சமீபத்தில் பெய்த மழை தமிழகத்தை புரட்டுப் போட்டு இருக்குதுங்க. மலைகளில் அழகி என வர்ணிக்கப்படுகின்ற நீலகிரி... வில்லனிடம் மாட்டிய கதாநாயகியைப் போல கசங்கிப் போய் கிடக்கிதுங்க.
அங்கு இருக்கின்ற மக்கள் சாப்பாட்டுக்கு என்ன செய்றதுன்னு தெரியாம தவிச்சுக்கிட்டு இருக்காங்க. சீரமைப்பு பணிகள் செய்யிறதுக்கும் கஷ்டமான நிலைதாங்க.
இந்த நேரத்தில மக்களுக்கு சேவை செய்யவே மண்ணில பொறப்பெடுத்து வந்திருக்கமுன்னு மார் தட்டுற அரசியல்வாதிகள் என்ன செய்யணும். அந்த இடத்துக்கு போயி முடிஞ்சவரை உதவி செய்யணுமுங்க.
அதை விட்டுப்புட்டு யாரையாவது வம்புக்கிழுத்துக்கிட்டு இருக்கிறது எந்த வகையில நியாயமுங்க. கலைஞர் கருணாநிதி நீலகிரிக்கு வரலைன்னு அதிமுககாரங்க போராட்டம் நடத்துறாங்க. அந்தக் கட்சிக்காரங்களையே கேட்கிறேன் இது சரியாங்க.
தவிக்கிறது நம்ம ஜனங்க. இதில நீ...நான்...ன்னு போட்டி போடுறது நல்லாவா இருக்கு. கலைஞருடைய உடல் நிலையை நினைச்சுப் பாருங்க. சக்கர நாற்காலியிலதான் நகர்ந்துக்கிட்டு இருக்கிறாரு. அதோடு குளிரான நேரத்தில மலைப்பிரதேசங்களுக்கு போறது பாதிப்பை ஏற்படுத்துமுன்னு எல்லாருக்கும் தெரியுமுங்க. இப்படிப்பட்ட முதல்வர் தேவையான்னு குதர்க்கமா விவாதம் பண்ணினா.... பண்பாட்டுக்கு பேர் போன தமிழன்னு சொல்லிக்கிறதில அர்த்தம் இல்லைங்க.
மக்களோடு ஆதரவைப் பெறனுமுன்னா.. களத்தில இறங்கி காரியத்தைப் பாருங்க. அதை விட்டு விட்டு குறை மட்டும் சொல்லிக்கிட்டு இருந்தா மக்கள் குறைவாத்தாங்க ஆதரிப்பாங்க. வெறும் அறிக்கை மட்டுமே மக்களூக்கு திருப்தியைத்தருமுன்னு கணக்குப் போட்டா விடை தப்பாத்தாங்க வருமுங்க.
Wednesday, November 18, 2009
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment