வெளிநாட்டில் இல்லையா அப்படின்னு நீங்க கேட்கலாமுங்க. இருக்காங்க... அவங்களலெல்லாம் அடிமையாக அல்ல... ஆதரவாளர்களாக.... அது எப்படின்னு கேட்கிறீங்கள்....
அங்க கென்னடி சுடப்பட்டபோது யாரும் தீக்குளிச்சாங்களா... அல்லது புஷ் தோத்து போனதுக்கு யாரும் உயிரை விட்டாங்களா... இத்தாலி பிரதமரை மூக்கை உடைத்ததுக்கு பஸ்சை எரிச்சாங்களா... கடைகளை அடித்து நொறுக்கினாங்களா....
அங்கையும் வன்முறை இருக்கு. போராட்டம் வெடிக்குது. போலீஸ்காரங்களோடு மோதுறாங்க. அதெல்லாமே உரிமைக்காக.... ஒரு தலைவனின் சுயநலத்துக்காக இல்லைங்க.
அண்மையில ரஜினி காந்த் பிறந்த நாள் வந்துச்சு. ஒருத்தர் ரஜினி கட்டவுட்டுக்கு பால் ஊத்தி அபிஷேகம் பண்ணுறாருங்க. அந்தப் பாலைக் காய்ச்சி நாலு ஏழைக்குழந்தைகளுக்கு கொடுத்தா... ரஜினி எவ்வளவு சந்தோசப்படுவாரு.... அந்த ஏழைக் குடும்பம் ரஜினியை வாழ்த்துமே.....
இந்திரா காந்தி எவ்வளவு பெரிய தலைவிங்க. அவுங்க சாப்பிட்ட இலையில உட்காந்து சாப்பிட யாராவது போட்டி போட்டிருக்கிறாங்களா.... ஆனா, நம்ம தமிழ்நாட்டில ஜெயலலிதா சாப்பிட்ட இலையில உக்கார ஒரு இசை நாற்காலி போட்டியே நடந்துச்சுங்களே....
தலைவருக்கு ஏதாவது ஒன்னுன்னா எதுக்கு பொதுச் சொத்தை சேதப்படுத்துறாங்க...
இப்ப ஆந்திராவை எடுத்துக்கங்க. ராஜசேகர ரெட்டி இறந்த நேரமா பாத்து சந்திரசேகர ராவ் தெலுங்கானா பிரச்சினையை கிளப்பி விட்டாரு.... இப்ப ஆந்திராவே பத்திக்கிட்டு எரியுது.
சமீபத்தில மதுரை மீனாட்சி கல்லூரி மாணவிகள் போராட்டம் நடத்துனாங்க. ஏதோ பொழுது போக்கா செய்யிற மாதிரி சிரிச்சுக்கிட்டு, ஒருத்தரை ஒருத்தர் தள்ளிக்கிட்டு இருக்கிற காட்சியை தொலைக்காட்சியில பாக்கும்போது மனதுக்கு வேதனையா இருக்குங்க.
ஒரு அரசியல்கட்சித் தலைவரை பத்தி விமர்சனம் செய்ய முடியுமா... அவரைப்பத்தி அவதூறா எழுதினா.... தொண்டர்கள் ஆத்திரப்படுறது நியாயமுங்க. ஆனா... நடந்த சம்பவத்தை பத்தி எழுதினாக்கூட உயிருக்கு உத்திரவாதமில்லாத நிலை ஏற்பட்டு இருக்குங்க.
விலைவாசியைக் குறைக்கணுமுன்னு ஒரு போராட்டத்தை ஒரு கட்சி நடத்துது. அதில நூறு பேருக்கு குறைவானவங்களே கலந்துக்கிறாங்க. பாக்கி உள்ளவங்களுக்கு விலைவாசிப் பாதிப்பு இல்லைங்களா.. அப்புறம் ஏன் ஒன்னா கூட முடியலை.
முன்பு சாதிப்பிரிவினை நம்மளை பாதளத்தில தள்ளுச்சுங்க. இப்ப கட்சிப்பிரிவினை அதல பாதாளத்தில தள்ளிக்கிட்டு இருக்குங்க. மக்கள் எல்லாம் ஒன்னு சேர்ந்தா யாரும் எந்தத் தப்பும் செய்ய மாட்டாங்க. ஆனா, அது நடக்காதுங்க. அப்படி நடக்க அரசியல்வாதிகள் விட மாட்டாங்க.
அப்படி ஒரு அடிமைத்தனமான நிலைக்கு நாம் ஆட்பட்டு இருக்கிறோமுங்க. மேலே குறிப்பிட்ட மூனு அம்சங்களில் இருந்து எப்ப மக்கள் தங்களை விடுவித்துக் கொண்டு வெறும் ஆதரவாளர்களாக மட்டும் இருக்கிற பக்குவத்தை அடையுறாங்களோ அப்போதுதாங்க தமிழ் மக்களின் தரம் உயருமுங்க.

No comments:
Post a Comment