Tuesday, September 29, 2009

மருத்துவரை அடிக்கலாமா?

கடலூரில் ஒரு சம்பவம். அரசாங்க மருத்துவமனைக்கு வைத்தியம் பாக்க வந்தவங்க அங்கிருந்த மருத்துவர் கன்னத்திலே ஒரு அப்பு அப்பிட்டு போயிட்டாங்க. இதனால அந்த மருத்துவமனை மருத்துவர்கள் எல்லாம் வேலை நிறுத்தம்.


ஒரு மருத்துவரை அடிப்பது மாபெரும் தப்புங்க. மருத்துவர் ஆண்டவனுக்கு அடுத்த இடத்தில இருப்பவருங்க. ஆனா, அவரையே அடிக்கிற நிலைமைன்னு அந்த மருத்துவர் என்ன பண்ணியிருப்பாரு. போக்கிரி படத்தை மனசுல போட்டு பாருங்க. புரியும்.

படிப்பறிவு இல்லாத அப்பாவி ஜனங்களுக்கு பக்குவம் ரொம்ப இருக்காதுங்க. தெய்வமா நினைக்கிற ஒருத்தர் எமனா மாறினாருன்னா ஆத்திரத்தில அடிதடி வரைக்கும் இறங்கிடுறாங்க.

வேலை நிறுத்தம் செய்யுற மருத்துவர்களே கொஞ்சம் எண்ணிப் பாருங்க. உங்களுக்கும் ஒரு தனிப்பட்ட மனிதருக்கும் பிரச்சினை. இப்ப வேலை நிறுத்தத்தாலே எத்தனை பேரோட வயித்தெறிச்சலையும் கோபத்தையும் கொட்டிக்கப் போறீங்க. நீங்க சம்பளம் வாங்கிறதே பொது மக்களோட வரிப்பணத்திலாங்கிறத மறந்திடாதீங்க.

மருத்துவர்கள் எல்லாம் மனச்சாட்சியோட நடந்துக்கிட்டாங்கன்னா...ஏமை பாழைங்க உங்களை இதயத்தில கோவில் கட்டி கும்பிடுவாங்க. அப்படி மனச்சாட்சியோட நடக்கிறீங்களான்னு ஒரு தரம் நெஞ்சில கையை வச்சு பாருங்க.

இதுமாதிரிதான் ஏர் இந்தியா விமான ஓட்டுனருங்க வேலை நிறுத்தமும். இதில் பாதிக்கப்படுறது யாரு. வெளி நாட்டுக்கு சுத்திப் பாக்க போறங்களப் பத்தி பிரச்சினை இல்லைங்க. இன்னைக்கு இல்லாட்டி நாளைக்கு போயிருவாங்க.

வாயைக் கட்டி வயித்தக் கட்டி வட்டிக்கு வாங்கி கொடுத்த பணத்தில வெளிநாட்டுக்கு வேலைக்கு போறவங்களோட விசா முடிஞ்சு போச்சுன்னா என்ன ஆகுமுங்க. உங்க போராட்டத்தில நியாயம் இருக்கலாம். அது பொது மக்களப் பாதிக்காத வண்ணம் இருந்தா நல்லா இருக்குமுங்க.

யாரு போராட்டம் நடத்தினாலும் பொது மக்களை மையமா வச்சு நடத்துறாங்க. ஆனா, பொது மக்கள் யாரை மையமா வச்சு போராட்டம் நடத்துவாங்க. அது தெரியாததாலதான் இன்னமும் இளித்தவாயர்களா இருக்காங்க. நான் எழுதி இருக்கிறதுல்ல தப்பு இருந்தா என்னை மன்னிச்சுடுங்க.

No comments:

Post a Comment