மேகநதி மீதினிலே மென்காற்று நீந்திவர
மின்னலொடு மழையாய் வீழும்
மேலெழும்பும் வெய்யோனால் மேருமலை பனியுருகி
மீன்துள்ளும் ஆறாய் நீளும்
மோகமொடு நந்தவனம் மொய்க்கின்ற தேனீக்கள்
முயற்சியொரு தேன்கூ டாகும்
முகமலர்ந்த சிப்பிக்குள் முந்திவிழும் நீர்த்துளிதான்
முறுவலிக்கும் முத்தாய் மாறும்
சோகமென்ன செய்துவிடும் தூக்கியெறி துரத்திமிதி
துன்பங்கள் விலகி ஓடும்
துவளாத மனத்தோடு துடிக்கின்ற தோள்சேர்ந்தால்
துயரங்கள் தூள்தூ ளாகும்
பாகமொரு உடல்கொண்ட பார்வதியின் அண்ணனவன்
படையாக நிற்கும் திருவே
பணிவோர்க்கும் எளியோர்க்கும் பரிவோடு அருள்கின்ற
பதினெட்டாம் படிக்க ருப்பே
Sunday, September 27, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment