Friday, March 19, 2010

நித்திக்கு... விக்கி வச்ச வேட்டு




ஈசா பட நாயகன் விக்னேஷ் ... கிச்சு...கிச்சு... தாம்பளம்... கிய்யா...கிய்யா... தாம்பளம் விளையாட்டில் கில்லாடி சாமியார் நித்தியானந்தாவை ஒரு வாங்கு வாங்கி இருக்கிறாருங்க. அவரோட தைரியத்துக்கு பாராட்டுங்கோ...

விக்னேஷையும் சாமியாருக்கிட்ட கோர்த்து விட்டது ராகசுதாதானுங்களாம். வாழ்க அவரோடு சமூக சேவை.  பெரிய பணக்காரங்க,, பதவியில இருக்கிறவங்க... சினிமாக்காரங்கன்னு நிறையப் பேரு சாமியாரோட ரசிகருங்களாம்.

ஏழை பாலைங்க சாமியார தேடி போனா அதில நியாயம் இருக்குது. ஆனா ஊரை அடிச்சு உலையில போட்டு கோடி கோடியா பணத்தைச் சேத்த இந்தக் கோணங்கிங்க எதுக்குய்யா அங்க போறாங்க.



என்னதான் நம்மி நித்தி ரஞ்சிதாக்கிட்ட கொஞ்சிக் கூத்தடிச்சாலும் அவரு எல்லை மீறின மாதிரி வீடியோவில இல்லைங்க. அது நமக்கு கொஞ்சம் மன வேதனைதாங்க.

ஆனா... நித்தி எதுக்குங்க இந்தப் பம்மு பம்முறாரு. நான் பிரம்மச்சாரின்னு எப்பவாச்சும் சொல்லிருக்கனான்னு கேக்குறாரு. ஒரு வாட்டி ஞானிங்கிறாரு. இன்னொருவாட்டி ஆன்மீக ஆய்வாளர்ங்கிறாரு. அப்புறம் பாலியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கேங்கிறாரு. 

பாலியல் ஆராய்ச்சிக்குத்தான் நாராயண ரெட்டி மாதிரி பல டாக்டருங்க இருக்காங்களே... உனக்கு எதுக்கு சாமி கருமாந்திரம் புடிச்ச இந்த உவ்....வவ்...வே...வேலை. 



இது சம்பந்தமா என்னோட நண்பர் ஒருத்தரு விவாதம் பண்ணுறாரு.. அதை என்னால ஏத்துக்க முடியலைங்க. அது உண்மையா பொய்யாங்கிறதை உங்க முடிவுக்கே விட்டுடுறேங்க.

நித்தி ஆனந்த தாண்டவம் ஆடும்போது ஆம்பிளைங்களும் பொம்பிளைங்களும் ஆளு மாத்தி ஆளு கசமுசா காரியத்தில கண்ணு மண்ணு தெரியாம கலக்குவாங்கலாமே.. இதை சாமி அப்படியே ரசிச்சு பாப்பாராமே... இந்தக் கசமுசா விளையாட்டு  ரொம்ப நம்பிக்கையான விஐபி ஆளுங்க மத்தியிலதான்  நடக்குமாமே...அதனாலதான் அந்த சாமியாருக்கிட்ட பணத்தை கொண்டு போயி கொட்டுறாங்களாமே...

இப்படி மே... மே..ன்னு அடுக்கிட்டே போனாருங்க.. இப்படியும் இருக்குமான்னு என்னோட மனசு கெடந்து அல்லாடுதுங்க. ஏதோ நம்ம நித்தி வயசு கோளாறுல ( நித்தி படுக்கையில் செத்த பாம்பு மாதிரி கெடக்கிறத பாத்தா உடம்பும் கோளாறா இருக்கும் போல) ஒரு தபா தப்பு பண்ணிட்டா அதுக்கு இப்படியா இஸ்திரி போடுறதுன்னு கேட்டா அந்த நண்பரு அடங்க மாட்டேங்கிறாருங்க.

இந்தப் படத்தை பாருங்க. இவரு இஞ்சினியரு மாணவருங்க.. தண்டவாளத்தில மாட்டிக்கிட்ட ஒரு பெரியவரை காப்பாத்தப் போயி ரயிலல அடிபட்டு ரெண்டு காலும் போச்சுக்குங்க. தொடர்ந்து படிக்க முடியலைங்க. உழைச்சு பொழைக்கவும் வழியில்லைங்க.



நான்... இந்த பைத்தியகார பணக்காரங்களையும் ஏழை எளிய மக்களோடு காசில ஏசி போட்டு படுத்திருக்கிற சினிமாக்காரங்களையும் பாத்து கேட்கிறேங்க.

சல்லாபச் சாமியாருங்ககிட்ட போயி சங்கடப்படாம பணத்தை கொட்டுறீங்களே... நீங்க ஒரு நேர உவ்வேக்கு கொடுக்கிற காசில இதுமாதிரி ஏழைங்க எத்தனை பேர வாழ வைக்க முடியும் தெரியுங்களா... இதை செஞ்சு பாருங்கப்பா... உலகத்தில இருக்கிற சாமிங்க எல்லாம் உங்க வீட்டு வாசல்ல காத்துக்கிட்டு நிக்கும்.

No comments:

Post a Comment