Thursday, March 28, 2013
காங்கிரஸ் புளுக்கு.... அமெரிக்கா சுளுக்கு.... !
"செத்தவன் காலு செமக்கிறவன் தலைமேலே"ன்னு ஒரு பழமொழி இருக்குங்க... இந்தப் பழமொழிக்கு பொருத்தமானவங்க நம்ம தமிழ் நாட்டு காங்கிரஸ் தலைவர்களுங்க..
டெல்லி தலைவருங்க என்ன சொல்றாங்களோ.. அப்படியே ஆமா போடுறதில.. இவங்களுக்கு இணையா உலகத்தில யாரையும் சொல்ல முடியாது.
தலையாட்டி தலையாட்டி தஞ்சாவூர் பொம்மையே தலைகுனிற அளவுக்கு கழுத்துல சுளுக்கு புடிச்சவங்க..
இலங்கைக்கு எதிரா அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்துல என்ன இருக்கிறதுன்னு தெரியாது. இது டெல்லி காங்கிரஸார் பல்லியா கத்திய வாசகம்.
இங்க ஞானதேசிகன்... தங்கபாலுன்னு எல்லாரும் இந்தக் கருத்தை வாசனை மாறாம வாந்தி எடுத்தாங்க..
உலகப் பெருந்தலைவர் கலைஞர் கருணா நிதிகூட இந்த வாந்தியைப் பிடித்து தன் பங்குக்கு பந்தி வைத்தாருங்க.
ஆனா... இப்ப அமெரிக்ககாரன் என்ன சொன்னான் பாத்திங்களா.. நாங்களும் இந்தியாவும் சேர்ந்துதான் தீர்மானத்தையே தீர்மானித்தோம். இந்தியாவுக்கு தெரியாம நாங்க தீர்மானம் போடுறதா... சட்டியத் தூக்கி சட்டுன்னு கவுத்துப்புட்டான்.
சரி... இதுக்கு முன்னாடி ஆந்தை மாதிரி அலறுன காங்கிரஸ் கரிச்சான் குஞ்சுங்க இப்ப என்ன சொல்லும். சாணின்னு நெனைச்சு 'ஆயி' ல்ல கையை வச்ச கதையா அலங்க மலங்க முழிச்சிக்கிட்டு இருக்குமுங்க..
அமெரிக்ககாரன் எப்படி சித்து விளையாட்டு காட்டுறான் பாத்திங்களா... அவன் நினைச்சா ஒரு நிமிசத்தில ராஜபக்சேவை குற்றவாளியாக்கி சதாம் உசேன் மாதிரி சட்னி பண்ண முடியுமுங்க.
அதனால அவனுக்கு என்ன லாபம். இந்தியாவுக்குள்ள இருக்கிற ஜனங்க அடிச்சுக்கிட்டு தலையப் பிச்சுக்கிட்டாத்தானே அவன் வந்து பஞ்சாயத்து பண்ண முடியுமுங்க.
என்ன எழவோ... அன்னைக்கும் இன்னைக்கும் என்னைக்கும் செத்துக்கிட்டு இருக்கிறது நம்ம தமிழ் ஜனங்கதானுங்களே...
ஆனா... இந்த அரசியல்வாதிங்க என்னைக்கும் திருந்தவும் மாட்டாங்க. வருந்தவும் மாட்ட்டாங்க.. ஏன்னா.. அவங்களுக்கு மனச்சாட்சி இருந்தாத்தானே.. அது சரி மனசுன்னு ஒன்னு இருந்தாத்தானே மனச்சாட்சி இருக்குமுங்க....
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment