உலகத்தில் எத்தனையோ தர்மங்கள் இருக்குங்க. அதில இரண்டு தர்மங்கள் மிக மிக முக்கியமானவைங்க. ஒன்னும் யுத்த தர்மமுங்க. இன்னொன்னு பத்திரிகை தர்மமுங்க.
இதில எது தடம்புரண்டாலும் மக்களுக்கு நல்லது இல்லைங்க. விபச்சார வழக்கில மாட்டிக்கிட்ட புவனேஸ்வரி சொன்னதா ஒரு பத்திரிகை வெளியிட்ட செய்தி திரை உலகத்தையே திக்கு முக்காட வச்சிருச்சுங்க.
ஆனா, அது தவறான செய்தின்னு போலீசும் புவனேஸ்வரியும் மறுத்திருக்காங்க. இது குறிச்சு நடவடிக்கை எடுக்கணுமுன்னு திரைப் பட்டாளமே முதல்வர் வீட்டு கதவை தட்டிருச்சுங்க.
இப்ப அந்த செய்தியை வெளியிட்ட பத்திரிகை ஆசிரியர் சிறைக்குள் இருக்காருங்க. ஒரு செய்தி வெளியிடுவதற்கு முன்னர் எந்த அளவுக்கு உண்மையின்னு ஆராய்ந்து பார்க்க வேண்டியது அவசியமுங்க.
ஒரு பேனா தலைகுனியும்போது உண்மை தலை நிமிரணுமுங்க. தவறு செய்யாதவங்க தலைகுனியக்கூடாதுங்க. அந்த வகையில சட்டம் கடமையை செஞ்சுருக்குங்க.
அதே நேரத்தில் இதுக்கு கொதிச்சு எழுந்த பெரிய நடிகர்கள் எல்லாம் ஒரு சில விஷயங்களில அக்கறையா இருந்தா நல்லதுங்கறது என்னோட அபிப்பிராயமுங்க. தினமலருக்கு எதிரா போராட்டமுன்னு சொல்லி ஆளாளுக்கு நடிகர் நடிகைகள் ஆபாச வார்த்தைகளால் அர்ச்சனை பண்ணியிருக்காங்க. இது எந்த வகையில நியாயமுன்னு தெரியலைங்க.
இப்ப பத்திரிகைகாரங்களும் ஒன்னா சேர்ந்திருக்காங்க. அவங்க கூட்டம் போட்டு போராட்டமுன்னு ஆரம்பிச்சா என்ன ஆகுமுங்க. இதெல்லாம் நாட்டுக்கு நல்லது இல்லைங்க. சின்னக் கலைவாணர்னு பேர வச்சுக்கிட்டு விவேக் ரொம்ப சின்னத்தனமா பேசி இருக்கிறாராமுங்க. பத்திரிகைகாரங்க வீட்டு பொம்பிளைங்க எல்லாம் விளக்கமாத்தைத் தூக்கிட்டு வந்தா சின்னக் கலைவாணர் நெஞ்சு ( அவரோட பாஷையில் குஞ்சு) பதற ஓட வேண்டியது தாங்க.
திரையுலகத்தில தப்பே நடக்கலைன்னு சொன்னா இமய மலையை இடுப்பு வேட்டிக்குள்ள மறைச்ச கதையா போயிடுமுங்க. எங்காவது தப்பு நடக்குதுன்னு தெரிஞ்சா அதை அவங்களைக் கூப்பிட்டு உடனே எச்சரிக்கை பண்ணணுமுங்க.
நடிகர் சங்கத்தில இருந்து அவங்கள நீக்கி படங்களில நடிக்க முடியாதபடி பார்த்துக்கணுமுங்க. இது தனிமனித உரிமையில தலையிடுற வேலையின்னு நடிகர் சங்கம் ஒதுங்கக் கூடாதுங்க.
இன்னொரு முக்கியமான காரியத்தை நடிகர் சங்கம் கண்டிப்பா செய்யணுமுங்க. பொது நிகழ்ச்சிகளில கலந்துக்கிற நடிகைகள் ஓரளவு ஆபாசமில்லா உடை உடுத்தி போகணுமுன்னு ஒரு தீர்மானத்தை கொண்டு வரணுமுங்க. சில நடிகைகள் போட்டுக்கிட்டு வர்ற உடையப் பாத்தா நம்ம சிறுசுகளுக்கும் பெருசுகளுக்கும் சூடு 200 டிகிரியைத் தாண்டி எகிறிடுதுங்க.
எந்தப் பொருளை எடுத்தாலும் நடிகைங்க பேரைச் சொல்லித்தான் விக்கிறாங்க. குஷ்பு சேலை, அசின் சேலை, நமீதா சுடிதார்ன்னு கடைக்கு கடை கூவிக்கூவி விக்கிறாங்க. அதை நம்ம பொண்ணுங்க போட்டி போட்டுக்கிட்டு வாங்குறாங்க.
ஒரு காலத்தில குஷ்புவுக்கு கோவில் கட்டினாங்க. குஷ்பு இட்லின்னு கூட வித்தாங்க. இப்படி நம்ம பெண்களுக்கு முன்னுதாரணமா இருக்கும் நடிகைங்க அக வாழ்க்கையில எப்படி இருந்தாலும் புற வாழ்க்கையில் ஒரு கட்டுக்கோப்பைக் கடைப்பிடிக்கிறது நல்லதுங்க.
விஜயகாந்த், சரத்குமார் போன்ற தைரியமான நடிகருங்க இந்த ஒழுங்கை கொண்டு வந்துட்டாங்கன்னா தமிழ் பண்பாடு நிலைக்கணுமுன்னு நினைக்கிற அத்தனை பேரும் உங்களைக் கையெடுத்துக் கும்பிடுவாங்க.
கடைசியா ஒன்னு கேக்கிறேங்க... நீங்க நடிக நடிகைங்கிறதை மறந்திட்டு ஒரு சாதாரண மனுசனா இருந்து நீங்க நடிச்ச படங்களைப் பாருங்க. எவ்வளவு கேவலமா இருக்குன்னு அப்ப தெரியும். நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானான்னு தமிழ் சமுதாயம் கேள்வி கேட்கிறமாதிரி நடிகர் நடிகைகள் நடந்துக்காக இருக்கிறது நல்லதுஙக.
சரி... குளவிக்கூட்டை கலைச்சு விட்டுட்டுங்க. குளவி கொடுக்கை நீங்க புடுங்கப் போறீங்களா.... குளவி கொடுக்கு உங்களைப் பதம் பார்க்கப் போகுதா என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்கணுமுங்க.
நான் 'என் வழி' யில் திருடிய படங்கள் இவை...நன்றி
Friday, October 9, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment