இலங்கைத் தமிழர்களின் இன்னல்களைத் துடைக்க வக்கு இல்லாத கருணாநிக்கு உலகத்தமிழ் மாநாடு ஒரு கேடா...ன்னு சிலர் கேட்கிறாங்க.இலங்கை பிரச்சினையிலே கருணாநிதியாலே ஒரு நடவடிக்கையும் எடுக்க முடியலைங்கிறது உண்மைதாங்க
இப்பக்கூட இந்த உலகத் தமிழ் மாநாடு உலகத் தமிழ் மக்களின் அனுதாபத்தை பெறத்தான்னு சின்னப் பிள்ளைக்குக்கூட தெரியுமுங்க. ஆனா...கலைஞராலே ஏன் இலங்கைப் பிரச்சினையில் எதுவும் செய்ய முடியாமப் போச்சு.
கொஞ்சம் ஆழாமா பாருங்க. உண்மை தெரியும். இலங்கை பிரச்சினையில் ஏடாகூடமா கலைஞர் நடந்தா காங்கிரஸ் கட்சி என்ன செய்யும். கூட்டணிக்கட்சின்னு கூட பாக்காம திமுக ஆட்சிக்கு தில்லானா பாடிரும்.
இதைத்தானே எதிர்க்கட்சிகள் எதிர்பார்த்தன. உண்மையிலேயே ஜெயலலிதாவும் ராமதாசும் வைகோவும் இலங்கை தமிழ் மக்களைக் காப்பாத்தனுமுன்னா என்ன செஞ்சிருக்க வேண்டும்.
கலைஞர் இலங்கைத் தமிழர்களுக்கு குரல் கொடுக்கட்டும். நாங்க எல்லாரும் அவரு பின்னாடி நிக்கிறோம். திமுக ஆட்சியை காங்கிரஸ் கலைக்கட்டும். நாங்க யாரும் தேர்தலில் போட்டி போட மாட்டோம். ஒரு வேளை ஆதரவை மட்டும் வாபஸ் வாங்கினாங்கன்னா...தவணை முடிகிறவரை நாங்க ஆதரவு கொடுக்கிறோம்ன்னு ஒட்டு மொத்தமா சொல்லி இருக்கணுமில்லையா....அப்படிச் சொன்னாங்களா.....இல்லையே...
அண்ணன் எப்ப சாவான் திண்ணை எப்ப காலியாகுமுன்னுதானே எல்லா கட்சிக்காரங்களும் நினைச்சாங்க. இப்படி இருக்கும்போது அரசியலில பழம் தின்னு கொட்டை போட்ட கலைஞர் எப்படிங்க சிங்கத்தின் வாய்க்குள்ள தலையைக் கொடுப்பாரு.
இன்னொரு விஷயத்தையும் நீங்க கவனமா சிந்திச்சு பார்க்கணும். விடுதலைப்புலிகளை ஒழிக்கணுமுன்னு கங்கணம் கட்டிக்கிட்டு இருந்தவங்க ஜெயலலிதா. விடுதலைப்புலிகளின் தோல்விக்கு ஜெயலலிதாவும் ஒரு காரணமுன்னா அதுல் தப்பு இல்லைங்க.
அப்படிப்பட்ட ஜெயலலிதாகூட ராமதாசும் வைகோவும் இருந்துக்கிட்டு குய்யோ முறையோன்னு கத்தினா ஜனங்க எப்படி நம்புவாங்க. இன்னொரு விஷயமுங்க... இலங்கை அதிபர் ராஜபக்சே ஐநா சபைக்கே அல்வா கொடுத்துக்கிட்டு இருக்கிறாரு. இதுல கலைஞருக்கு காராசேவு கொடுக்க எவ்வளவு நேரமுங்க ஆகும். உலகத் தமிழ் மாநாட்டை இவங்க எதுத்தா அதனால நட்டம் கலைஞருக்கு இல்லைங்க. இவங்களுக்குத்தான். நான் கலைஞருக்கு வக்காலாத்து வாங்கலைங்க. நான் குறிப்பிட்டு இருக்கிறதை கூட்டிக் கழிச்சுப் பாருங்க. கணக்கு சரியா வரும். தப்பா இருந்தா சுட்டிக் காட்டுங்க. ஏத்துக்கிறேன்.

No comments:
Post a Comment