Tuesday, November 3, 2009

சரத்குமார் அண்ணாச்சி... சமக என்னாச்சு

அணி மாறுவதில அணிலை விட வேகமாத் தாவுறதில கில்லாடி நம்ம சரத்குமார் அண்ணாச்சிங்க. நான் சொல்றது அரசியலில மட்டும்தாங்க. நீங்க பாட்டுக்கு ஏடாகூடமா கற்பனை பண்ணி என்னைச் சிக்கல்ல மாட்டி விட்டுடாதீங்க.





நாட்டாமை படம் வேட்டாமையா மாறி வசூலை வாரிக் குவிச்ச உடனே இவருக்கு அரசியல் ஆசை வந்துச்சுங்க. அந்த நேரத்தில அம்மா ஆட்சி. அதனால அம்மாவுக்கு பக்க பலமா நின்னாருங்க.

அப்புறம் திடீர்ன்னு கலைஞர்மேல காதல் கொந்தளிச்சிருச்சுங்க. உடனே அந்தர் பல்டி அடிச்சு திமுக வந்தாருங்க. இவரை நம்பி கலைஞர் இவருக்கு எம். பி. பதவி கொடுத்தாருங்க.

அந்த நேரத்தில விஜயகாந்த் கட்சி ஆரம்பிச்சு வெளிச்சமா இருந்ததாலே இவருக்கு விலா எலும்பு துடிச்சிருச்சுங்க. உடனே பொசுக்குன்னு ஒரு கட்சியை ஆரம்பிச்சு அடுத்த முதல்வர் நான் தான்னு அல்ஜா குல்ஜா ஆட்டம் போட்டாருங்க.

இடைத்தேர்தல் தேர்தல் வந்துருச்சுங்க. தனிச்சு நின்னு ஓட்டு வாங்கினா அடுத்து பேரம் பேச வசதியா இருக்குமுன்னு கட்சிக்காரரை நிறுத்துனாருங்க. பாவம் யாருமே கண்டுக்கலை. யானையும் யானையும் மோதும்போது இடையில பூனை போயி புல்லாங்குழல் வாசிச்சா அதோகதிங்கிற விஷயம் என்ன காரணத்தினாலோ இவருக்குத் தெரியலைங்க.

இப்ப திமுக பக்கம் பல்லைக் காமிச்சிக்கிட்டு பட்டம் விட ஆரம்பிச்சிருக்காருங்க. கலைஞர் பெருந்தன்மையானவருங்கிற காரணத்தாலே ஏமாத்திட்டு போனவங்களையும் ஏத்துக்குவாருங்க... முதுகில குத்திட்டு போனவங்களையும் சேத்துக்குவாருங்க.

அதுசரி இவரு ஆரம்பிச்ச சமத்துவக் கட்சி என்ன ஆச்சுன்னு கேக்கிறீங்களா... அதை உயிர் மூச்சு உள்ளவரை காப்பாற்றி அமெரிக்க தேர்தலில் போட்டி போட்டு ஒபாமாவை ஓட ஓட விரட்டுவதுதான் சரத்குமாரின் அடுத்த திட்டம்ன்னு சொல்லப்படுதுங்க.

இப்படி மாத்தி மாத்தி மாராப்பை விலக்குறாங்களே இவங்களுக்கு வெட்கமா இருக்காதான்னு கேக்கிறீங்களா... முதலிரவில எப்படி நடந்துக்கிறதுன்னு காலேஜ் கட்டி செயல்முறை விளக்கம் செய்யுற புதுமையான காலத்தில இருக்கும்போது வெட்கமாவது மண்ணாங்கட்டியாவதுன்னு பதிலுக்கு கேட்டா... பண்பாடு கலாச்சாரமுன்னு பேசுற பழைமைவாதிகளான நாம முகத்தை எங்க போயி வச்சுக்கிறதுங்க.

No comments:

Post a Comment