமதியாகி இருக்கிறது என்பது இந்த நாட்டு மருத்துவர்களின் வாதம். அது எப்படி இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும்.... இதற்கு இந்த மருத்துவர்கள் சொல்லும் காரணம் விசித்திரமாக இருக்கிறது.

இந்தியா கணினித்துறையில் அமெரிக்காவுக்கே அல்வா கொடுத்த நாடு. மருத்துவத்திலும் மகத்தான சாதனை படைத்து வருகிறது. இந்தியாவில் மருத்துவச் செலவு மிக மிகக் குறைவு. அமெரிக்காவில் சாதாரண காய்ச்சலுக்கு ஆகும் செலவை வைத்து இந்தியாவில் கண் அறுவைச் சிகிச்சையையே செய்து விடலாம். அதனால் இப்போது மேற்கத்திய நாடுகளில் இருந்து ஏராளமான நோயாளிகள் இந்தியாவுக்கு படை எடுக்கிறார்கள். நோய்க்கான சிகிச்சையைப் பெற்று விட்டு புண்ணியத்தலங்களில் நீராடி பாவத்தைக் கழுவி சொந்த நாட்டுக்கு நடையைக் கட்டுகிறார்கள்.

இப்படி மருத்துவத்துக்காக வந்தவர்களின் மூலமாகத்தான் மேற்கத்திய நாடுகளில் இந்த பாக்டீரியாக்கள் ஊடுருவி இருக்கின்றன என சொன்னதோடு நிற்காமல்... இதுக்கு இந்தியத் தலைநகர் டெல்லியின் பெயரைச் சூட்டி..அதற்கென  விழாவும் எடுத்து விட்டார்கள். இந்த பாக்டீரியா உலகத்தின் எந்த மூலையில் இருந்து வேண்டுமானாலும் பரவி இருக்கலாம் என்று நிலை உள்ளபோது ஏன்... இந்தியாவை மட்டும் குறிவைத்து தாக்கி இருக்கிறது அமெரிக்கா.. இது மண்டையைப் பிறாண்டும் கேள்விதான்.

இந்தியா உலகத்திலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடு என அமெரிக்கா புகழாரம் சூட்டும். இந்தியாவின் பண்பாடும் நாகரிகமும் உலகத்துக்கே வழிகாட்டி என பாராட்டு பத்திரம் வாசிக்கும். ஆனால், ஐ. நா. பாதுகாப்பு சபையில் இடம் கேட்டால் மட்டும் அமெரிக்காவின் காது செவிடாகி விடும். இப்படி இந்தியாவின் தோளில் அமர்ந்து காதைக் கடிக்கும் வேலையை பல ஆண்டுகாலமாகவே அமெரிக்கா செய்து வருகிறது.

இந்தியாவின் இயற்கை வளம் எப்போதுமே அமெரிக்காவுக்கு அலர்ஜி. அதோடு இந்திய மக்களின் தாக்குப் பிடிக்கும் சக்தி அமெரிக்காவின் அடிவயிற்றில் எரியும் நெருப்பு. பொருளாதாரத் தடை விதித்தால் அது இந்திய மக்களுக்கு புடலங்காய்த் தடை மாதிரிதான். அதனால் எந்த வகையிலாவது இந்தியாவைக் காலி பண்ண வேண்டும் என்பது அமெரிக்காவின் ஆசை.

பல ஆண்டுகளுக்கு முன்னால்... இந்தியாவில் வளரும் நாட்டுக் கருவை மரங்களுக்கு இணையாக சீமை (மேற்கத்திய நாடு) கருவை என்ற முள்செடி இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டது. இந்தியாவில் வாழும் ஏழை மக்களுக்கு இது விறகாகப் பயன்படும் எந்த வறட்சியையும் தாக்குப் பிடிக்கக்கூடிய சக்தி கொண்டது என அறிமுகப்படுத்தப்பட்டது.

அது உண்மைதான். யாராவது அசந்து தூங்கினால் அவர்களின் அடிவயிற்றில் முளைத்து மேல் வயிற்றில் செடியாக வளரக்கூடிய அபார ஆற்றல் கொண்டது இந்த சீமைக்கருவை. தண்ணீர் என்றால் இதற்கு பகை. அழுகி செத்து விடும். வெய்யில் என்றால் கேரளப் பெண்களைப் போல கிளுகிளுப்பாக வளரும். இது நிலத்தடி இந்தியாவின் நீரை உறிஞ்சியது மட்டுமல்ல... விளை நிலங்களையெல்லாம் பாழாக்கி விட்டது. எப்படி பிடுங்கி எறிந்தாலும் இரண்டே நாட்களில் முளைத்து நிற்கும் அசகாய சூரன் இது. இதனால் தமிழ்நாட்டின் பெரும்பகுதி பாலைவனமாகி விட்டது.

அடுத்ததாக பசுமைப்புரட்சி என்ற பெயரில் அமெரிக்கா மலட்டு விதைகளை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்தது. இதன் மூலம் நெல்லை அபிரிமிதமாக விளைய வைக்க முடியும். ஆனால், அதை விதை நெல்லாக பயன் படுத்த முடியாது. ஒவ்வோர் ஆண்டும் அமெரிக்காவிடம் இந்தியாவைக் கையேந்த வைக்கும் உத்தி இது. இதனால், வலு வித்து என்று சொல்லக்கூடிய ஊட்டச் சத்து கொண்டு கார் நெல் மறைந்து குறுகிய கால வித்துக்கள் என்று சொல்லக்கூடிய புது ரக நெல் சாகுபடி செய்யப்பட்டது. இது பசியை போக்க உதவுமே தவிர ஆளை பலவீனப்படுத்தி விடும்.

அடுத்ததாக அமெரிக்காவின் பார்வை இந்திய பண்பாட்டின்மீது திரும்பியது. கட்டுக்குலையாத அதன் பாரம்பரியம் அமெரிக்காவின் கண்களை உறுத்தியது. விளைவு அழகிப் போட்டியில் இந்திய அழகிகள் உச்சத்தை தொட்டனர். பட்டமும் பெற்றனர். அதன் தாக்கத்தால் அமெரிக்காவின் அழகு சாதனப் பொருட்கள் இந்தியாவின் சின்னக் கிராமத்தைக் கூட விட்டு வைக்காமல் சீரழிக்கத் தொடங்கியது.

அணு ஆயுதத் துறையில் இந்தியா அடைந்து வரும் வளர்ச்சி அமெரிக்காவின் அடிவயிற்றில் இன்றும் அனல் மூட்டிக் கொண்டிருக்கிறது. பொக்ரான் அணுகுண்டு வெடிப்பைக் காரணம் காட்டி பொருளாதாரத் தடையை விதித்தது. அணு மூலப்பொருட்கள் கிடைக்காவண்ணம் கிடுக்கிப் பிடி போட்டது. ஆனால், இந்தியா இதற்கெல்லாம் கவலைப்படவில்லை. பொருளாதாரத் தடையாவது புண்ணாக்காவது என அது பாட்டுக்கு அணு ஆராய்ச்சியில் வெற்றி நடை போட்டது. நிலவுக்கு ஏவுகணையை அனுப்பி செயற்கைக் கோளை நிலை நிறுத்தியது.

கணினி புரட்சியில் கண்ணைக் கட்டும் வளர்ச்சி அடைந்த அமெரிக்காவின் சிலிக்கான் வேலியையே சில்லு சில்லாக்கினார்கள் இந்தியாவின் கணினி வல்லுனர்கள். கணினி மென்பொருள் தயாரிப்பில் அமெரிக்காவுக்கே கண்ணாமூச்சி காட்டினார்கள் இருபது வயது நிரம்பாத இந்திய மாணவர்கள். அதிர்ச்சி அடைந்த அமெரிக்கா அதைத் தடுக்க நினைத்தது. முடியவில்லை. சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழுவது எவ்வளவோ மேல் என கணினி வல்லுனர்களை பணம் என்ற வலையை வீசி அமெரிக்காவுக்கு  இழுத்துக் கொண்டது.

இப்போது அமெரிக்கா அச்சப்படும் ஒரு விஷயம்... இந்தியாவின் மருத்துவ வளர்ச்சி... எப்போதுமே அமெரிக்காவுக்கு ஒரு ஆசை உண்டு. கல்யாண வீட்டுக்கு போனால் மாப்பிள்ளையாக இருக்க வேண்டும். சாவு வீட்டுக்கு போனால் பிணமாக கிடக்க வேண்டும் என்பதுதான் அது. இந்த ஆசையில் இந்தியா மண்ணை அள்ளிப் போட்டு விடுமோ என்ற அச்சம் அமெரிக்காவின் கிட்னியைக் கிள்ளிப் பார்க்க ஆரம்பித்தது.

மருத்துவத்துறையில் இந்தியா அடைந்து வரும் அபாரமான வளர்ச்சி... அமெரிக்காவின் மானத்துக்கு மட்டுமல்ல... வருமானத்துக்கும் வேட்டு வைப்பதாக இருக்கிறது. கடுமையான நோய் என்றால் அமெரிக்க மருத்துவத்தை குறி வைத்த உலக நாடுகள்.... இப்போது இந்தியாவுக்கு இறக்கை விரித்திருக்கின்றன. இதற்கு காரணம் விலை மலிவு.. தரம் அதிகம் என்பதுதான்.. இதை ஏற்றுக் கொள்ள முடியாத அமெரிக்கா பாக்டீரியா என்ற பம்மாத்து வேலையை பரப்பி விட்டுக் கொண்டிருக்கிறது.

உலகம் அடைந்து வரும் அபாரமான வளர்ச்சி... நாளுக்கு நாள் மாறிவரும் உணவுப் பழக்கம்... இருக்கின்ற இன்பங்களையெல்லாம் இப்போதே அனுபவித்து விட வேண்டும் என்ற வேட்கை.. இப்படி நோய்களுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கும் பழக்கம் எல்லா நாட்டு மக்களிடமும் ஏற்றதாழ்வு இல்லாமல் தலைவிரித்து ஆடும்போது ஒரு நாட்டில் இருந்துதான் பாக்டீரியாக்கள் பரவுகிறது என பிரச்சாரம் செய்வது என்பது "அடுத்த வீட்டுக்காரி ஆண் பிள்ளை பெற்று விட்டால் என்பதற்காக பக்கத்து வீட்டுக்காரி அடி வயிற்றில் அடித்துக் கொண்ட கதை"யாகத்தான் இருக்கும்.

இந்த முயற்சியிலும் அமெரிக்காவுக்கு தோல்வி கிடைத்தால் அதற்காக அந்த நாடு வெட்கப்படாது.... வேதனைப்படாது....அடுத்த அஸ்திரத்தை எடுத்து குறி பார்க்க தொடங்கி விடும் என்பது மட்டும் காலம் நமக்கு உணர்த்தும் உண்மை.

1 comment:

  1. //இதற்கு பெயர் New Delhi metallo - beta - lactamase - 1 என்று பெயராம்.//

    சூப்பர் பக் உண்டு பண்ணக் கூடிய பாக்டீரியாவின் பெயரா?

    காங்கிரஸ் செடி என்று அழைக்கப்படும் பார்தினிய விதைகளை விமானத்தில் இருந்தும் கோதுமையோடு கலந்து அந்த விச செடிகளை பரப்பியவர்கள் அமெரிக்கர்கள். இவர்களுக்கு எனக்கு ஒரு கண் போனால்கூட பரவாயில்லை மற்றவர்க்கு இரண்டு கண்களும் போக வேண்டும் என நல்ல எண்ணம் கொண்டவர்கள்.

    நம் நாட்டு அரசியல்வாதிகள் அமெரிக்காவுக்கு சலம் போட்டுக்கொண்டு இருக்கும் வரை இது தொடரும்.


    அருமையான பதிவு பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete