Monday, September 28, 2009

பணத்தை உறிஞ்சுங்க...பண்பாட்டை உறிஞ்சாதீங்க

என்னோட நண்பன் ஒருத்தன் நடிகர் கமலஹாசனைப் பத்தி காரசாரமா ஒரு கருத்தைச் சொன்னான். அது தேவையில்லாத விஷயமா இருந்தாலும் அதில் இருந்த உண்மை கொஞ்சம் மனசுக்கு நெருடலா இருந்துச்சு. அதனால அவன் சொன்னதை அப்படியே உங்க பார்வைக்கு வைக்கிறேங்க.


கமலஹாசன் சமீபத்தில ஒரு அருமையான கருத்தைச் சொல்லி இருக்காருங்க. அது மட்டும் எனக்கு ரொம்பப் பிடிச்சு இருக்குங்க. வாழ்க்கையில நடக்கிறதை இயல்பா நடிக்கணும். ஆனா, இந்த தமிழ ஜனங்களுக்கு அது புரிய மாட்டங்குதுன்னு ரொம்ப வருத்தப்பட்டிருக்கிறார்.





குளியல் அறையிலே எப்படிக் குளிக்கிறமோ அப்படியே காண்பிக்க முடியுங்களா. முதலிரவுக் காட்சி கூடத்தான் எல்லா குடும்பங்கள்லயும் நடக்குது. அதை இயல்பா சொல்றேன்னு அப்படியே எடுத்துக் காட்ட முடியுமா...சினிமா நடிகனை கடவுளா பாக்கிற பாமர மக்கள் வசிக்கிற பூமிங்க தமிழ் நாடு. நீங்க தாவித் தாவி அடிக்கிறதையும் கூவிக் கூவி உதைக்கிறதையும் அப்படியே உண்மைன்னு நம்பி வச்ச கண்ணு வாங்கமா பாக்கிற அப்பாவி ஜனங்கள்கிட்ட மிச்சமிருக்கிறது நம்மோட மண்ணின் பண்பாடு மட்டும்தான்.

சினிமா நடிப்பை நம்பி 80 சதவித மக்கள் சீரழிஞ்சுக்கிட்டு இருக்கிறாங்க.
நீங்க என்ன பண்ணினாலும் எத்தனை மனைவி கட்டினாலும் எத்தனை பிள்ளைங்க பெத்தாலும் அது பரம்பரையா பாமர மக்களின் பணத்தை உறிஞ்சத்தான் போகிறது. பணத்தை மட்டும் உறிஞ்சுங்க. பண்பாட்டை உறிஞ்சிறாதீங்க. நீங்க எப்படி வேண்டுமானாலும் இருந்து தொலைங்க. உங்களை மாதிரி மக்களை மாத்திராதீங்க. இது தாங்க அவன் சொன்னது. இதுல உங்களுக்கு ஏதேச்சும் மறுப்பு இருந்தா என் நண்பனுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கிறேங்க. ஏன்னா நானும் தமிழன் தானுங்களே.

No comments:

Post a Comment