Tuesday, October 6, 2009

எதுக்கு இம்புட்டு கோபம் சரத்குமார் அண்ணாச்சி....?

சரத்குமார் அண்ணாச்சி புவனேஸ்வரி வாக்குமூலத்தைக் கேட்டு பொங்கி எழுந்துட்டீங்களே... அடுத்து நீங்க பாட்டுக்கு சகட்டுமேனிக்கு பத்திரிகைக்காரங்களுக்கு பஞ்ச் கொடுத்திருக்கிறீங்க.


அதெல்லாம் சரிதாங்க அண்ணாச்சி.... நாங்கெல்லாம் ஒரு குடும்பமுன்னு ஒரு பெரிய கண்டுபிடிப்பு அணுகுண்டை வெடிச்சிருக்கீங்க. அண்ணாச்சி.... ஒரு குடும்பத்தில பிள்ளை தப்பு பண்ணினா...குடும்பத்தலைவர் என்ன பண்ணுவார்.




பிள்ளையைப் பக்கத்தில கூப்பிட்டு "இங்க பாரப்பா... தலைமுறை தலைமுறையா தலை நிமிர்ந்து வாழ்ந்த குடும்பம்.. நீ பாட்டுக்கு சந்து முனையில சிந்து பாடி குடும்பத்தை சந்தியில நிறுத்திடாதே... நீ ஒருத்தன் செய்யுற தப்பாலே நம்ம குடும்பமே தலைகுனிஞ்சு நிக்குது"ன்னு சொல்வார்.


நெஞ்சில கையை வச்சு சொல்லுங்க அண்ணாச்சி.. நீங்க எப்பவாவது அப்படி சொல்லி இருக்கிறீங்களா...

சினிமாவுல இருப்பவங்களுக்கு காசு மேலே காசு கொட்டுது. அதனாலதான் கிழக்கு கடற்கரை சாலையையே சினிமா பட்டாளம் நாறடிச்சுக்கிட்டு இருக்குது. இதை நான் சொல்லலை சாமி. காலங்காலமா வருகிற பத்திரிகை தகவல்தான் சொல்லுது. இதைத் தடுக்க நடவடிக்கை எடுத்திருக்கீகலா அப்பு.

பத்திரிகை மேல பாய்ஞ்சு பிறாண்டி இருக்கீகலே.. இந்த பத்திரிகைகள்தான் உங்கள வெளிச்சத்துக்கு கொண்டு வந்து வெள்ளிக்காசுகளில குளிக்க வச்சுச்சு. ஆதாயமுன்னா ஆ....ன்னு வாயைப் பிளக்கிறது... பாதகமுன்னு உர்....ன்னு பல்லைக் காட்டுறதா..... இது என்ன பழக்கமுங்க அண்ணாச்சி.

சரி உங்ககிட்ட ஒரே ஒரு கேள்வி.... இந்தப் பொண்ணு புவனேஸ்வரி ஏற்கனவே இரவு சேவை செஞ்சு மாட்டிக்கிட்டது உங்களுக்கு தெரியும்தானே அண்ணாச்சி.

அதை கூப்பிட்டு " அம்மா... நாமெல்லாம் ஒரே குடும்பம்... நீ தப்பு பண்ணினா அது நம்ம திரைக்குடும்பத்தை பாதிக்கும்...ன்னு புத்தி சொல்லி புதுப்பாதை காட்டி இருக்கலாமுல்ல. நீங்க என்ன அலும்பு பண்ணினாலும் சொரணை இல்லாத தமிழ்க்கூட்டம் உங்க காலைக் கவ்விக்கிட்டுத்தானே கிடக்கப்போகுது. பின்ன எதுக்கு அண்ணாச்சி உங்களுக்கு இம்புட்டு கோபம்.

கிராமத்து பக்கமெல்லாம் ஒருத்தர் நியாயம் பேசினா... அவரு ஓரளவுக்கு வாழ்க்கையில சரியா இருக்கணும் அண்ணாச்சி. இல்லையின்னா "உனக்கு இதைப்பத்தி பேச என்ன யோக்கியதை இருக்கு"ன்னு முகத்தில காரி துப்பிருவாங்க அண்ணாச்சி.




இந்த யோக்கியதை எத்தனை பேருக்கு இருக்குன்னு கணக்கெடுத்துப்புட்டு அப்புறமா பத்திரிகைகாரங்க மேலே பாய்ங்க அண்ணாச்சி. காசு இருந்தா என்ன கர்மத்தை வேண்டுமானாலும் செய்யலாம்.... பேசலாம்...கிற காலத்தில உங்களை மாதிரி ஆளுங்களை பகைச்சுக்கிறது பாம்புக்கிட்ட போய் பல்லைக் காட்டச்சொன்ன கதையா இல்ல போயிரும். சத்தம் போடுறதை விட்டுப்புட்டு உங்க பக்கத்தைக் கொஞ்சம் சுத்தப்படுத்துங்க அண்ணாச்சி.
ஷகிலாவோட கில்பான்சி படங்கள் நிறைய இருக்குங்க. அதை போட மனசு வரலைங்க அண்ணாச்சி...

No comments:

Post a Comment