Thursday, November 19, 2009

விவசாயிகளே...விழித்துக் கொண்டால்தான் விடிவு

கரும்பு விலை குறிச்சு ஒரு சட்டத்தை மத்திய அரசாங்கம் போட்டிருக்குங்க. இதை எதித்து ஆர்ப்பாட்டம் பண்ணுறாங்க விவசாயிங்க எல்லாம். சரி... உங்ககிட்ட ஒரு கேள்விங்க. இந்த சட்டத்தை கொண்டு வந்த கட்சிக்காரங்களில விவசாயிங்க இல்லையா...?





விவசாயிகள் ஒன்ன நல்லா புரிஞ்சுக்கணுமுங்க. இந்தியாவில 80 சதிவிகிதம் பேரு விவசாயிங்க. அவுங்க நெனைச்சா ஒரே நாளில அரசாங்கத்தை ஆட்டம் காண வச்சுடலாமுங்க. ஆனா, அதை அவங்களால செய்ய முடியாதுங்க.

ஒரு கிராமத்தில் 1000 பேரு வசிக்கிறாங்கன்னு வச்சுக்கிட்டா 900 பேரு விவசாயித்தான் இருப்பாங்க. இவங்கள்ல ஒரு பகுதி திமுக. ஒரு பகுதி அதிமுக. இப்படி கட்சிக்கு சில பேரா இருப்பாங்க.

திமுக ஆட்சியில விவசாயிகள் பாதிக்கப்பட்டா அதிமுககாரங்க போராட்டம் நடத்துவாங்க. திமுக கூட்டணிக்காரங்க குண்டியப் பொத்திக்கிட்டு குத்துக்கல்லாட்டம் இருப்பாங்க.

அதே மாதிரி அதிமுக ஆட்சி காலத்தில ஒரு பிரச்சினையின்னா திமுககாரங்க காட்டுக்கத்தா கத்துவாங்க. அதிமுககாரங்க அம்மா பஜனை பாடிக்கிட்டு ஏதோ பாகிஸ்தானில நடக்கிற பிரச்சினை மாதிரி பாத்தும் பாக்காம இருப்பாங்க.

முன்பு ஜாதி இவங்களை கூறு போட்டு கூழுக் கிண்டிக்கிட்டு இருந்ததுங்க. இப்ப கட்சி கூறுபோட்டு கஞ்சி காச்சிக்கிட்டு இருக்குதுங்க. ஜாதிக்கும் கட்சிக்கும் பேருதாங்க வித்தியாசம். மத்தபடி எல்லாம் ஒன்னுதாங்க. முன்பு தேவர், கவுண்டர், நாயக்கர்ன்னு அடிச்சுக்குவாங்க. இப்ப திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட்டுன்னு அடிச்சுக்கிறாங்க.

இப்படி இருந்தாத்தான் அரசியல்வாதிகள் அஜால் குஜால் வேலைகளைச் செய்ய முடியும். ஆனா, இந்த முட்டா ஜனங்களுக்கு கண்ணுக்கு முன்னாடி இருக்கிற இந்த உண்மை ஏனோ மண்டையில உறைக்க மாட்டேங்குதுங்க.

நம்ம அரசியல்வாதிங்க இந்தியாவில இருந்து சட்டம் போடுறமாதிரி தெரியலைங்க. ஏதோ இங்கிலாந்திலையோ அமெரிக்காவிலையோ இருந்து சட்டம் போடுற மாதிரி இருக்குதுங்க.

கரும்பு போட்டு விவசாயம் பண்ணுற அரசியல்வாதி இருக்காங்களா... நெல் சாகுபடி செய்யிற அரசியல்வாதி இருக்காங்களா... இருப்பாங்க.. அவங்களுக்கு சத்தமில்லா எல்லா வசதியும் வீட்டு வாசல்ல வந்து கையைக் கட்டிக்கிட்டு நிக்கும்.

ஆனா... விவசாயிகளுக்கு.... ஜாதியும் கட்சியும் தான் ஏழை மக்களை ஏழையாகவே வச்சிருக்கு. ஆனா, ஜாதியை விட கட்சி கொடுமையானதுன்னு எப்ப விவசாயிங்களுக்கு புரியுதோ... அப்பத்தாங்க அவங்களுக்கு விடிவு. அதுவரை ஊருக்கு சோறு போடுற ராஜா, ஒத்த ரூபா நாணயத்துக்கு பிச்சை எடுத்த கதைதாங்க.

No comments:

Post a Comment