Thursday, October 22, 2009

திக்கு... திக்கு... திருமாவளவன்

"என்ன பழ.கருப்பையா அண்ணே... என்னையப் பத்தி தாறுமாறா எழுதி இருக்கீங்க. உங்களுக்கு என்ன கிறுக்கா பிடிச்சிருக்கு. தமிழ் நாட்டில தான் மேடை போட்டு படிச்சதையும் புடிச்சதையும் வாந்தி எடுக்க முடியும்.



இங்கதான் நான் என்ன சொன்னாலும் கேக்க இளிச்சவாயனுங்க இருக்காணுங்க. இலங்கையில வாயத் தொறந்தா கடவாய்ப் பல்லை கழட்டி குப்பியில் போட்டுல்ல கொடுத்து விட்டுருவானுங்க.

ராஜபக்சே என்ன பெரிசா சொல்லிட்டாரு... பிரபாகரனோட இருந்தா... உங்களையும் சுட்டு இருப்போம்ன்னு சொன்னாரு. இதை ஏன் நீங்க துப்பாக்கின்னு நினைக்கிறீங்க. எங்க சுரணையில்லா தம்பிங்க மாதிரி தோசை சுடுறதுன்னு நினைங்க.

நான் வீரமா ராஜபக்சேகிட்ட பேசலையாம். அந்த ஆளு முகத்தைப் பாத்ததுமே எனக்கு பேண்டுக்கு கீழ ஈரமானது உங்களுக்கு எங்கே தெரியப்போகுது. அதுக்குமேல விட்டா அடியிலே சுடுவாங்கன்னுட்டுத்தானே ரூம்ல வந்து சுருக்குப் பையைத் தொறந்தேன்.

இலங்கையில உட்காந்து இருக்கும்போது என்னோ முகத்தை நீங்க பாத்திங்களா அண்ணே... அண்ணாமலை படத்தில ரஜினிய அம்மணமா பாத்த குஷ்பு மாதிரி நானே அரண்டு போயி இருந்தேன்... நீங்க வேற....எரிச்சலை கிளப்பாதீங்கண்ணே..

நாம எங்காவது அப்பு வாங்கினாலோ அறை வாங்கினாலோ.... அதை காட்டிக்கூடாதுண்ணே... உடனே அதை மாத்துற மாதிரி டகால்டி வேலையில இறங்கிடணும்.


இப்ப பாருங்க. தில்லை நடராஜர் கோவிலில நந்தனார் நுழைஞ்ச பாதையைத் தொறக்கணுமுன்னு போராட்டத்தில இறங்கி இருக்கோம். இதுக்கு ராஜபக்சேனால ஒன்னும் கிழிக்க முடியாது.

என்னோட தம்பிங்க எல்லாம் "இப்ப என்ன செய்யுவே... இப்ப என்ன செய்யுவே..."ன்னு ராஜபக்சேயை பழிப்புக் காட்டுறது புளிப்பு மிட்டாய் சாப்பிடுற உங்களுக்கு எங்க தெரியப் போகிறது.

முள் வேலிக்குள்ள இருக்கிற தமிழர்களைப் பத்தி நான் பேசலையாம். எப்படியாவது நான் ராஜபக்சேக்கிட்ட எத்து வாங்கணுமுன்னு ரொம்ப பேர் நினைச்சாங்க. அதில நீங்க ஒருத்தருன்னு எனக்கு நல்லா புரிஞ்சு போச்சு.

முள் வேலி பிரச்சினை இப்ப உள்ளது. நந்தனார் பிரச்சினை பல நூறு வருசத்துக்கு முன்னது. எதை முதல்ல முடிக்கணும். இதுகூட தெரியாத முட்டாத்தனமான ஆளா இருக்கிறீங்களே.

இப்ப பாருங்க. அங்க தமிழர்களை கொன்ன பாவத்தைக் கழுவ தமிழ்நாட்டுக் கோவிலுக்கு இலங்கை மந்திரிங்க எல்லாம் வர்றாங்க. அங்க போயி போராட்டம் அது..இதுன்னு பம்மாத்து வேலை காட்டினா வேட்டிக்கு அடியில இல்ல வெடி வைப்பாங்க.




இங்க நந்தனாரும் கேக்க மாட்டாரு... தில்லை நடராஜரும் கேக்க மாட்டாரு... கலைஞருக்கும் குடைச்சல் கொடுத்த மாதிரி இருக்கும். சிரிச்சிக்கிட்டே என்னோட வாய்க்குள்ள குச்சியை விட்டு சிக்கெடுத்த ராஜபக்சே அண்ணாச்சிக்கு சவால் விட்ட மாதிரி இருக்கும்.

இப்ப புரியுதா இந்த திருமாவளவன் யாரு"ன்னு

திருமாவளவனைப் பத்தி பழ.கருப்பையா சொன்னதா வந்த செய்தியை பத்திரிகையில படிச்சேங்க. இதுக்கு திருமாவளவன் உண்மையிலேயே பதில் சொல்லி இருந்தா இப்படித்தாங்க இருக்கும்.

No comments:

Post a Comment