Tuesday, October 27, 2009

வாய் கிழியப் பேசி என்ன பிரயோசனம் வைகோ அண்ணாச்சி

நம்ம வைகோ அண்ணாச்சி வாயை வச்சுக்கிட்டு சும்மா இருக்க மாட்டார் போலிருக்கு. முள் வேலி தடுப்பு முகாமில் இருந்து தமிழர்களை விடுவித்தால் மட்டும் போதாது. அவர்களுக்கு சொந்த மண்ணில் சுதந்திரம் வேண்டும் என்று இங்கு வாய் கிழிய கத்துறாருங்க.





அண்ணாச்சி.... இப்பத்தான் அரி...ஓம்முன்னு தமிழர்கள் அவங்க அவங்க இடத்துக்கு திரும்ப ஆரம்பிச்சு இருக்காங்க. நீங்க ஏதாவது ஏடாகூடாம கத்தி 'தனா பிறக்கிற பிள்ளையை சிஷேரியன்' பண்ண வச்சிடாதீங்க.

முந்தி இப்படி கத்திக் கத்தித்தான் விடுதலைப் புலிகளை வேரோடு சாச்சிட்டீங்க. இலங்கை அரசாங்கமே புலிகளைப் பாத்து பயந்துக்கிட்டு இருந்துச்சு. நீங்க அதில குளிர் காய நினைச்சீங்க.

அதனால தனி ஈழம்... தனி ஈழம்...ன்னு கூடிக்கூடி கும்மியடிச்சீங்க. விடுதலைப்புலிகளை அழிக்க வெளிநாட்டில போயி உதவி கேட்கிறதா...ன்னு வெட்கப்பட்டுக்கிட்டு இருந்த ராஜபக்சே வேற வழியில்லாம முக்காட விலக்கிட்டு ஆயுதப் பிச்சை எடுக்க ஆரம்பிச்சாரு.

அவரை உசுப்பேத்தி விட்டு இந்தியா, சீனா, பாகிஸ்தான்னு எல்லா நாட்டு தொடர்பையும் உண்டாக்கி விடுதலைப்புலிகளோடு மோத வச்சது உங்களைப்போல ஆளுங்க.

உணர்ச்சிபூர்வமா பாக்காம.. அறிவுப்பூர்வமா பாருங்க... இதில இருக்கிற உண்மை தெரியுமுங்க. தமிழ் நாட்டில புலிகளோட நடமாட்டமே இல்லாம செஞ்சு பலவீனப்படுத்தியது ஜெயலலிதாங்க. சோனியா காந்தி சும்மா இருந்தாலும் இந்த அம்மா பண்ணின அலும்பு கொஞ்ச நஞ்சமில்லைங்க.

அந்த அம்மா முந்தானைக்குள்ள இருந்துக்கிட்டு வைகோ அண்ணாச்சி பேசுறது...'பீ' தொட்டிக்குள்ள உட்காந்துக்கிட்டு 'பிரியாணி' வித்த கதைதாங்க.

அண்ணாச்சி... நீங்க இடத்தை மாத்தாத வரைக்கும்.. நடக்கிற தடத்தை மாத்தா வரைக்கும் நீங்க வாய் கிழிய பேசுற வசனங்க எல்லாம் செத்தவன் வாய்க்குள்ள சீனிய வச்சு திணிச்ச் மாதிரிதாங்கிற கொஞ்சம் நினைச்சுப்பாருங்க அண்ணாச்சி...

No comments:

Post a Comment