Thursday, October 8, 2009

படித்தவனை விட நடித்தவனுக்குத்தான் தமிழ்நாட்டில் மரியாதை அதிகம்

போன மாதக் குமுதம் இதழில் ஒரு செய்தி படிச்சேங்க. கந்தசாமி படத்தைப் பத்தி எழுத்தாளர் ஞாநி ஏதோ கருத்து சொல்லி இருக்கிறாருன்னு நினைக்கிறேங்க.


அதுக்கு அந்த படத்தோட இயக்குனர் சுசி கணேசன் கண்ட மேனிக்கு ஒரு பதில் சொல்லி இருக்காருங்க. கந்தசாமி படம் ஒரு வாரத்திலேயே பல கோடி ரூபாய்க்கு விற்பனையாகி விட்டதாம். அந்தப் படத்துக்கு ஈடு இணையே இல்லையாம்.தரத்தில புடம் போட்ட தங்கமாம். அதனால அது பத்தி ஞானி செஞ்ச விமர்சனத்தை ஒரு குப்பைன்னு சொல்லி இருக்காருங்க. தெரியாமத்தான் கேட்கிறேன்...





வீட்டு வேலைக்கு போற ஒரு குடும்பப்பொண்ணு ஒரு நாளைக்கு நூறு ரூபாய் சம்பாதிக்கிறா.... ஆனா, விபச்சாரம் செய்ற ஒரு பொண்ணு ஒரு மணி நேரத்துக்கு 20000 ரூபாய் சம்பாதிக்கிறா... இதுக்காக அவளைத் தரமான பொண்ணுன்னு சொல்ல முடியுமா...

ஒரு நாளைக்கு 50 லட்ச ரூபாய்க்கு பால் விக்குது. ஆனா... 500 கோடி ரூபாய்க்கு மதுபானம் விக்கிது. அதுக்காக பாலை விட மதுபானம் எவ்வளவோ ஒசத்தின்னு சொல்ல முடியுமா....

ஒரு நாளைக்கு ஊதுபத்தி தமிழ்நாடு பூராம் எவ்வளவு விக்குதுன்னு தெரியாது. ஆனா... சிகரெட்டு 50 கோடிக்கு மேலே தாண்டும். இதை வச்சு சிகரெட்டுக்கு எவ்வளவு மரியாதை அப்படின்னு சொல்ல முடியுமா...

நான் தஞ்சாவூரில படிச்சிக்கிட்டு இருக்கும்போது பேருந்து நிலையத்துக்கிட்ட இருக்கும் ஒரு தியேட்டருக்கு சினிமா பாக்க போவேன். சாயங்கால காட்சிக்கு ஆளு இல்லாம காத்தாடும். ஆனா, பத்து மணி காட்சிக்கு கிழடு கெட்டைன்னு வித்தியாசம் இல்லாம கூட்டம் அலைமோதும்.





எதுக்கு தெரியுங்களா.. நம்ம மலையாளத்து நடிகை ஷகிலா அக்காவோட பிட் சும்மா ஐஞ்சு நிமிசம் ஓடும். அந்தக் காட்சி முடிஞ்ச உடனேயே எலிக்குஞ்சு பொந்தை விட்டு வெளிய வந்த மாதிரி ரொம்பப் பேரு கிளம்பி போயிருவாங்க.

அந்தக் காட்சியை ரொம்பப்பேரு விரும்புறாங்கன்னுட்டு தரத்தில் சிறந்ததுன்னு தம்பட்டம் அடிக்க முடியுமுங்களா.. எனக்கு ஒன்னு மட்டும் புரியலைங்க. ஒரு படத்தை பல கோடி ரூபாய்க்கு எடுத்து வெற்றிகரமா ஓட வைக்கிற ஒரு இயக்குனருக்கு இது மாதிரியான சாதாரண விஷயம்கூட மண்டைக்குள் உரைக்கலையேங்கிறதுதான்.

கந்தசாமி படத்திலகூட நம்ம ஸ்ரேயா கஷ்டப்பட்டுத்தானே துணி போட்டுக்கிட்டு இருக்காங்க. சென்சார்போர்டுன்னு ஒன்னு இல்லாட்டி அதையும் கழட்டி எறிஞ்சிட்டு கபடி ஆட்டம் ஆடிட மாட்டாங்க.




முதல்வர் கலைஞர் கருணாநிதி கலந்து கொண்ட நிகழ்ச்சியிலே முக்கால்வாசியைத் திறந்து காட்டியபடி இருந்தவங்க நம்ம ஸ்ரேயா...அதையும் பேப்பர்காரங்க படம்புடுச்சு போட்டாங்க. எங்க கிராமத்தில இருந்த ஒரு பெருசு அந்தப் படத்தை நக்கி நக்கியே பேப்பரைக் கிழிச்சிடுச்சு. இப்படி இருக்கும்போது படம் ஏங்க பல கோடிக்கு விக்காது.

படம் பல பேரைக் கவர்ந்திருக்கு... பல கோடியைச் சம்பாதித்து இருக்கு.... எல்லாரும் நல்ல லாபம் சம்பாதிச்சு இருக்கீங்க. உங்களுடைய உழைப்பை பாராட்டுறேங்க. அதுக்காக உலகத்திலேயே கந்தசாமி படம்தான் தரத்தில் உயர்ந்ததுன்னு சொல்லி உதார் காட்டாதீங்க.

பல துறைகளில பட்டப் படிப்பு முடிச்சு பேராசிரியர்களைவிட ஒரு படத்தில தலை காட்டினவனுக்கு தமிழ்நாட்டில மரியாதை ஜாஸ்திங்கிற எதார்த்த உண்மை தெரிஞ்சவங்க நான். அதனால ஞாநியை விட நீங்க பல மடங்கு பிரபலமானவருன்னு புரியுதுங்க.

அதுக்காக பண்பட்ட பத்திரிகையாளரான ஞாநி மாதிரி ஆளுங்களை அவதூறா பேசாதீங்க. அது அவரைப் பேசுனதா அர்த்தம் இல்லைங்க. அன்னைத் தமிழைப் பேசுனதா அர்த்தமுங்க.




அது சரி தமிழ்நாட்டுல எங்க தமிழ் இருக்கு. தொலைக்காட்சியிலும் திரைப்படங்களிலும் தொலைந்து போன 80 சதவிகித மக்கள் முழிச்சுக்காத வரைக்கும் உங்க காட்டுல மழைதாங்க. அதனால ஞாநியை என்ன கலைவாணியைக் கூட உங்க கால் செறுப்பாத்தானே நினைப்பீங்க.

2 comments:

  1. நல்ல ஒரைக்கிற மாதிரி சொன்னீங்க.

    ReplyDelete
  2. //எங்க கிராமத்தில இருந்த ஒரு பெருசு அந்தப் படத்தை நக்கி நக்கியே பேப்பரைக் கிழிச்சிடுச்சு. //
    hahahahaha....

    //பல துறைகளில பட்டப் படிப்பு முடிச்சு பேராசிரியர்களைவிட ஒரு படத்தில தலை காட்டினவனுக்கு தமிழ்நாட்டில மரியாதை ஜாஸ்தி//

    Well Said. Great!

    ReplyDelete