வீராப்பா பேசி விட்டு வீட்டை விட்டு போன மாப்பிள்ளை தட்டுக்கெட்டு திரும்பி வந்தால் கேலிக்காரர்கள் நக்கலாக பேசும் நையாண்டி வார்த்தைங்க இது.
இதுதான் இப்ப ராமதாசு ஐயாவின் கதை. இவரு எதுக்குங்க திமுகவை விட்டுப் போனாரு. கலைஞர் இவரை என்ன மரியாதைக் குறைச்சலாகவா நடத்தினாரு. 'திமிரு எடுத்த கொக்கு கெழுத்தியை பிடிச்சு முழுங்கின' கதையா வெளிக்கிளம்பி விட்டு இப்ப புதுசு புதுசா கதை விட்டுக்கிட்டு இருக்கிறாரு.
'மச்சான்கிட்டயும் கொழுந்தன் கிட்டயேயும் மாத்தி மாத்தி போயி காரியம் பார்த்த மாரியம்மா கடைசியில நடுத்தெருவில நின்னு நாறுனாளாம்' இந்தக் கதையாக திருதிருன்னு முழிச்சிக்கிட்டு நிக்கிறாரு நம்ம மருத்துவரு.
கலைஞர் நல்லவரா.... கெட்டவரா... என்பதில்லைங்க பிரச்சினை. மருத்துவருக்கும் வைகோவுக்கும் மரியாதை கொடுத்து வச்சிருந்தாருங்கிறதை மறுக்க முடியுமா... ஆனா, அவங்க கலைஞருக்கு செஞ்ச துரோகம் எந்தக் காலத்திலையும் தூங்காதுங்க.
செஞ்ச தப்பை உணர்ந்தா... மக்கள் போனா போகுதுன்னு மறந்திடுவாங்க. அதை விட்டுட்டு ஒடம்பு முழுதும் சாக்கடையை பூசிக்கிட்டு ஒன்னுமே நடக்காதமாதிரி பேசினா....தெருத்தெருவா போனாலும் மருத்துவரை திரும்பிப் பார்க்கக்கூட ஆளு இருக்காதுங்க.
மருத்துவர் ஐயா... இன்னிக்குத்தான் ஜெயலலிதாவோட குணம் தெரிஞ்ச மாதிரி டகால்டி வேலை காட்டாம துரோகத்துக்கு மருந்து போடப் பாருங்க. வரும்காலத்திலேயாவது வைப்பாட்டியா இருக்காம... பொண்டாட்டியா இருக்கப் பாருங்க.
No comments:
Post a Comment