ரம்லத், நயன்தாராவுக்கு தர்ம அடி கொடுக்க தயாரா இருக்காங்களாம். இது எனக்கு வேதனையா இருந்துச்சுங்க. ஏன்னா எனக்கு பிரபுதேவா
நடனத்துமேல ஒரு இதுங்க. ஆனா, நயன்தாரா செய்யிறத ஏத்துக்க முடியலைங்க.
"இப்படி ஒரு பெண்ணோட வாழ்க்கையை கெடுக்குதே இந்தப் பொண்ணு....கல்யாணம் ஆகாம எத்தனையோ பசங்க திரியுறாங்களே...அவங்களில
ஒருத்தனை கவ்விக்கிட்டு போக வேண்டியதுதானே...சூடு சுரணை இல்லாத ஜென்மங்கள்"ன்னு சங்கடத்தோட சொன்னேங்க என் நண்பன்கிட்டே.
இது பத்தி அவனோட கருத்து வேற மாதிரியா இருக்குங்க. "பிரபுதேவாவின் மகன் ஒருத்தன் புற்று நோயால இறந்துட்டான். அந்த துக்கத்தை
நயன்தாரா மடியில படுத்து மறக்க நினைக்கிறாரு பிரபுதேவா.
நம்ம நயன்தாராவும் தாயன்போடு தடவி தடவிக் கொடுத்து பிரபுதேவாக்கு மருந்தா மாறி இருக்காரு. இந்த சமுதாய சேவையைப் போய் தப்பா
சொல்லலாமா"ன்னு அவன் ஒரு போடு போட்டான்.
இந்தப் பேச்சில இன்னொரு நண்பன் இடையிலே பூந்து என்னோட கேள்விக்குப் பதில் சொன்னாங்க. " நாம வேலு மிலிட்டரி ஹோட்டல்,
அஞ்சப்பன், அரசப்பன், சரவணபவன்னு எதுக்குப் போறோம். ருசியா சாப்பிடத்தானே. அது மாதிரிதான் நயன்தாரா செய்யுறாங்க. இது ஊரு
உலகத்தில நடக்கிறதுதானே...
இதுல பிரபுதேவா மனைவி வருத்தப்பட ஒன்னும் இல்லைங்க. மோகம் முப்பது நாள்...ஆசை அறுபது நாள்தானே. ஆறு மாசத்திலோ....ஒரு
வருசத்திலோ....காதல் கசக்கும். பழுத்த மரம் பாத்து பச்சைக்கிளி பறந்திரும். போன மச்சான் திரும்பி வரப்போகிறார். இதுக்கு போயி
அலட்டிக்கலாமா"ங்கிறான்.
இன்னொரு விஷயத்தையும் சொன்னான். அதைத்தான் தாங்க முடியவில்லை. " நயன்தாராவுக்கு சூடு சுரணை இல்லையான்னுதானே
கேட்டே...அவங்களுக்கு இருந்தா என்ன... இல்லாட்டி என்ன... நம்ம காசில மஞ்சக் குளிச்சு இப்படி மானங்கெட்ட வேலை செய்யிற இவங்களைப்
பாக்க நாயா அலையிறமே நமக்குத்தான் சூடும் இல்லை சுரணையும் இல்லை"ன்னு என் கன்னத்தில சப்புன்னு ஒரு அப்பு அப்பினான்.
அந்த வலி கொஞ்ச நேரத்தில் மாறிப் போச்சு. அவன் சொன்ன விஷயம் எம் மனசில் ஏற்படுத்தின வலி இன்னும் ஆறலைங்க.
இதை படிச்ச பின்னாடி உங்களுக்கும் அந்த வலி இருந்தா சொல்லுங்க.....

No comments:
Post a Comment