Sunday, January 24, 2010

நிகர் நிலைப் பல்கலைக் கழங்களுக்கு அனுமதி கொடுத்தது யார்?

இப்ப இந்தியாவில அல்லோகலப்படும் பிரச்சினை நிகர் நிலைப் பல்கலைக்கழக அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்கிற மத்திய அரசின் அறிவிப்பு தாங்க. இந்தப் பல்கலைக் கழகங்கள் எல்லாம் கொள்ளைக் கூடங்கள்ன்னு இப்போ எல்லாரும் பேசுறாங்க... எழுதுறாங்க...




சரிங்க... இதுக்கு அனுமதி கொடுத்தது யாருங்க.. மத்திய அரசுங்க... சில வல்லுனர்கள் பரிந்துரையின் பேரில் தாங்க அனுமதி கொடுக்கப்பட்டிருக்கு. அவங்க காசு வாங்கிக்கிட்டு கொடுத்தாங்களா... இல்ல கண்ணை மூடிக்கிட்டு கொடுத்தாங்களாங்கிறது பிரச்சினை இல்லைங்க.

அவங்க கொடுத்ததாலே தானே மாணவர்கள் சேர்ந்தாங்க. எல்லாரும் இன்னைக்கு நேத்தா பல்கலைக்கழகங்களை ஆரம்பிச்சாங்க. அது ஆரம்பிச்சு அஞ்சாறு வருசம் ஆயிடுச்சுங்க. எத்தனையோ பேரு படிப்பை முடிச்சிட்டு பட்டமும் வாங்கிட்டாங்க.

தகுதியில்லாத பல்கலைக் கழகங்களை ஆரம்பிக்க கையெழுத்துப் போட்ட சம்பந்தப்பட்ட வல்லுனர்களை... அதிகாரிகளை அல்லவா மத்திய அரசு முதலில் கைது செய்யணும்.

அந்த நேரத்தில் இருந்த கல்வி அமைச்சர் அல்லவா இதுக்கு பொறுப்பு ஏற்க வேண்டும். அதை விட்டுட்டு திடீர்ன்னு ரத்துன்னா...ஆயி போனவனை அடிக்கமுடியாம..... ஆயி...யைப் போட்டு அடிச்ச கதையால்ல இருக்கு.

இன்னொன்னுங்க... இந்த பல்கலைக்கழகங்கள் எல்லாம் பலசரக்கு கடைங்களா.. இழுத்து மூடிட்டா இன்னொரு கடைக்கு மக்கள் போயி சாமான்கள் வாங்க... மாணவர் சம்பந்தப்பட்ட காரியமுங்க.

ரத்துன்னு அறிவிக்கிறதுக்கு முன்னாடி... அங்க எத்தனை மாணவர்கள் படிக்கிறாங்க... அவங்களுக்கு மாற்று ஏற்பாடு என்ன செய்யலாம்... அரசாங்க பல்கலைக் கழகங்களோடு இணைக்கிறதுன்னா... அதுக்கு அரசாங்கம் என்ன திட்டம் வச்சிருக்கு.

பல்கலைக் கழக நிர்வாகம் முரண்டு பிடிச்சா அவங்க பல்லைப் பிடுங்க என்ன வழி...இதையெல்லாம் யோசித்த பின்னரே ரத்து ஆயுதத்தை கையில் எடுத்திருக்கணுமுங்க.

அதோடு சிலர் இந்த பல்கலைக் கழகத்தில படிக்கும் மாணவர்கள் எல்லாம் மக்கு மாணவர்கள் என்பதுபோல சொல்றாங்க. இது அவங்கதான் மக்கு என்பதைக் காட்டுதுங்க. அண்ணா பல்கலைக்கழகத்தில படிச்ச மாணவர்கள் எல்லாரும் நோபல் பரிசு வாங்குறவங்க போல பீத்திக்கிறாங்க.

அரசாங்க ஒதுக்கீட்டில போன மாணவர்கள் அங்கயும் தண்டம் அழுகிறது சம்பந்தப்பட்ட பெற்றோர்களுக்குத்தாங்க தெரியும்.
சட்டப்படி புகார் கொடுத்து அவங்கமேலே நடவடிக்கை எடுக்கலாமேன்னு சில மேதாவிங்க கேக்கலாமுங்க. வாயைக் கட்டி... வயித்தைக் கட்டி.. சேத்த பணத்தைக் கட்டி பிள்ளையைப் படிக்க வைக்கிற பாட்டாளி... நிர்வாகத்தோடு மோதி நிர்க்கதியா போன கதை நிறைய இருக்குதுங்க.

கணக்கு வழக்கில குளறுபடி இருக்குன்னு சொன்ன அரசாங்க ஆடிட்டரையே அண்டர்வேரைக் கழட்டிருவாங்க போல இருக்கு. இந்த நிலையில விவரம் தெரியாத வேட்டி ஆசாமிங்க கதி என்ன ஆகுமுன்னு நினைச்சுப் பாருங்க. கோமணத்தை உருவி கும்மி அடிச்சுருவாங்க.

No comments:

Post a Comment