எனக்கு கவிதையும் கொஞ்சம் வரும். அதுவும் சமுதாயம் சம்பந்தப்பட்டதா இருக்கணும்கிறது என் ஆசை. காதல் கத்திரிக் காய்ன்னு சமுதாயம் சல்லாபத்தில மூழ்கி இருக்கும் போது இதை யாரு படிக்கப் போறாங்கங்கிற சிந்தனை இருக்கத்தான் செய்யுது. என்ன பண்ணுறது பேனாவை எடுத்தா இது மாதிரி கவிதைதானே வந்து தொலைக்குது. படிப்பவங்க படிச்சதோட மட்டும் நிறுத்திக்காமே விமர்சனங்கிற பேர்ல என்னை ஒரு பிடிபிடிங்க. சந்தோஷமா இருக்கும். என்ன சரிங்களா.....
அலையாழி கோபத்தில் அதிரடிதான் நடத்தினால்
அவனியே அழிந்து போகும்
அனல்கூடி நெருப்பாகி அதிரடிதான் நடத்தினால்
அகிலமே அவிந்து போகும்
நிலையாக நம்மினந்தான் நிமிர்ந்தாலே நெருப்போடு
நெடுங்கடலும் பயந்து நிற்கும்
நீருக்கு தவளையாய் நிலத்துக்கு எலியாகும்
நிலைமைதான் மாற வேண்டும்
தலையாக எல்லாரும் தனியாக செயல்பட்டால்
தளராதோ நமது ஆற்றல்
தகிக்கின்ற மக்களை தடம்மாற வைக்குமே
தமிழர்கள் இணைவ தெப்போ
தெளிவான சிந்தையுடன் திடமாக நின்றாலே
தேடிவரும் வெற்றி தானே
தீராத தீவினைகள் தீர்க்கின்ற தெய்வமே
தீப்பாஞ் சம்மாள் தாயே!
Wednesday, September 23, 2009
Subscribe to:
Post Comments (Atom)
கவிதை அருமை
ReplyDelete